Thursday, December 31, 2009

Happy New Year


Happy new year to one an all! May 2010 bring the brightest in you!


Truth about Chetan Bhagat and Five Point Someone

I happened to watch 3 idiots with Sumana, yesterday evening. Too long and boring after interval. Heard that Aamir Khan has made few more millions!

I was searching on the story credit for Chetan Bhagat, for his novel Five point Someone ( FPS) and alas, in true Bollywood style they have stolen his story and given a, based on Novel by credit.... ( in the end after the light boy credit! )

A book, a film and the truth

It was a decent movie, with about 50 to 70 percent of story line hacked (!) from your FPS.

Some blogger is going to do a scene by scene coverage.

You have clearly mentioned that you are not after money/fame. I hope the true credit comes from One Night @ Call center and 3 Mistakes. You are a good writer, very obviously. I dont want to comment on 2 states as it reflects Ek Duje Ke Liye.

Obviously beyond interval, it is a mix masala of typical Bollywood style with unwanted sentiments! That baby birth scene might have been flicked from a super hero ( geek ) novel, may be?

This is how Bollywood works ( right? ) and I think, you might have been more happier @ Hong Kong or elsewhere.

***

OK this is the change from FPS and 3Idiots.

  1. IIT Delhi has become Imperial College of Engineering.
  2. Title characters names have changed, but in same plot line.
  3. The Ramalingam character is also well developed ( Chamatkar, Balathkar )
  4. The intimate scenes with heroine ( Dept Head's daughter )
  5. Switch over characters for degree, Javed Jaffri @ Simla
  6. Wangdu as a super scientist?
  7. Setup of Climax in Leh, Ladak
  8. Like Tamil movie Varusham 16, one of the friend gets a call in the beginning after 10 years

and many more.... but someone will definitely write the essence and scene by scene coverage, comparing both!

Sunday, December 27, 2009

சுமனாவும் நானும்

எங்கள் கல்யாண அனுபவம் விசித்ரமானது! சுமனா தான் அக்டோபர் முதல் வாரத்தில் கோவில் மண்டபத்தில் நான் கைபிடித்த பெண். எனக்கு கல்யாண விசயத்தில் மனதளவில் தையிரியம் வரவைத்து அடுத்த அடி எடுக்க உதவிய திவ்யா அவர்களுக்கு நன்றி.

இந்த மாத கடைசியில் அவருக்கு ஒரு செல்லகுட்டி வரபோகிறார்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்தமஸ் அன்று அவர்களை சென்று பார்த்தோம். ஒரு நாள் முன் வளைகாப்பு நடந்தது. அழைத்திருந்தார், வேலை காரணமாக செல்ல முடியவில்லை. அம்மா, அப்பா, தங்கை குடும்பம் என கோவை தமிழில் இன்றும் பேசும் குடும்பம்...

அவர் ப்ளாகில் வாழ்த்துக்கள் மற்றும் வளைகாப்பு என்ற போஸ்டில் எங்களை பற்றி எழுதியதால், நிறைய பேர் எனக்கு மெயில் / கமன்ட் போட்டார்கள்....

சில விட்டுப்போன விவரங்கள்...

என் கல்யாண நிகழ்வு பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்
கல்யாணம் கட்சேரி லன்ச் டேட்
மீண்டும் சுமனா

அக்டோபரில் கல்யாணம் முடித்த கையேடு சென்னை சென்று எல் 2 விசா வாங்கி சுமனாவோடு அமெரிக்கா சென்றேன். அங்கு சென்று எம்ப்லோய்மென்ட் கார்ட் வாங்க சிலை வேலைகள் ( பாஸின் தம்பி கம்பெனி ) முடித்துவிட்டு, அப்படியே எங்க நியூ யார்க் ப்ராஜக்ட் விஷயம் பார்த்துவிட்டு இந்திய வந்தேன். அதன் பிறகு இரண்டு முறை இந்தியா சென்று வந்தாகிவிட்டது. இன்னும் பத்து மாதங்கள் இங்கே வேலை இருக்கணும். சிலை சமயம் பெங்களூரு சென்று வர வேண்டும். சுமனாவிர்க்கு ஒரு வருடத்திற்கு மேல் இங்கு இருக்க வாய்ப்பு கிடைத்தால் நல்லது. எதற்கும் நான் அடுத்த அக்டோபர் எச். 1 விசா செய்துகொள்ள வேண்டும்! உதவி எதிர்பார்க்கிறேன்.

மேலும், இங்கு நன்றாக பனியில் ( ஸ்னோ ) அனுபவம் புதுமையாக உள்ளது. நியூ யார்க்கில் வேலை இருந்தாலும், சுமனா வேலையில் இருக்கும் பிரின்ஸ்டன் அருகில் தான் வீடு. ( மடாவன் ஏரியா ). டாக்சிக்கு அதிகம் செலவாகிறது.. சில சமயம் ரைடு கிடைக்கும்! தினமும் நியூ யார்க் ட்ரெயினில் சென்று வந்த வாழ்க்கை... அது ஒரு தனி கதை. நாங்கள் இருக்கும் ஏரியாவில், வாடகை குறைவு. இந்தியர்கள், இந்திய மற்றவர்களை பார்த்தால் முகம் திருப்பிக்கொண்டு செல்கிறார்கள்... இதுவரை பழகாத எந்த இந்தியரும் உதவி என்று ஒன்றும் செய்ததில்லை. அவர்களுக்கு என்ன பயமோ, அவர்கள் வேலையை இவர் எடுத்துக்கொண்டால்? அப்படியா? வெள்ளைத்தோல் தனி இனம், உதவி என்று வரும் போது!

இங்கு ( நியூ ஜெர்சி ) இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கவில்லை. ட்ரெயினிங் சில கிளாஸ்கள் சென்றோம். ஒரு மாதத்தில் லைசன்ஸ் எடுக்க வேண்டும்... இண்டர்நேசனல் பர்மிட்டோடு வாடகை கார் கொடுக்கிறார்கள். சுமனாவும் நானும் இங்கு பழகுகிறோம்... ஸ்னோவில் ஓட்ட தெரியாது... அதனால் ட்ரெயின் மற்றும் பஸ் மூலம் ஊர் சுற்ற வேண்டும். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், தம்பி டெக்சாஸ் பியான்சே உட்பட. ( அவர் நவம்பரில் இந்தியா சென்று தம்பியை பார்த்து வந்துள்ளார்... கே விசா வாங்கிக்கொண்டு, அம்மாவிற்கு விசிட்டர் விசாவோடு வாங்கி இங்கு வர முயற்சி எடுக்கிறாங்க. ஜூலையில் கல்யாணம் இருக்கும். ஆந்திராவில் இருந்து சொந்தங்கள் வர வேண்டுமாம்... )

அடுத்த வாரம் முழுதும் லீவு தான். பிட்ஸ்பர்க் கோவில் வரும் வழியில் அப்படியே வாஷிங்க்டன் டிசியில் சுமனாவின் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு திரும்ப எண்ணம்.

***

சிலை லட்சங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சிலரை அணுக எண்ணம். இல்லாவிட்டால், பெங்களூரு பிளாட்டிற்கு அட்வான்சாக பணம் கட்ட வேண்டும். வட்டியாவது குறையும். எப்படியும் பெங்களூரில் தான் செட்டில் ஆகும் எண்ணம்.

***

அவதார் இங்கே பார்த்தோம்! நல்ல டிஜிடல் 3 D படம்.

Saturday, December 26, 2009

மதம்

அவர்கள் வீட்டில் கிறிஸ்தமஸ் மரம்
குழந்தைகள் குதுகளிப்பு
கிடைத்தது பரிசுகள்
பெற்றோர் மனதில் சந்தோஷம்

இந்துத்வாவை வளர்ப்போம்
இந்தியாவை காப்பாற்றுவோம்
ராமருக்கு கோவில் எழுப்புவோம்
கிளம்புகிறார் அரசியல் அப்பா

Monday, December 14, 2009

காஸ்பல் ஆப் ஜான்

நல்ல பதிவு. இதை படியுங்கள்...

சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3 மா. வே. சிவகுமார் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை பற்றியது.

பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.

தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது... எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது!

அட்ஜஸ்ட் செய்து அனுசரித்து போகாமல் வாழ்க்கை கிடையாது.

அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?

அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!

***

காஸ்பல் ஆப் ஜான் - நான் படித்த பள்ளியில் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது... ( ஜான் 3:36 )

ஜான் சொல்லுகிறார் - ஜீசஸ் என்ற மாமனிதரை கடவுளின் மகனாக நினைத்து அவரிடம் வரம் கேளுங்கள். அந்த நம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிபோய் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற ஆயுதம் கையில் இருப்பது புலன்படும்.

Sunday, December 13, 2009

அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி?

அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி? சில பாயிண்டுகள் இங்கே, எங்கிருந்தோ சுட்டது.

1. கோவில்களுக்கு அடிக்கடி போய் வருவதால் கிடைக்கும் புண்ணியத்தைவிட பெற்றோர்களின் அந்திம காலங்களில் அவர்களை கண்கலங்காமல் பார்த்துகொள்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

2. அப்பாவை புறக்கணித்தால் சொத்து நாசமாகும்.

3. அம்மாவை புறக்கணித்தால் தனக்கும் மனைவிக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் உடல் நலம் சீர் கெடும்.

4. எனவே அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மனம் கோணாமல் அவர்களை கவனிக்க வேண்டும். மருத்துவம் செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும்.

5. இது அனைத்து மகன்களும் தங்கள் அப்பா அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை.

6. அவர்கள் இருக்கும் போது கவனிக்காமல் விட்டு விட்டு அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு செய்யும் சடங்குகளால் எந்த நன்மையையும் இல்லை.

7. கோவில் குளம் செல்வதாலும் தான தர்மங்கள் செய்வதாலும் எந்த புண்ணியமும் இல்லை.

***

கடைசி காலத்தில் அப்பா ( உயிரோடு இருந்தால் ) அம்மா ( உயிரோடு இருந்தால் ) கவனிப்பதில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. சந்தோஷம் தான்...

சரி சரி இந்த கமன்டும் படியுங்கள்...

நீங்கள் கூறுவது அப்பா அம்மா எப்படி குழந்தைகளை நடத்துகிறார்கள் என்பதை பொருத்து. எனக்கு தெரிந்து, பல கோடி சொத்து உள்ள பெற்றோர், ரிடயார்ட் காலத்தை டிரைவர் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இரண்டு மகள்களுக்கு வெறும் இருபத்தைந்து பவுன் நகை போட்டு ( ஸ்டேடஸ் அளவு ) சாதாரண ஏழை கூலி தொழிலாளியின் மகன்களுக்கு கட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரும், கொல்லி போடத்தான் வருவேன் என்று சொல்லி சொந்த உழைப்பில் நன்றாக தான் இருக்கிறார்கள். இதற்கும் அவர்கள் இருவருக்கும் அண்ணன் தம்பி இல்லை.

இந்தியர்கள் வெளிநாட்டவரும்

இந்த பதிவை படித்துக்கொண்டு இருந்தேன் "ஜப்பான் அனுபவங்கள்"
பிறகு ஒரு கமன்ட் போட்டேன்.

***

இந்தியர்கள் என்றால் அவர்கள் மட்டமாக தான் நினைக்க தோன்றுதா? இந்திய டாக்சி டிரைவரையும் நன்றாக மதிப்பு வைத்து சொல்லுங்கள்.

நியூ யார்க்கில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரவு எட்டு மணிக்கு லாண்டரோமாட்டில் சென்று துணி துவைத்து காய வைத்தேன். துணி டிரையரில் இருக்கும் நேரம் வெளியே சென்று அருகில் டின்னர் சாப்பிட்டு வர நேரமாகிவிட்டது. அதற்குள் யாரோ ஒரு பெண், ஏன் துணி அனைத்தையும் ஒரு கூடையில் மடித்து வைத்திருந்தார் ( உள்ளாடைகள் உட்பட ). நான் திரும்பி தேடுகையில் ஒரு கறுப்பின பெண் வந்து "எல்லாம் சரியாக இருக்கா" என்று கேட்டுவிட்டு. "சரி எனக்கு லேட் ஆகிவிட்டது அதனால் தான் உங்கள் துணியை வெளியில் எடுத்தேன்" என்றார். இந்தியாவில் நடக்குமா?

Friday, December 11, 2009

அப்பா எப்பா



இன்டர்நெட்டில் உலா வரும் படம்...

சிம்புவும் டி.ராஜேந்தரும் அப்பாவில் நடித்தால்? எப்பா!

:-)

Tuesday, December 8, 2009

பார்வேட் டு மேனேஜர்

இத நான் எழுதலிங்க...... நண்பர்கள் எழுதியது எனது மெயிலுக்கு பார்வேடு ஆகி இருந்தது என்னாலயும் மேனேஜர்கிட்ட கேட்க முடியல.... அவர் எனது பதிவை படிப்பார்னு தெரியும் இப்படியாவது அவருக்கு சொல்லலாம்னு தான்........

நீங்களும் உங்க மேனேஜர்க்கு பார்வேடு பண்ணுங்க.......

ஒக்கே? பார்வேட் டு மேனேஜர்!

நன்றி - விஜயஷங்கர்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…? தெரியுதே, எங்களை மாதிர் தான் நீங்க இருந்து வந்தீங்கன்னு? ( புது கல்யாணம் ஆன மேனேஜர்கள் பத்தி தான் தெரியுமே... வீட்டிலிருந்தே வேலை செய்வாங்க! Telecommute)

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..? கொடுமையடா சாமி, வாங்குற சம்பளத்திற்கு! என்னை எங்களை விட நாலு மடங்கு இருக்குமா?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? அடுத்த முறை சொல்லும் போது, விஷ் யு ஏ வெரி பேட் வீக்கெண்டுன்னு மனசுலே சொல்லப்போறேன். ( ரிசெசன் பயம்! )

4. அது எப்படி உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு சாப்ட்வேர் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா… நல்ல வேலை கவர்ன்மென்ட் லீவு டைம் தொட மாட்டீங்க! இரு இரு ரிசசென் முடியட்டும்! வச்சுக்கிறேன் - ஆப்பு உண்டு, 360 டிக்ரீ பீட்பேக் பார்மிலே!

6. உங்களுக்கு சம்பள ஹைக் வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்டேன்கிருறீங்க? எப்படியும் நாங்க அநியாய சம்பள உயர்வு தான் கேட்போம். கொடுக்கிறது உங்க இஷ்டம்!

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…? அட அவுட்லூகிலே ஒரு ரிமேய்ண்டர் கூட போட மாட்டீங்களா?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…? நாங்க மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு தானா வேலையே பண்ணறோம்! எப்படியோ கோட்டா சீட்டுலே இடம் வங்கி, பிட் அடிச்சாவது மார்க் வாங்கி - வேலை இன்டர்வியு க்வேச்டியன் பேப்பர் ( மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு ) உருப்போட்டு இங்கே வந்து குப்ப கொட்டுறோம்!

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…? என்ன ஒரு ஒரு மணி நேரம் ஆகுமா, எங்களுக்கு அப்படியே ஜாலியா ஒரு வாக் போயிட்டு டி குடிச்சிட்டு வரதுக்கு? சில சமயம் ஒன்றரை மணி நேரம் கூட ஆகும், ஆப்டியே சத்யம்லே ஒரு இங்க்லீஷ் படம் பார்த்துட்டு வரதுக்கு!

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…? நாங்களும் கொஞ்சம் ஸ்டாக் மார்கட்லே காசு பண்ணிட்டா என்ன?

ஏன் சார் ஏன்?

இதை தான் ஐயன் வள்ளுவர்.... திருக்குறள்ள சொல்றார்!

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

அது இது தாங்க! புரிஞ்சு படியுங்க.

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம
சும்மா இருப்பதே சுகம்

அப்படின்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.

இந்த மடபசங்க மேனேஜர்களுக்கு இது தெரிய மாட்டேங்குது.....

Saturday, December 5, 2009

காலத்தின் கணக்கு

சொல்வதெல்லாம் உண்மை என்றால்
சொல்லாது என்னவாகும்
செத்த கடலில் நீரில் மிதக்கலாம்
மற்ற கடலில் என்ன நடக்கும்?
மீன்கள் நடக்காது என்றார்கள்
விக்கிபீடியா இல்லை என்றது
என்சைக்லோபீடியாவும் சொன்னது
மாற்றங்கள் உண்டு எதிலும்
கிரிக்கெட்டில் பாஸ்ட், ஸ்பின் போல
அண்டர் ஆர்மும் இருக்கல்லவா?
அது ஆஸ்ட்ரேலிய ஜெயிப்புக்கு
நியூஜீலாந்து பட்டது நஷ்டம்...
காலத்தின் கணக்கு
நீச்சல் பழக சொற புறடை
கட்டி பழகியது போல....

( சத்தியமா இது எந்த போட்டிக்கும் இல்லைங்க! )

HR Head Bangalore

I work for a small co. in Bangalore with about 50+ people ( only 3 support staff in HR ). HR in our co. ( all are from Kerala for some unknown reason - isn't it obvious about hard working nature? ) was doing a wonderful job, till one lady was hired from TE. This is what I heard from my MD, about 2 years ago... She was an associate manager there, having worked as a HR Clerk in south somewhere, before she came to Bangalore. She was desperate to get a job, and my boss who always picked Keralites, didn't have any issues in hiring her, until he fired her in 3 days! She was so desperate to get a job, and she tricked by quoting Sales Incentive of about 60% of her CTC, that was not in the payslip or CTC. Quoting that extra. MD did not have an issue in matching that salary ( reasonable in Bangalore standards ) and offered her. She joined in 2 days time. Friday the offer was given and the following Monday she joined! How can a co. from Tata group free someone so fast? Reason given to MD was she had quit to take one offer, but not joining them as the co. was in Whitefield and BTM Layout was closer to her. Also she tricked MD in giving her the HR Head title. MD smiled and said, does it make a difference in a small co.?

The first day went on fine. Introductions and all. MD took senior guys out for a lunch to a nearby Veg. restaurant. She made comments like, Non veg would have been better, and she eats only non veg. outside. She left for the day early at 3 PM. No one noticed. Later our old HR Manager, told me over coffee that it was a mistake to have hired her to the company and he would leave if she continues. He also mentioned that the other 2 HR folks would follow suit too. Voila, good hit for the first day!

Next day she came in late, walked in straight to MD's office, who was in a serious meeting with other managers and demanded a separate office, as she will have to spend some time one on one with employees! MD was not happy! No one knew what she was doing. She was missing in action for 2 hours during lunch. In the afternoon she spoke to the Director of the co. in pushing few of her Kerala relatives for fresher jobs. In the evening at 5 PM she left, without even informing anyone. ( we work from 9 AM to 6.30 PM, with 1.5 hours breaks for lunch and Tea ).

The next day morning, MD was waiting for her. She walked in coolly at 10 AM and our peon was sent to fetch her to MD's cabin. Within few minutes, we saw her being escorted out of office. She was crying profusely. Lots of news were being spoken about her in hush hush. MD called everyone and told that she has quit to pursue other options. Obvious!

Later, when I was talking to MD, on certain things about the company, me being a share holder... he informed that the previous day he had found her interviewing in another friends co. that is listed in BSE/NSE and they were about to offer. Just a day after joining our company! In the heat of the moment she blurted that she has an offer with our co. ( she didn't tell about actually joining ) and demanded more money than that! Also the reference check she gave, which was done inspite of being a small co., was from a low level person who had duped telling he is HR head, and by mistake after hearing about this interview episode MD wanted to talk to that person again, but didn't call the mobile, but the board / landline, and the actual HR head in TE was patched up! The truth was known, whereas she was let go few months ago and managed to generate the job certificate etc. being in HR and plugged a person to answer when someone calls. Also the CTC was wrong and HR guys didn't have anything to do with sales!

Later I came to know that she was assisting in her husbands electromechanical company, while at her paid office.

I hope she is not screwing herself, or others but learn't from mistakes!

Reading this article, made me write this.

Good people only can survive anywhere!

( I had to pen it in English, as such things need to be written in the work Language )

Tuesday, November 24, 2009

ராசிக்கல்

ஜெம்ஸ் ராசி கல் மோதிரம் அணிய சொல்கிறார் ஒருவர் - கேரளா நண்பர். ஜோதிடரை பார்த்து ஒரு மோதிரத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் செலவு ஆகுமாம். பணம் நிறைய கிடைக்குமாம். ரிடர்ன்ஸ் அதிகம் என்றார்! ( இடது கையிலும் அணிந்துள்ளார், இயற்கை உபாதைகள் கழுவ என்ன செய்வார்? கழட்ட வேண்டுமா? கேட்கவில்லை! )

சரி ராசி கற்கள் பற்றி ஸ்வாமி ஓம்கார் பதிவை படித்தேன். நன்றி!

சூப்பர் பதிவு! ராசிக்கல் மோதிரம் வேண்டாம் என் முடிவு எடுத்தேன். வாங்குறவர்கள் வாங்கிக்கொள்ளட்டும்! ஆட்சேபனை லேது.

கையில் ஒரு தங்க மோதிரம் - நான் என் முதல் சம்பளம் கொண்டு சென்று கொடுத்த பொது - அம்மா ஆசையாய் வாங்கி கொடுத்தது மட்டும் அணிகிறேன்.

வேறு மதத்தவரும் இந்த ராசி கல் மோதிரம் குறித்து அபிலாசை வைத்துள்ளனர்!

வினிதா அவர்களின் இந்த ஆங்கில பதிவில் ராசிக்கல் மோதிரம் கொடுத்து ஏமாற்றிய பெங்களூர் ஜோதிடர் ஒருவர் பற்றி எழுதியிருக்கிறார்! ஜாக்கிரதை!

Monday, November 23, 2009

படமே கதை சொல்லுது


என்ன தண்ணீர் பிரச்சனை!

கொஞ்சம் எல்லோரும் தண்ணீரை பார்த்து செலவு செய்யுங்கள்.

Thursday, November 19, 2009

அரவாணிகளுக்கு துணை ( கல்யாணம் )

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதுறாங்க...

"திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்"

***

துணை தேவை தான். அதற்கு உங்கள் அரவாணி சமூகம் வழி செய்ய வேண்டும். உங்கள் புத்தகத்தில் எழுதியது போல, பிச்சை ( கடை எடுப்பது? ) நிறுத்தி, அரசாங்கம் மூலம், வேலை பெற போராடலாம்!

நியூ யார்க்கில் நான் பார்த்த குயர்கள் (?) ( ஓரினம் சேர்கை ஆட்கள் - சிலர் தங்களை பெண்களாகவே பாவிக்கிறார்கள் ) ஒருவரிடம் பேசினேன். இந்தியாவில் திரட் செக்ஸ் என்று இருகிரார்கலாமே என்று கேட்டார். அவர்களும், எங்களை போல துணை தேடினால் நன்று என்றார். அதாவது ஒரு ஆண் இன்னொரு ஆணை தேடுவதை போல, என்று பொருள் படும்படி - இங்கு ஆண் உடம்பில் இருக்கும் பெண் எனகொள்ளலாம்.

அரவாணி பிசியாலஜி எப்படி உறவுக்கு துணை புரியும்? அதற்கு தனி ஆபரேசன் செய்ய வேண்டாமா?

என்ன ஆச்சு?

ரொம்ப நாளா பதிவு எழுதாதற்கு மன்னிக்கணும். கொஞ்சம் வேலை பிசி. குடும்பத்தில் பிசி.

டைம் ட்ரேவல் வந்தால் தான் நல்லதாக இருக்கும்!

நேத்துதான் ஆஃப் அடிச்சேன் மச்சி; இன்னும் ஹாங் ஓவர் போகலே என்று சொல்லும் நண்பர்கள் இருக்கும் தேசத்தில் இருப்பதால்...

***

இரண்டு முறை நியூ யார்க் சென்று வரும் வேலை - வாய்ப்பு. பிறகு விரிவாக எழுதுகிறேன். கசமுசா எல்லாம் இல்லை.

ப்ராஜக்ட் சக்சஸ் தான். வேலை ஆரம்பம்! பெங்களூரில் இருக்கும் டீம் போதும். இன்னும் சிலர் நியூ யார்க் பயணிக்க ஆயுத்தம்! நானும் மூட்டையை கட்டிக்கொண்டு நியூ ஜெர்சியில் செட்டில் ஆக வேண்டியது தான். ஒரு வருடம் மட்டும் தான். பார்ப்போம்.

***

புல் பார்மில் எழுதுறாங்க தமிழ் ப்ளாகர்ஸ். அதனால் என் கிறுக்கல்கள் அப்படி இடமில்லாமல் ஒரு ஓரமாக இருப்பது போல இருக்கும்.


***

நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதை - அவசரகதி - அலை பாய்ந்தது என் எண்ணத்தில்!

ஒரு வித்தியாச சிறுகதை இங்கே - டிஸ்லெக்சியா - நன்றாக எழுதியிருக்கிறார் வினிதா.

***

இங்கு ஆங்கிலத்தில் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் முடியவில்லை. இன்னொரு ப்ளாக் தான் ஆரம்பிக்கணும்.

Thursday, October 15, 2009

Tuesday, September 29, 2009

வரம் பற்றிய ஒரு விளக்கம்

இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு! ஒன்பது மாதங்களில்... பதிமூன்றாயிரம் வாசகர் பார்வைகள்... நன்றி நன்றி...

வரம் பற்றிய ஒரு விளக்கம் ... இதோ...

வரம் ... என் முந்தைய போஸ்டில் கூறியிருந்த செய்தியை படித்திருப்பீர்கள்!

ஸ்வாமி ஓம்காரும் அருமையான ஒரு பதிவு போட்டுள்ளார்!

நானும் வரம் தரப்போகிறேன்...!

படித்து ரசியுங்கள்!

***

நான் தினம் கேட்கும் வரம்... ( எந்த சாமியாரிடம் கேட்டாலும்... இதை தான் கேட்பேன்! )

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

அதற்கு விளக்கம்... எப்போதும் ஆரோக்கியமாக இருந்தால், நல்ல வேலை ( சொந்தமோ, அடிமை தொழிலோ செய்யலாம்! ) அப்புறம் கை / பேங்க் அக்கவுண்ட் நிறைய பணம், ஒரு மனதிற்கு பிடித்த வீடு... அப்படியே குடும்பமும் ( சொந்தம், மற்றும் வருகிறவள்.. வருகிறவன்...) நன்றாக இருக்கும்... எப்போதும் சந்தோஷம் நிலவும்!

அதிக ஆசை இல்லை! :-)

பிளாசிபோ எப்பக்ட் படியும் பார்த்தால், நம் முயற்சியே வெற்றியை அமைத்துக்கொடுக்கும்! நாம் அதை அடைவோம் என்று முன்னிறுத்திக்கொள்ள வேண்டும்!

***

சென்ற வாரம் வெள்ளி முதல் திங்கள் இரவு வரை ஊரில் கழித்தேன். மீண்டும் வியாழன் இரவு ஊருக்கு சென்று செவ்வாய் காலை திரும்ப வேண்டும். திங்களன்று சென்னை கன்சலேடில் ஒரு சிறு வேலை!

அப்போது கோவிலில் ஒரு சிறு விசேஷம்.... குடும்பம் மட்டும்! இன்னும் இருபது நாட்களில் மீண்டும் நியூ யார்க் செல்லும் வேலை இருக்கு. ஒரு வருடம் இருக்க வேண்டி வரும்.

அதனால் நிறைய எழுத முடியாது!

வரம்

ஒரு இணையத்தில் பிரபலமான எழுத்தாளர் ஒரு சாமியார் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது - ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பில் அல்லது அனுபவத்தில் வரும் என்று. கடவுள் என்பவர் ஏன் ஜிலேபி பையித்யமாக இருக்க வேண்டும்? எங்கள் வீட்டிற்கு சில சமயம் வந்த போது ( அப்பா போலீசில் இருந்தவர் ) கேட்டு சாப்பிட்ட ஒரு பலகாரம்! சுவாமியும் சமாதி நிலையும் அப்படிதானா?

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் உள்ள லிங்க் உங்களுக்கு தெரிந்திருக்கும். நல்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் அந்த ஆசிரம ஏரியாவில் நடக்கும். தங்கம் மற்றும் கணக்கில் டேக்ஸ் கட்டாமல் இருக்கும் பணம் புரளும் ( எல்லாம் பக்தர்கள் கொடுத்தது என்று - அதை மீண்டும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்கு வெள்ளையாக சென்று சேரும் ) - உதாரணம் - திருமலைகோடி தங்க கோவில்.

ஒருவர் தனக்கு தானே சிலை வடித்துக்கொண்டு, மற்றவர்களை கும்பிட வைப்பது என்ன சூத்திர தர்மம்? மாயாவதியும் அதை தானே செய்தார்? குருக்களிலெல்லாம் குரு தக்ஷிணாமூர்த்தி சொன்னது - உயிருள்ளவர்களை சிலை வடித்து கும்பிடாதே! என்னை பொறுத்தவரை அவர்கள் நார்ஷிஷிச்டிக் சைகொபாத்ஸ்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இதை சொல்லியவர், தெய்வத்திற்கு முன்னால் குரு என்பதை - சாமியார்கள் துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என தெரிந்திருக்காது!

நீங்கள் வேதாத்ரி மகரிஷி சொல்லிக்கொடுத்த குண்டலினி யோகம் பற்றி படியுங்கள், பிடடியில் நடப்பது அதன் ஒரு பாகமே! சரி சாமியாருக்கு எதற்கு பட்டு மெத்தையும், பெரிய பங்களாவும்?

மேலும் வரம் நிகழ்ந்தது என்பது - அற்புதங்களை பரப்பும் ஒரு மாய கட்டுவித்தையே. ஒரு டேடாபேஸ் வைத்து, கேட்ட வரம், நடந்தது என்ன எனபதை விலா வாரியாக யாரும் சொல்ல இயலாது! பைசா இல்லாமல் இந்த உலகில் ஒரு சுண்டைக்காயும் இல்லை, புண்ணாக்கும் இல்லை!

இதையும் படியுங்கள் நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

என் தம்பியும் மூன்று வருடங்களாக அந்த சாமியாரிடம் சென்று வரம் கேட்கிறான். திருவண்ணாமலை அல்லது பெங்களூரு - பிடடி வந்து செல்ல காசு தான் செலவு. அவர் இஷ்டப்பட்ட மாதிரி வெளி நாட்டு வேலை வரவில்லை... இன்னும் பிற!

ஒன்று தெரியுமா தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்பவனே தெய்வம்! ஏன்? எந்த மனித பிறவியும் தன தவறை, ஒப்புக்கொண்டதில்லை. ரீசன் இருக்கும்!

சரி வரம் கேட்கும் சூட்சமம் ஒன்று சொல்லட்டுமா?

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

Sunday, September 27, 2009

நானொருவன்

குருக்களே கோவிலில் கசமுசா
இது செய்தி
தெய்வம் நின்று கொல்லும்
இது பழமொழி

நானொருவன் என்று எனக்கு
தெரிந்த போது வயதென்ன?
இன்று நானே எனக்கு சொல்ல
ஆசைப்படுவது என்ன?

நாளை வரும் என்று மகிழ்வோடு
நான் காத்திருக்கிறேன்
என் வாழ்வில் வரும் புதிய ஒளி
எண்ணங்களில் பெண்மணி

வாழ்கையில் ஒவ்வொரு எண்ணம்
மகிழ்ந்திட வந்திடும்
காத்திருப்புக்கள் எல்லாம் இன்பமயம்
கனா காணும் காலங்கள்

வட்டார வழக்கு

புத்தகங்களைப் படிப்பதும் நண்பர்களிடம் பேசுவதும் மட்டும் உண்மையான தகவலைத்தராது (உண்மை என்பது என்ன என்பதும் பிரச்சனைக்குரியது)

தமிழகத்தில் இலக்கியவியாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் அல்லது பின்நவீனத்துவம் என்று பேசுகிறவர்கள் முதலில் தமிழகம் முழுக்க, குறைந்த பட்சம் மாவட்ட தலை நகரம் + ஒரு கிராமம் என்று தான் வாழும் பிரதேசத்தின் இயல்பை அறிய நேரம் செலவிட வேண்டும். அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தத்துவங்களை பேசித் திரிவதில் என்ன பயன்?


தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இருக்கிறீர்கள்? ஒரு மாவட்டத்தின் தலை நகரில் குறைந்தது ஒரு நாள் தங்கி இருக்கீறீர்களா?
அல்லது எத்தனை கிராமங்களுக்கு விஜயம் செய்து இருக்கீங்க?

என்று அவரவர் கேட்டுக்கொள்ளவேண்டிய விசயம்.


**

வட்டார வழக்கு என்பது அந்த வட்டாரத்திற்கு பொதுவான ஒன்று.
பார்பனர்கள்தான் எங்கு இருந்தாலும் அந்த வட்டாரத்துடன் ஒட்டாமல் தனி மொழி அடையாளம் காப்பார்கள்.

ஒரே வட்டாரத்தில் இருந்தாலும் பல சாதிப்பிரிவுகளுக்குள் சில தனிப்பட்ட பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கவழக்கங்களின் தாக்கம் சொற்களில் இருக்கும். இருந்தாலும் , சாதிக் கென்று தனியான வட்டார வழக்கு நானறிந்த அளவில் இல்லை.

***

கொங்கு வட்டாரத்தில் "ஏனுங்க அம்மணி" என்று ஒரு தலித் விவசாயக்கூலி சொல்வதற்கும் , "என்ன அம்மணி" என்று மிட்டாமிராசு சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கும். அது அதிகாரத் தோரணையும் , சாதியப் பெருமையும் கலந்துவரும் ஒன்று.

**

பார்ப்பண மற்றும் நரிக்குறவர்கள் தவிர்த்து சாதி சார்ந்த மொழி வட்டார வழக்கு இருப்பதாக நான் அறியவில்லை. இது அலசப்படவேண்டிய ஒன்று.

Saturday, September 26, 2009

உன்னை போல் ஒருவன் பற்றி

எப்படியோ இன்று மதியம் உன்னை போல் ஒருவன் ( ரிமேக் ) பார்த்தாகிவிட்டது! ஹிந்திக்கு கொடுத்த முக்கியத்துவம், தமிழில் இல்லை. ஒரு லையின் கதை, ஒரு நாளில் நடப்பது, ஆங்கில படம் மாதிரி சொதப்பி...

தாராளமாய் ஒரு தடவை பார்க்கலாம். மோகன்லால் தான் கதையின் நாயகன். அருமையான நடிப்பு. கமல் சைடு ஆக்டர் போல வந்து போகிறார். ஒரு லெட் டவுன். இந்த காரக்டரை பிரகாஷ் ராஜ் அருமையாக செய்திருப்பார்!

இரா. முருகன் வசனம். எத்தனை ஆங்கிலம் கலக்க முடியுமோ ( இதில் கமல் பேசும் அமெரிக்கன் அக்சென்ட் கொடுமை - உபயம் நியூ யார்க் ) ... ஹிந்தி மூலத்தின் வசனங்கள் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என நினைக்கிறேன்!

மூசிக் - சுருதி ஹாசன். சீனுக்கு தேவைக்கேற்ப - செல் போன் - கிர் கிர் உட்பட... முதல் படமா?

லக் தான் முதல் படம் - நடிக்க. :-)

கீழ்நிலை வர்க்கம் ( அதாவது பி அண்ட் சி சென்டர் ) பார்க்க முடியாத படம். புரியாதுங்க!

என்னோடு வந்த நண்பர்களுக்கு படம் முடிந்த ( இன்டர்வெல்லோடு இரண்டு மணி நேரம் ) பிறகு கதை வேறு சொல்ல வேண்டி இருந்தது. :-)

தேவை ஒரு குத்து பாட்டு. அந்த கைதிகளோடு ஒரு நடனம்?

சண்டை காட்சிகள் - ஹிந்தி மூலம் போல இருந்தது. கமழும் ஒரு ப்லேஷ்பேக்கில் தாடி இல்லாமல் ஒரு சண்டை போட்டிருக்கலாம்!

கமல் ( பெயரில்லா ) கேரக்டர்.... கதையில் தீவிரவாதிகள் கொல்வதை, வேறு ஒன்றோடு ஒரு லிங்க் போட்டிருக்கலாம்...

ஆமாம் இதை போலவே ஒரே நாளில் நடக்கும் குடும்ப கதை - சுஹாசினி நடிக்க வந்தது அல்லவா?

எப்படியோ, கமலுக்கு வசூல் மலை. ( அவீங்க தயாரிப்பு )

தெலுங்கு - வெங்கடேஷ் காம்பினேசன் பார்க்கணும். பெங்களூரில் ஓடுது! அதுவும் இப்படியாக இருக்குமா?

Wednesday, September 23, 2009

உன்னை போல் ஒருவன்

பொறுத்திருந்து பாருங்கள்! உன்னை போல் ஒருவன்! I am just a Common Man!

Tuesday, September 22, 2009

பெங்களூரு என் பெங்களூரு

என்ன இருந்தாலும் வாழும் ஊருக்கு திரும்பி வந்தால் ஒரு தனி திருப்தி தான். நாம் படுக்கும் படுக்கை, ஒரே இடத்தில் வைக்கும் வைக்கும் சாமான்கள், சாப்பிடும் விதம், ஹோட்டல் என...

ரம்ஜான் அன்று இந்திய திரும்பியுள்ளேன்... பிரியாணி சாப்பிடும் பாக்கியம், ப்ளைட்டில் தான்!

லுப்தான்ஸாவில் ( சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ) ப்ரேன்க்பர்ட் வரை... பிறகு அங்கிருந்து பிசினஸ் க்ளாசில் பெங்களூரு. அருமை. அப்க்ரேட்.

சாகலேட்ஸ் தவிர வேறு ஒன்றும் வாங்கவில்லை. ஒரே ஒரு டிஜிடல் காமிரா தம்பிக்கு! வெள்ளி இரவு கிளம்பி சனிக்கிழமை தான் ஊரில். அடுத்த திங்கள் ஊரில், மதுரைக்கும் செல்ல வேண்டும். விஜயதசமி. அக்கா மகள் ஸ்கூலுக்கு சேர்கிறார்கள்!

என்ன நடு இரவில் இறங்கினால்... கஷ்டம் தான். பாஸும் நானும் ஒரே டேக்ஸியில் வீடு வரை பயணம். ரூம் மேட சரவணன், நான் கதவை தட்டியதும், அரை தூக்கத்தில் அதிகாலை இரண்டு மணிக்கு கதவை திறந்தான்...

***

படுத்து தூங்கி பத்து மணிக்கு எழுந்து குளித்து ரெடியாகி, உடுப்பி கார்டனில் டிப்பன் சாப்பிட்டு, ஊருக்கு சில போன் கால் முடித்துவிட்டு...

ஆபிஸ் போய், ப்ராஜக்ட் விசயம் எல்லாம் பார்த்துவிட்டு...

இப்போ லன்ச் டைம் ஆக போகுது! அரை தூக்கம் கண்ணை கலக்குது.... மதியம், சாப்பிட்டு தூங்கிவிட்டு சாயந்திரம் ஐந்து மணிக்கு வர வேண்டும். நியூ யார்க் கால் உண்டு! ( மாயா )

***

நிறைய நியூ யார்க் விஷயம் எழுத வேண்டும். பிறகு!

Saturday, September 19, 2009

நியூ யார்க் இந்தியா திரும்புதல்

நிறைய வேலை. சில மணி நேரம் தூக்கம் குறைவு. எப்படியோ நியூ யார்க் வேலைகள் கொஞ்சம் உசாராக முடித்துள்ளோம்.

அதனால் பதிவுகள் குறைவு. :-)

நாளை, ஞாயிறு மதியம் வரை கொஞ்சம் ஊரும் சுற்றி பார்க்கணும்.

அதனாலே இந்தியா திரும்பிய பிறகு, செவ்வாய்க்கிழமை பெரிய பதிவு போடுகிறேன். நியூ ஜெர்சியில் சில விஷயங்கள் நண்பர்கள் ப்ளேன் செய்துள்ளார்கள்! :-)

நியூ யார்க்கிலிருந்து ஞாயிறு இரவு ப்ளைட். ஐந்து மணிக்கு நண்பர்கள் ஏர்போர்ட் டிராப் செய்வார்கள்.

Thursday, September 17, 2009

நியூ யார்க் வேலை

இரண்டு நாட்களாக, நல்ல வேலை.

அருமையாக பொழுது கழிந்தது. நானும், அமெரிக்கன் அக்சென்ட் போட்டு பேசுகிறேன், என்னையறியாமல்!

மாயாவும், மிகவும் நுட்பமாக உதவுகிறார்... அமெரிக்கர்களிடம் நேரில் நடந்துக்கொள்வது ஒரு தனி கதை....

வால் ஸ்ட்ரீட் கம்பனிகள் ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பித்து, ஐந்துக்கு முடிவடையும். பிறகு எல்லோரும் வீட்டுக்கு ஜூட்.... ( சில இந்திய வம்சா வழியினர் நேரம் கடந்து ஆறு மணிக்கு செல்கிறார்கள் ... ஒருவரை கேட்டேன்... ட்ராபிக் குறையும், என்றார்! )

ஆம் இங்கு சப்வே கதை தனி. சில லெவல்கள் ( அடுக்குகள் ) பல லயின்கள்... ஒரு நிமிசத்திற்கு ஒன்று என பறக்கிறது!

****

செவ்வாய் இரவு எம்பயர் ஸ்டேட் பில்டிங் சென்றேன். தனியாக தான். அருமை. கிங் காங் என்ற படத்தில் காண்பித்த மாதிரி இல்லை. கண்ணாடி கூண்டு புதுசு. காற்று காதில் அடிக்கவில்லை. நல்ல வியு... லைட் மழை...

காசு தான் பிடுங்குகிறார்கள்... சொல்ல மறந்தேன்.. அந்த ஊரு லிப்ட் படு ஸ்பீட்.

லன்ச் ஆபீஸில் வந்தது! பல வகை... நாங்கள் ( மாயா உட்பட இருப்பதால், அவர்களே ஆர்டர் செய்கிறார்கள், நிறைய வேலை நடக்கணுமே! )

இரவு டின்னர் பக்கத்தில் ஒரு மெக்டோனால்ட்ஸ் சென்றேன். வெஜ்ஜி பர்கர் உண்டு. ப்ரைஸ், கோக் மற்றும், ஒரு சாலட் பர்கரும் வாங்கினேன். ஐந்து டாலரில் திருப்தி. நிறைய இந்தியர்களும் கருப்பர்களும் இருந்தார்கள். ஒரு வித அமைதி... எல்லோருக்கும் பயம் போல. நிறைய ஸ்ட்ரீட் லைப்பர்ஸ் பார்த்தேன்...

அறை மணி நேரம் ஜிம் சென்று நடந்தேன். ஷவர் செய்துவிட்டு இந்தியா கால்... தூக்கம்...

****

புதன் முழுதும் நல்ல வேலை.

ஜேக்சன் ஹைட்ஸ் சப்வே மூலம் - யு.என் அருகில் சப்வே - கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேசன் - க்வீன்ஸ் வழி... 3,4,5,6,7 லயின்ஸ்... என்னமோ பா.. பிச்சைக்காரர்கள் சப்வேயில்.. பயமாக இருந்தது.

ஏழு மணிக்கு தனி ஆளாக, ஒரு இந்தியன் பப்பே சென்றேன்... மட்டன் பிரியாணி ஒரு கட்டு கட்டிவிட்டு.. ( திண்டுக்கல் மாதிரி வராது ) .. கொஞ்சம் சுற்றி ... அழகான ஏரியா. ( குப்பைகளுடன்! இந்தியா பீலிங்க்ஸ்... )

நாடோடிகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் ஃக்விக் கன் முருகன் டிவிடி வாங்கினேன். சுப்ரமணியபுரம் கிடைக்கவில்லை. ஒரு கலக்சன் தான்! டாலரில் என்னங்க விலை சொல்றது! ரூபாயில் சொல்லுங்க என்றேன். எவன் கேட்கிறான்... இண்டியா கூப்பிட ஒரு நிமிடத்திற்கு ஐந்து செனட்டில் ஒரு காலிங் கார்ட். ஏசியா கார்ட்ஸ்.

நிறைய இல்லீகல் இருப்பார்கள் போல... ஒரு இந்தியன் மாமா ஆள் வந்து வேசி விசயம், பீப் ஷோவிற்கு அழைத்தான். சாரி சொல்லிட்டேன்! இந்த தொழில் உலகும் முழுதும் இருக்கும் போல...

சில தெலுகு நடிகர்கள் பார்த்தேன். சூடிங்காம்! ஒரு நமஸ்தே வைத்து விட்டு, எட்டு மணிக்கு, பயத்தோடு, சப்வே பிடித்து.... ரூம் சென்று தினமும் நடக்கும் இந்தியா கால்...

கையில் மொபையில் இருந்ததால் நிம்மதி ( ஞாயிறு அன்றே ஸ்ரீநிவாசன் கொடுத்தார், இந்த ஞாயிறு வரை கையில் இருக்கும்.. )

இரவு மொபயிலில் ஒரு கால் மூன்று மணியிருக்கும், இந்திய டைம் பன்னிரெண்டரை! நேதேர்லேண்ட்ஸ் ப்ராஜக்டில் ஒரு ப்ராப்ளம். அதை சால்வ் செய்துவிட்டு, தூக்கம் வரவில்லை. கொஞ்சம் நேரம் தமிழ் ப்ளாக்ஸ் மேய்ந்தேன். அப்படியே நான்கு மணிக்கு ... பிறகு எட்டு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன்.

ஆபிஸ் இங்கிருந்து ( ஹோட்டல் ) ஒரு பத்து பதினைந்து நிமிட நடை தூரம் தான்....

****

இந்த வெள்ளியும் இரவு வரை வேலை இருக்கலாம்... அதனால் மாயா வீட்டு டின்னர் கேன்சல். சனி இரவு முடிந்தால் அங்கு செல்வேன்!

சனி காலை ஹோட்டல் காலி செய்துவிட்டு... சுதந்திர தேவி சிலை செல்ல வேண்டும். கொஞ்சம் கிரீன்விச் வில்லேஜ் ஏரியாவில் நடக்கணும். முடிந்தால் நண்பர் சாயந்திரம் ப்ரிஜ்வாடர் கோவில் கூட்டி செல்வார். அப்படியே, முடிந்தால் பிரின்ஸ்டன்.......

:-)

நியூ யார்க் சுற்றுதல்

சனிக்கிழமை, நண்பர்கள் என்னை அழைத்து ஊர் சுற்றி பார்க்க செல்கிறார்கள்...

நியூ யார்க் பற்றி நிறைய படித்ததால், எதோ ஒன்றிவிட்ட ஊர் மாதிரி இருந்தது.

ஒன்று மட்டும் சொல்லவேண்டும்.... திறமை இருந்தால் மதிக்கும் ஊர் இது. அமெரிக்கா. அவர்களும் பஞ்சம் பொழைக்க வந்தவர்கள் தான்?

அப்புறம் என்னுடைய திறமை, முழு கவனத்துடன் வேலை செய்வது, அலாதியாக இருந்தது. பெங்களூரில் சரியான தொந்தரவு இருக்கும், வேலைக்கு டென்சன் தான்! குடைச்சல் பேர்வழிகள், போன்கால், சத்தங்கள்.... இங்கு சத்தம் போட்டு பேசுவதை நீங்கள் பார்க்க முடியாது... அதனால் தான் அமேரிக்காவில் முன்னேற்றம் சூப்பர் போல ( அவனவன் வேலையை நன்றாக பார்த்து கம்பெனிக்கு லாபம் ஈட்டுகிறார்கள் )! இந்திய மாறுமா? எல்லாம் இந்த ஒன்றுக்கு ஐம்பது என்ற கணக்கு தான், விளையாடுது! ( டாலருங்க )... அரசியல், யூனியன், ரவுடியிசம் இப்படி பல சங்கதிகள்...

***

இரவு ஒன்பது முதல் பத்தரை வரை இந்தியாவில் கால் செய்து அங்கு நடக்கும், வேலைகளை கவனித்துவிட்டு... சென் ஹோசெவில் இருக்கும் நண்பரோடு பேசிவிட்டு, எங்கள் சித்தி பய்யன் இருக்கும் டெக்சாசில் ( ஹூஸ்டன் ) ஒரு கால் செய்துவிட்டு... கணினி, இன்டர்நெட்... தூக்கம்.

நான் காலிங் கார்டில் கூப்பிட்டேன், உடனே கட் செய்துவிட்டு, அவர்கள் கூப்பிட்டார்கள்... எல்லோரும் அப்படிதானா?

என் ரூமில் ப்ரிஜ்ஜில் குடி ஐடம்ஸ் வைத்திருக்கிறார்கள். நான் தொடுவதில்லை! கோக் கேன் இரண்டு டாலராம். வெளியில் தெருவில் இருக்கும் வெண்டிங் மெசினில் ஐம்பது சென்ட்ஸ்! ஸ்நேக்ஸ் கூட நான் வாங்கி வந்த குட்டே பிஸ்கட்ஸ் தான்!

பதினோரு மணி வரை கொஞ்சம் இந்த ப்ளாக் டைப் செய்தேன்... காலையில் எழுந்து இன்னும் கொஞ்சம் திருத்திவிட்டு அப்லோட் தான்... தூக்கம் வரும் வரை ....கொஞ்சம் நேரம் பிரபல பதிவர்களின் ப்ளாகை படித்தேன்....

***

ஜெயமோகன் மலாவி ஆனந்திற்கு இப்படி முக்கியத்துவம் கொடுத்து பதிலுரை எழுதுவது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. சரி சாருவிற்கு ஆனந்த் மேல் என்ன கோபம்? இருவரையும் படிக்கும் ஓபன் வாசகன் நான்.

ஹம்... இலக்கியம் படிக்க என்னவெல்லாம் செய்து சேர்த்து படிக்கவேண்டும்?

***

நான் எழுதிய நியூ யார்க் பதிவுகளை படித்து நிறைய் பேர் கமன்ட் போடுவார்கள் என்று நினைத்தேன். மூன்றே கமண்ட்ஸ்! :-(

Tuesday, September 15, 2009

நியூ யார்க்: மாயாவும் நானும்

நேற்று பெடேரர் தோற்றார். நானும் நியூ யார்க்கில் ஒரு வாரம் தான் இருப்பேன். ப்ளேன் செய்தது போல வரும் ஞாயிறு இரவு ஒன்பது மணி ப்ளைட்டில் இந்திய திரும்புகிறேன்.

நியூ யார்க் நகரம் வளைந்து நெளிந்து இல்லாமல், நேர் சீர் வரிசையில் இருக்கு. தனியாக டைம்ஸ் ஸ்கொயர் வரை சென்று வந்தேன். செவன்த் அவனியு 42ண்டு வீதியில், ஒரு பர்கர் கிங்கில் சிக்கன் வாபர் கம்போ மீல்ஸ் டின்னருக்கு, ஆறு டாலரில் ஒக்கே. அங்கு தனியாக நடக்க பயம் ஒன்றும் இல்லை. மடியில் கணம் இல்லை. நிறைய கறுப்பின ஆப்ரிக்கன்ஸ். அதுவோ காரணம்?

வேலை செய்வதில் இந்தியாவை கம்பேர் செய்தால் அமேரிக்காவில் சோகம். படு சோம்பேறிகள். எங்கள் ஊரில் பெருமாள் கோவில் ஒன்றில், அருகில் சாப்பிட்டு விட்டு தூங்கும் சிலர் பார்ப்பேன். இங்கே தூக்கத்திர்க்கு பதிலாக ஒரே குறிக்கோள், வேலை மட்டும் தான். மற்றவர்களிடம் பேச்சு இல்லை. அதுவும் கலர் கலரோடு சேர்க்கிறது! எந்நேரமும் வேலையில் இருந்து பயர் ( டிஸ்மிஸ் ) செய்யப்படலாம் என்ற காரணமா தெரியவில்லை.

நேற்று காலை பத்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய வேலை பதினோரு மணிக்கு ஆரம்பித்தது. அவர்கள் திங்கள் காலை மீட்டிங் முடித்து விட்டு எங்களை சந்தித்தார்கள். ஒரு வாரம் மட்டும் தான் நான் இங்கு இருப்பேன்...

இன்னொரு வாரத்திற்கு, சார்ஜ் கொடுக்கமாட்டார்கள். அதனால் தான். மாயா மட்டும் தான் இங்கு வந்து செல்லுவார் கொஞ்ச காலம்.... அக்டோபரில் நான் இங்கு வரும் வரை. அது தனி கதை! ( ப்ராஜக்ட் இல்லாவிட்டால் என்ன செய்வது? ).

நான் டெம்ப்ளேட் எல்லாம் ப்ரேபேர் செய்து, அவர்கள் கொடுத்த ப்ராஜக்ட் விஷயங்கள், பகுதி வாரியாக பிரித்து வைத்திருந்தேன். எப்படியெல்லாம் எங்கள் வேலை ( இந்தியாவில் ) அவர்கள் நிலைமையை சுலபமாக்கும் என்று ஒரு மணி நேரம் விவாதம்! நாங்கள் புரிந்துக்கொண்டு ஒரு கோட் கொடுத்தால் தான், இங்கு வந்திருக்கிறோம்!

நான் பேசியதை எல்லாம் காதில் வாங்கினார்களா தெரியவில்லை. லன்ச் டைம் பிட்சா சாப்பிட்டுக்கொண்டு, சைனீஸ் உண்டுக்கொண்டே டிஸ்கசன். நம்ம ஊர் சாம்பார் எல்லாம் இதுக்கு ஒத்து வராது! மே பி அலுமினியம் டப்பாவில் பிசிபேலே பாத் ஒக்கேவா?

மாயா இங்கிருப்பது ஒரு வகையில் எனக்கு வேலை சுலபம் ஆக்குது... ஒரு பெண் வேலையில் இருப்பது கொஞ்சம் வேலையை சுலபமாக்கும். மரியாதையாக, வழிகிறார்கள். மாயா மணமான பெண் அல்லவா? அவர் நன்றாக அமெரிக்கன் அக்சென்ட் போட்டு பேசுகிறார்கள். ஆந்திர பாஸ் சும்மா சொல்லக்கூடாது, பிசினஸ் தெரிந்தவர்! நிறைய கற்றுக்கொள்கிறேன்!

சீனிவாசன் நேரில் வரப்போவதில்லை! தேவையானால் போன் கால் மட்டும் தான்.... எங்களுக்கு ப்ரொஜெக்ட் பிடித்து கொடுத்த பிரதீப் சிங் மட்டும் வந்தார்! ( சர்தார்ஜி, தலைபாகை வைத்திருக்கிறார், அதிகமான பிசினஸ் ஞானம்? ) வெள்ளி மதியம் மூன்று மணிக்கு வேலை முடிந்தவுடன், தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் கான்பரன்ஸ் ரூமில் ஒரு மீட்டிங்...

ஐந்து மணி யு.எஸ். ஓபன் பார்க்க எல்லோரும் செல்லலாம் என்றார்கள். எனக்கு டிக்கட் இல்லை. செல்லவில்லை! :-( அதனால் மூன்றரைக்கு கடை சாத்திவிட்டோம். நான்கு மணிக்கு கிளம்பி மாயாவை, பென் ஸ்டேசனில் ட்ராப் செய்து விட்டு ( நடை தூரம் தான் - நியூ ஜெர்சிக்கு அம்ட்ரேக் ட்ரெயின் - நம்ம ஊரு எக்ஸ்பிரஸ் மாதிரி ) ஹோட்டல் திரும்பினேன். மாயா இரு பிள்ளைகளுக்கு அம்மா. நாற்பதை தொடும் வயது... முதல் மகள் இப்போது பதினொன்றாம் வகுப்பு. இரண்டாம் மகள் ஒன்பதாவது... மாயா வீட்டில் இருந்தபடி வேலை செய்கிறார். தேவையானால், க்ளையண்ட் விசிட். வெள்ளி இரவு டின்னர் மாயா வீட்டில் என்று சொல்லியுள்ளார். நண்பர் வீடு பக்கம் தான்.

Monday, September 14, 2009

கல்யாணம் கச்சேரி

பதிவுகள் நிறைய நீளமாக போய்விட்டன... கொஞ்சம் வெட்டி இன்னொரு பதிவாக போடுகிறேன்...

அம்மா சொன்ன பெண்ணையே கல்யாணம் செய்ய முடிவு. :-) பழைய பதிவுகளை பாருங்க , இந்த மாதம் இறுதியில் ரெஜிஸ்டர் கல்யாணம் ( போட்டோஸ் உட்பட எடுப்போம் ) அப்புறம் விசா அப்பளை செய்யணும்! கல்யாணம் செய்த பின்னால், நானும் எல் 2 விசாவோடு ( பியன்செவுக்கு ப்ரின்செடனில் ஒரு வருடம் ப்ராஜக்ட் அக்டோபர் மாதம் முதல் ) இங்கு வந்து, கம்பெனிக்கு ஒரு ஆபிஸ் திறந்தால், இருந்தால் இருக்கலாம், இல்லாவிட்டால், எப்படியோ பெங்களூருவில் கொஞ்ச காலம் ஓட்டனும்!

சரி புரட்டாசி மாதம் கல்யாணம் செய்யலாமா கூடாதா? கோவிலில் வைத்து செய்யலாம் என்று சொல்லுகிறார், என் மாமா. விஜய தசமி அன்று நல்ல முகூர்தமாம்!

இப்போவே பாஸ் சொல்லிட்டார், சம்பளம் அதிகம் எதிர்பார்க்காதே! என்று.

***

ரின் சோப் பார் கொண்டு வந்தேன். அதனால் உள்ளாடைகளை துவைத்து உலர்த்த பயம் இல்லை. ஹேங்கரில் காய போட்டுவிட்டேன்! ஐயர்ன் பாக்ஸ் இருக்கு! ஷர்ட் பேன்ட்ஸ் துவைக்க முடிந்தால் சரி. நிச்சயம் ஹோட்டலில் முடியாது, சரியான காசு! ஹோட்டல் அருகில் ஒரு லாண்டரோமெட் இருக்கு. ஐந்து டாலரில் ஒரு லோடு வேலை முடியும்! சலவைக்கு கவலை இல்லை.

***

இங்கே எவனை பார்த்தாலும், "ஹாய்" சொல்லுகிறார்கள். பழக்க வழக்கம்!

இப்போ தான் சச்சின் டெண்டுல்கர் சென்சுரி அடித்ததை வெப்பில் பார்த்தேன்! ஸ்ரீலங்காவிற்கு எதிராக இது எட்டாவது சதமாம்.

காலை ஒரு டோனட்டும் காபியும் தான் ப்ரேக்பாஸ்ட். அப்படியே ஒரு ஆப்பில் கடித்துக்கொண்டேன். மதியம், வயிற்றுக்கு சேருகிற மாதிரி உருப்படியாக ஏதாவது சாப்பிட்டால் ஆயிற்று!

தினமும், மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம், க்ளையண்ட் சைடில் இருவர், எங்களோடு செலவு செய்து ரேகொயர்மேன்ட்ஸ் சொல்லுகிறார்கள் என ப்ளேன். எங்கு சாப்பிட அழைத்து செல்ல வேண்டுமோ!

பத்து மணிக்கு தான் முதல் மீட்டிங். அதனால், கொஞ்ச நேரம் ப்ளாகில் மேய்கிறேன்.

நியூ யார்க் வந்தாச்சு 2

இதை முதலில் படியுங்க... நியூ யார்க் வந்தாச்சு

தொடர்ச்சி....

பாஸ் வேர்க்க விருவிருக்க, அவர் மொபயிலில் எதோ பேசிக்கொண்டு இருந்தார். அவர் வருடம் ஒரு முறை குடும்பத்தோடு அமேரிக்கா வருபவர், சோ நோ ப்ராப்ளம்! மேட்ரிக்ஸ் கார்ட் வாங்கியிருந்தார்.

ஐந்து நிமிடம் பேசியிருப்பார்... அப்போது நேரம் மதியம் ஒரு மணி. இந்தியாவில் இரவு பத்தரை. மகளுக்கு உடல் நிலை சரியில்லையாம், எக்சாம் வேறு. அதனால் கொஞ்சம் டென்சன் என்றார்!

கிரீன் சானல் வழி சென்றோம். அங்கு பாஸ் தம்பி நின்றிருந்தார். பாஸ் எப்போதும் போல நியூ ஜெர்சி சென்று தங்குவார். டாலர் கவரை கொடுத்து விட்டேன். என் கையில் இன்னொருவரின் இரண்டாயிரம் டாலர் கேஷ். பயம்!

எங்கள் கம்பெனி டைரக்டர் சீனிவாசனும் அங்கு இருந்தார். அவர் தான் என்னை ஹோட்டலில் கொண்டு செல்ல ஏற்பாடு. நாற்பது நிமிஷ டிரைவ். முன் சீட்டில் தூங்கிவிட்டேன். ஹோட்டலில் செக்கின் செய்ய அவர் கார்ட் ஸ்வயிப் செய்தார். என் பாஸ்போர்ட் காபி எடுத்து வைத்துக்கொண்டார்கள். ( நெதேர்லாண்ட்சில் இப்படி இல்லை, பாஸ்போர்ட்டை ஜஸ்ட் ஒரு பார்வை ).

ரூம் சென்று விட்டு, குளித்து விட்டு வெளியில் ஒரு டெலியில் சாண்ட்விச் காபி. ரெஸ்ட் எடுத்தால், ஜெட் லாக் தீராது என்று அவரோடு, நியூ ஜெர்சி பயணம்!

வழியெங்கும் லிங்கன் டணலில் இருந்து ஜெர்சி சிடி சைடு செல்லும் வரை வேடிக்கை பார்த்தேன்... மீண்டும் தூங்கிவிட்டேன். அங்கிருந்து அரை மணி நேரம். அவர் வீடும் பாஸ் தம்பி வீட்டு அருகில் தான். முதலில் அங்கு அழைத்து சென்றார். வடை பாயசம் கிடைத்தது. அப்போது தான் தெரிந்தது அவர் ஏ.டி. & டி கம்பெனியில் கன்றேக்டராக வேலை செய்துகொண்டே இந்த பிசினஸ் செய்கிறார். ( எங்கள் கம்பெனியில் ஷேர் ஹோல்டிங் பார்ட்னர் )

பிறகு பாஸ் வீடு சென்றோம். அங்கு ஒரு சிறிய அறை, தம்பியின் ஆபிஸாம்! தூக்கம் வேறு கண்ணை கட்டியது. காபி குடித்து குடித்து வயிறு வேறு கலக்கியது. பாத்ரூம் சென்றாலும் கழுவ இடம் இல்லை. திஸ்ஸு பேபர் தான்!

பிறகு பிசினஸ், யு.எம்.எல் டெம்ப்ளேட் பற்றி பேசினோம். ஒரு வாரத்தில் என்னவெல்லாம் முடிக்க முடியும் என்று பேசினோம். அவர் முதல் நாளும் கடைசி நாளும் வருவதாக சொனார். நானும் பாஸும் முதல் நாள் முழுதும் இருப்போம். அப்புறம் பாஸ், வாஷிங்க்டன் டி.சி. செல்கிறார், இன்னொரு ப்ராஜக்ட் விசயமாக. வியாழன் வந்து விடுவார். வெள்ளி வேலை முடியுமா? தெரியவில்லை.

அப்புறம், சர்ப்ரைசாக, மாயா என்ற பெண் வந்தார். மணமானவர்! அமெரிக்கன் மாதிரி டிரெஸ்ஸிங். எங்கள் கம்பெனிக்கு காண்ட்ரேக்ட் செய்ய அவர் ஒரு வாரம், எங்களோடு (!) இருப்பார். பிசினஸ் அனலிஸ்டாம்.

அங்கு செய்யும் வேலையை, ஒரு டாகுமெண்டாக கொடுத்தால், சில ஆயிரம் டாலர்கள் மினிமம் கியாரண்டி வேறு! நாங்கள் வந்து போகும் செலவு, மாயா சம்பளம் உட்பட! பத்து பேரோடு எப்படியோ மூன்று மாதத்தில் இந்த ப்ராஜக்ட் முடிக்கலாம். பிறகு இன்னொரு வெர்சன், அவர்கள் விருப்பப்பட்டால்! ( மாயாவும் அதுவரை இங்கு கோ ஆர்டினேடராக இருக்கலாம் ).

***

இரவு பாஸ் தம்பி வீட்டில் டின்னர், ஆந்திர சாப்பாடு... காரமாக.. ஏழு மணிக்கு. குழந்தைகள் சிறிது தெலுங்கு பேசினார்கள்! எட்டு மணிக்கு சரியான தூக்கத்தில் ஹம்ப்டன் இன் வந்தேன். தூங்கியவன், காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்தது அடிக்க எழுந்தேன். இப்போ ஜெட்லாக் இல்லை... மதியம் பார்ப்போம்!

எப்படியோ இங்கு வேலை இரண்டு வாரமாகிவிடும் என தெரிகிறது! ஐயோ அப்பா ஹோட்டல் சாப்பாடு கொல்லும்! இன்றிரவு முடிவு செய்வோம்.

இந்த வால் ஸ்ட்ரீட் கம்பெனி மார்கெட்டிங் ஆள் திங்கள் எட்டு மணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்! ரெடியாகி, ப்ளாக் டைப் செய்தபடி வெயிடிங்.

இங்கே இன்டர்நெட் படு சூப்பர்! ஸ்பீட். ஐயா ஜாலி ஜாலி!

நியூ யார்க் வந்தாச்சு

நியூ யார்க் இறங்கும் போது தூரத்தில் சுதந்திர தேவி சிலை தெரிந்தது. என்னவோ மனதுக்குள், ஒரு வறுமை. போன ஜென்ம தொடர்போ? ட்வின் டவர்சை காணவில்லை... அதனாலா? எட்டு வருடம் முன் தகர்க்கப்பட்ட நினைவு வேறு வந்து தொலைத்து!

நியூ யார்க் இறங்கும் முன், ஐ 94 பார்ம் பில்லப் செய்தோம். வெள்ளைக்கலர். மனசெல்லாம் வெள்ளை என்ற பாட்டு தானாக ஞாபகம் வந்தது! உலகில் ஒவ்வொருவரும் அமெரிக்காவை காண வாழ்க்கையில் ஒருமுறையேனும் வரத்துடிப்பார்கள் என்று அமெரிக்கா போகணுமா என்று எழுதிய சுவடு சங்கர் ஞாபகம் வந்தார்!

க்ளையண்ட் கொடுத்த பேக்ஸ். ஆளுக்கு ஒரு காப்பி. ஹோட்டல் ரிசர்வேசன் எனக்கு. அவருக்கு அவர் தம்பி லெட்டர். இருவரும் பேசி வைத்த மாதிரி, வேறு வேறு லையின். எதுக்குங்க வம்பு?

ஒரு கருப்பு மொட்டை தலை செக்கிங் ஆபிசர் ( ஷாருக்கான் சம்பவம் நினைவில் வந்தது! ) என்னை ஏற இறங்க பார்த்தார். சிரித்தார்! " இஸ் திஸ் யுவர் பர்ஸ்ட் டைம் ஹீர்? "... மீண்டும் புன்சிரிப்பு.. " எஸ் சார் " விறைப்பாக பதில் சொன்னேன். மறக்காமல் சிரித்து வைத்தேன்.

கைரேகை செக்கப், போட்டோ பிடிப்பு, விசாரிப்பு. இரண்டு முறை, இது பிஸ்னஸ் ட்ரிப் தானா என்று கேள்வி வேறு. ஆம் என்றேன். கோட்டு சூட்டு வேறு போட்டிருந்தேன்! ( எதுக்குங்க இப்படி தொல்லை? ) கடைசியில் " யு லுக் லைக் ஏ மூவி ஸ்டார்! " என்று சிரித்தபடி ஆறு மாதம் இருக்க சீல் அடித்து கொடுத்தார்! " தேங்க்ஸ், அப்பிரிசியேட் இட்! " என்று சிரித்த படி கச்டம்சில் பெட்டி எடுக்க வந்தேன். அங்கு...

அடுத்த பதிவில் தொடரும்...

(முந்தைய பதிவு நியூ யார்க் கிளம்புதல் படித்தீர்களா? )

நியூ யார்க் கிளம்புதல்

பெங்களூருவில் கிளம்பும் போது அங்கு ஞாயிறு அதி காலை ஆனது. சனி இரவு மெயில் எல்லாம் செக் செய்தவுடன், வீட்டிலிருந்து இரவு பத்து மணிக்கு, அம்மாவும், தம்பி மற்றும் ரூம் மேட சரவணனுடன் டாக்க்ஷி பயணமாக பெங்களூரு இண்டர்நேசனல் ஏர்போர்ட்.! சரமாரியாக ஓட்டினார், டேக்சி ட்ரைவர்! பயம்... வழியில் நிறைய அடிபடல்கள்... எக்சிடன்ட்ஸ்.. பதினோரு மணிக்கு ஏர்போர்ட் வாசல். திருவிழா கோலம்... பிக்கப் செய்ய வந்த கூட்டம் அதிகம்! கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பிரியாவிடை... டாடா பாய் சொல்லிவிட்டு செக்கின் கவுன்ட்டர் போக இன்னும் அரை மணி நேரம்...

முதல் முறை தொலை தூர பயணம். கோவை ஷரோன் சாப்ட்வேரில் வேலை செய்யும் போது சிங்கப்பூர் வழியாக, மெல்போர்ன் ஆஸ்த்ரேலியா சென்ற போது, சென்னை வழியாக சென்றேன். ஒரு சனி திண்டுக்கல் சென்று விட்டு, ஊரிலிருந்தே, மதியம் டாக்சி மூலம் சென்னை ஏர்போர்டுக்கு சென்று விட்டு, அம்மாவும் தம்பியும் திரும்பினார்கள்.

***

பெங்களூரு விட்டு கிளம்பியதும், ஒரு மணி நேரத்தில் ஒரு சிறு ஸ்நாக் / டின்னர் கொடுத்தார்கள்.

உயரமான ஜெர்மன் பெண்கள். பெரிய பெரிய சைஸில்... இருந்தார்கள். நம்ம ஊர் பெண்கள் ஷார்ட் அண்டு ஸ்வீட். :-)

அப்புறம், இறங்கும் ஒரு மணி நேரம் முன், எங்களை ( என் பாஸு ) எழுப்பி ஒரு கவிக் சேண்ட்விச். நான் கொடுத்த ஸாலில் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன்! டிவி பார்க்கவேயில்லை. The Ugly Truth. அந்த கருமத்தை எவன் பார்ப்பான். பாஸும் பேச்சு தொந்தரவு கொடுக்கவில்லை. ( ப்ளைட் கிளம்பும் போது இரண்டாயிரம் டாலர் இருக்கு கவரில், நியூ யார்க் இறங்கியதும் கொடுத்துவிடு என்றார்! ஒருவர் கையில் இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் கரன்சி எடுத்து செல்ல கூடாது! )

ப்ரேன்க்பர்டில் இரண்டு மணி நேரம் வெயிட்டிங். அங்கு லோகல் டைம் காலை 10.35 இக்கு நியூ யார்க் கனக்சன். ஐந்து நிமிடம் முன்பாக கிளம்பியதாக ஞாபகம்! பாசொடு இது இரண்டாவது பயணம். சைலண்டாக, படுத்துவிட்டார். சாப்பிடும் நேரம் மட்டும் எழுந்தார். ஜெட் லாக் குறைய இது வழி போல!

இனி இது ப்ளைட்டில் இறங்குவதற்கு முன் எழுதியது ( ஆங்கில மூலம் தமிழிஸில். அப்புறம் தமிழ் படுத்த ப்ளாகரில் ரொம்ப கஷ்டம் )

***

அம்மாவும் தம்பியும் நடு இரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பினார்களாம்! டாக்சிக்கு போக வர, 800 ரூபாய் தான், அங்கு ஒரு அறை மணி நேரம் வெயிட்டிங்.

ஞாயிறு மதியம், கே.பி.என் பஸ்சில் சேலம் வழியாக திண்டுக்கல் இரவு சேர்ந்திருந்தார்கள்.

இப்போது கூட தம்பிகூட ஒரு விண்டோவில் சேட் செய்கிறேன்.

Thursday, September 10, 2009

அமெரிக்கா பயணம்

ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பெனி வேலை விசயமாக அடுத்த வாரம் நியூ யார்க் பயணம் செல்லுகிறேன். விசா, டிக்கட் ரெடி.

ஊரிலிருந்து அம்மா இன்றிரவு வருகிறார்கள். தம்பியும் சனிக்கிழமை காலை வருவான். என்னோடு முன் கம்பெனிகளில் வேலை செய்த நண்பர்களை அங்கிருக்கும் போது இரவு சந்திப்பேன்.

ஒரு வாரம் தான் அங்கிருப்பேன் என்றாலும், மூன்று அல்லது நான்கு நாட்களில் வேலை முடியலாம். இது முதல் கட்ட வேலை. எச்டிமேசன். அதன் பிறகு, மீண்டும் ஒரு ட்ரிப் எங்கள் கம்பெனி ஆட்கள் செல்லலாம். இதுவரை எங்கள் கம்பெனி அங்கு கிளை திறக்கவில்லை. இந்த முறை பாஸ் அவர் தம்பி கம்பெனி மூலம், முயற்சிக்கலாம். அவர் தனியாக ப்ரன்ட்லயின் என்று பாடி ஷாபிங் செய்து, பிற்பாடு விசா வாங்குவதில் ப்ளேக் லிஸ்ட் செய்யப்பட்டார் என தெரியுது. அதனால், ஒரு புதிய கிளை நிறுவனம் உருவாகலாம்.

பாஸும், நானும், வரும் சனி இரவு கிளம்புகிறோம். நியூ யார்க்கில் ஞாயிறு காலை பத்து மணியளவில் இறங்குவோம், ப்ரேன்க்பர்ட் வழியாக. லுப்தான்ஸாவில் டிக்கட் புக் செய்துள்ளார்கள். இருவருக்கும் ஒரே க்ளாஸ் தான்! ஹாம்ப்டன் இன்னில் ரூம் உண்டு. அந்த கம்பெனிக்கு நடை தூரம் தான். இந்த ஒன்பதரை மணி நேர ஜெட்லாக் என்பதை முதன்முறை அனுபவிக்கவேண்டும்.

இது வரை நான் சென்ற நாடுகளில் ஆஸ்த்ரேலியாவில் தான் ஜெட்லாக் தொந்தரவு இருந்தது. அதிகாலை சீக்கிரமாகும், தூக்கம் கண் கலங்கும், பிறகு மதியம் லேட்டாக தூக்கம் வரும். சிறிது காலம் அங்கு சென்றாலும், அதிகாலை ஏழு மணிக்கு வேலைக்கு சென்று, மதியம் நான்கு அல்லது ஐந்து மணியளவில் முதல் வாரம் வீடு திரும்பினேன்.... எவ்வளவு கஷ்டம் பாருங்கள்...

நியூ யார்க்கில் இருக்கும் எங்கள் கம்பெனி டைரக்டரும், அப்புறம் ஒரு ஜென்ட்டு உடன் வேலை சக்சஸாக முடிக்கக் வேண்டும்! ஒரு ட்ரேடிங் ப்ளேட்பாரம் ப்ராஜக்ட் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்! சிறியதாக இருந்தாலும், நல்லதாக இருக்க வேண்டும். ( மெயின்டெனன்ஸ் - இதுவும் ஒரு பெரிய நிறுவனம் செய்து முடித்து, ஒரு வருடத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது - காசு உருஞ்சிகிறார்கள் போல! )

:-)

சரி சரி நியூ யார்க்கில் என்னவெல்லாம், சுற்றி பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் லிஸ்ட் கொடுத்துள்ளார்கள். குறைந்த காலம்... அடுத்த ஞாயிறு இரவு செப்டம்பர் இருபது ஒன்பது மணிக்கு இந்தியா திரும்பி வரும் ப்ளைட். அதனால் இரண்டு நாட்கள் ( சனி, ஞாயிறு ) கொஞ்சம் சுற்றி பார்க்க கிடக்கும். என் பாஸு அவர் தம்பி வீட்டில் ( நியூ ஜெர்சி ) தினமும் சென்று விடுவார். நானும் வெள்ளி, சனி இரவு நண்பர் வீட்டில் இருப்பேன். ஞாயிறு ஐந்து மணிக்கு ஜே.எப்.கே. ஏர்போர்ட்டில் இருப்பேன்.

செவ்வாய் அதிகாலை பெங்களூரு வந்தடைவோம்.

திரும்பி வரும் போது, ஒன்றும் கொண்டு வர இயலாது. எப்பவும் போல சாகலேட்ஸ் தான். லேப்டாப் ஒன்று வாங்கி வர / கொண்டு வர நண்பர் ஒருவர் சொன்னார், முடியாது. ஒன்று தான் அலவ்டு.

***

தம்பியின் பியான்செவை சந்திக்கும் சான்ஸ் கிடைக்கலாம்! ஏற்கனவே எழுதியுள்ளேன்.

***

யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஒரு லிங்க் கொடுத்தார். அதில் சில தமிழ் டாகுமன்ட்ஸ் ( கதைகள், கட்டுரைகள்) உள்ளன.

Tuesday, September 8, 2009

பத்தாயிரம் வாசகர் பார்வைகள்

பத்தாயிரம் வாசகர் பார்வைகள் வரப்போகுது! நண்பர் விஜயஷங்கர் சொல்லி விளையாட்டாக இந்த வலைப்பூ ஆரம்பித்தேன். இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள். எழுதுவதற்கு ( என் தாய்மொழி இல்லாவிட்டாலும் ) நிறைய விசயம் உண்டு இங்கு. இன்னொரு நண்பர் சுந்தரவடிவேலுவும் அவர் ஊக்கம் கொடுத்து எழுத வைக்கிறார்!

ஒரு புதுவை பதிவர், என் மனதை புண் படுத்தியமாதிரிஇருந்தது. அவரும் மன்னிப்பு மெயில் போட்டுள்ளார். தேங்க்ஸ். மறப்போம் மன்னிப்போம்.

***

நூற்றி முப்பது பதிவுகளில், ஒரே ஒரு கதை, அதுவும் சொதப்பல். அதோடு நின்றது கதை எழுத்துப்பயணம். ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினேன். பரிதாபம்!

கவிதை இன்னொன்று இங்கே...

பத்தாயிரம் பார்வைகள் வந்தன
பரவசம் அடைந்தேன்
நிலாச்சோறு கிடைக்குமா என்றிருந்தேன்
பவுர்ணமி வந்தது
அம்மா இல்லாத ஏக்கம்
பாசம் கிடைக்காது துக்கம்
வருகிறாள் புது மனைவி!

அப்புறம் இந்த மாதிரி ( அதிஷாவின் கவிதை ) எனக்கு வராது!

நீல நிற இரவுகளில்!

***

நான் படித்த கோவை கல்லூரி நண்பர்கள் ( முற்றிலும் சீனியர்கள் ) ட்விட்டரில் இருக்கிறார்கள்... வெண்பா, அது இது என்று தூள் கிளப்புறாங்கையா! நானும் தான் ட்விட்டர் பண்ணுறேன்.

***

வேலை விசயமாக இந்த வார கடைசியில் நியூ யார்க் பயணம் - ஒரு வாரம் - ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பனிக்கு சாப்ட்வேர் வேலை இருக்கு. நாளை அமெரிக்கன் விசா வாங்க சென்னை செல்கிறேன். பயம் தகிடதோம் போடுது. சுவையின் ப்ளு வேறே ஆட்டம் காட்டுது!

அப்துல்லா அண்ணன் பதிவில் பார்த்த விஷயம் மனதில் கொண்டு மேலும் வினிதாவின் பதிவில் கண்ட விஷயங்கள் மனதில் கொண்டு, தயார் செய்து வேண்டுகிறேன்.

காசே தான் கடவுளடா

All about USA visa

கடைசியில் எங்கள் கம்பெனிக்கு நல்லது நடந்தால் சரி.

எனக்கும் தான்! :-)

Monday, September 7, 2009

குரு சில கேள்விகள்

ஸ்வாமி ஓம்காரின் ஸ்ரீ சக்ர புரி தொடர் படித்து திருவண்ணாமலை மகிமை பற்றி தெரிந்துக்கொண்டேன்.

"ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15"

அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.

எனக்கு சில கேள்விகள் உண்டு.

* குரு என்பவர் யார்?
* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?
* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?
* குரு என்பவர் மெஸ்அய்யா தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?
* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?
* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )
* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)
* குரு என்பவர் தன குடும்பத்தை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?

Friday, September 4, 2009

தமிழன் ஒரு விளக்கம்

என் ப்ளாகை படித்த ஒரு கேனையன் - தெலுங்கு மொழி பேசும் ஆள் என்றால் கேவலம் என்று நினைக்கிறார் போல. ( போலி டோண்டு கோஷ்டியாக இருக்கும்னோ? ) தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன் இல்லையா? இந்தியாவில் பிறந்தவன் இந்தியன் என்கிற மாதிரி. அப்புறம் புதுச்சேரியில் பிறந்தவனை என்னவென்று சொல்லுவது?

இதற்கு தான் என் ப்ளாகின் தலைப்பில் "தமிழனாய் ஒரு பங்களிப்பு!"

அப்போ விஜயகாந்த், நெப்போலியன் , புதுச்சேரி வைத்தியலிங்கம் ( நாயக்கர் இன மக்கள் ) எல்லாம் என்ன தமிழர் கிடையாதா! அவர்களிடம் நேரில் சென்று சொல்லிப்பாருங்கள்... என்ன நடக்கும் தெரியும்!

இசை வேளாளர் கூட தெலுகு தாய்மொழி கொண்டவர்கள் என்று என் அம்மா சொல்லுறாங்க! யாரை குறிப்பிட்டு சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.

ரொம்ப பிரிவினைவாதம் ஜாஸ்தி பார்க்கிற ஊரு, இடம் தமிழ்நாடு தான்.

ஜாதி மதம் இனம் கூட்டம் நண்பர்கள் மொழி என்று பாகுபாடுஎவ்வளவு காலம் ஆனாலும் இந்திய முன்னேற வழி வகுக்காது! மைன்ட் இட்.

இலங்கை இனப்பிரச்னை ஒன்று தான் இப்போ ஒற்றுமையை வழி வகுக்கும் போல இருந்தது. இந்த ப்ளாக் உலகில்..... அதுவும் கெடுத்து விடுவார்கள்... குட்டின பொறப்பு அலாக!

உவ்வே...

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்! இது சேதி. ஹெலிகாப்டர் மலையில் மோதி உயரிலந்தார்! அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

என்னை போல தெலுகு தாய்மொழி ஆள். என்னை போலவே கன்னடமும் பேசுவார் என தெரியுது... இங்கே படியுங்கள் தெரியும்.. அவர் படித்த குல்பர்கா MRMC காலேஜில் தான் என் அக்கா டென்டிஸ்ட் ஆக படித்தார். ( 60% மார்க்குக்கு ராமசந்த்ராவில் கிடைக்கும்? ) :-) என் பாசின் சொந்தம், அவர் பெண் எடுத்த வகையில்.

மக்களுக்கு 2004 முதல் நல்லது செய்தாராம்! இப்போது வருத்தங்கள்.

***

குடும்ப சொத்து போல அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இப்போது அறுபத்தியேழு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஆக முயற்சி எடுக்கிறார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

நிறைய எஸ்.எம்.எஸ் ஜோக்குகள் செல்கின்றன. பாவம் காங்கிரஸ் கட்சி.

ஆந்திராவில், ஹைதராபாத்தில் முற்றிலும் கடைகள் மூடப்பட்டு, அநியாய விலைக்கு எல்லாம் விற்கப்படுகின்றன என்று தெரிகிறது! மோர்னிங் என்பதை கடைஅடைப்புக்கு உபயோகிக்கும் கேனையர்கள்!

***

YSR இன்டர்நெட்டில் - மறைந்த விவரங்கள் அதிகம். கிறிஸ்டியன் என்று இப்போ தான் தெரியும். மனைவி விஜய லக்ஷ்மி ஹிந்துவாம். அதனால் திருப்பதிக்கு போவாராம்!

***

YSR இன் மகள் ஷர்மிலா எங்க ஏரியாவில் தான் வாழ்கிறார். இது சேதி. சில முறை பூட் டேய்சில் பார்த்த ஞாபகம்!

***

கர்நாடக சுரங்க சுரண்டல்கள் கும்பல் மூன்று மினிஸ்டர் ரெட்டிகளும் YSR குடும்ப நிறுவனத்தில் பங்கு. நாற்பத்தியேழு கோடிக்கு தலை கிரீடம் செய்தார்கள் ஏழுகொண்டலவாடாவிர்க்கு!

***

நக்சல்கள் ஏரியாவில் எதற்கு ப்ளைட் செல்ல வேண்டும்? அவர்கள் ஷ்டின்கரில் அடித்திருக்கலாம் அல்லவா? அதனால் தான் ஒரு மெஸ்ஸெஜும் செல்லவில்லையா? இது வரை ஆப்கானில் ஷ்டின்கரில் அடிபட்டு இறந்தவர்கள் நாலாயிரத்திற்கு மேல். எதிரிக்கு எதிரி நண்பனாம்.

வருத்தங்கள்.

Tuesday, September 1, 2009

உன்னை போல் ஒருவன் ட்ரெயிலர்


ஹிந்தியில் வந்த A Wednesday படத்தை தழுவி, தமிழ் படுத்தி ( படாத படு பட்டு ) ஒரு வழியாக வருகிறது உன்னை போல் ஒருவன்!

கமல் மிகவும் இளமையாக ( அவர் வயதிற்கு ) தெரிகிறார். :-)

மோகன்லாலின் தமிழ் கொல்லுகிறது!

நிறைய சீன்ஸ், கொஞ்சம் காமடி என்று சேர்த்திருப்பார்கள். டையலாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது... பன்ச் டையலாக்சுக்கு குறைவிருக்காது!

விவேக் காமடி, வடிவேல் காமடி இடைசெருகல் இருக்கும்? சின்ன ஊரிலே ஓட வேண்டாமா?

அப்புறம், ஒரு குத்து பாட்டு, ரெண்டு சோக பாட்டு இருக்கும்.

அப்புறம், அந்த தீவிரவாதிகள் சாவுக்கும், கமலுக்கும் ஒரு லிங்க் வைத்திருப்பார்கள். லக்ஷ்மிக்கு ஒரு ஹோம் மினிஸ்டர் வேடம்.

Will it work? I am just a stupid common man!

Thursday, August 27, 2009

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி

இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

செந்தில்நாதன் நலம் குறித்த பதிவு

***

அவர் ஒரு விடியோ பதிவு போடுவார் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கு நலமோடு திரும்பி வர வேண்டுகிறேன்!

***

இறைவனுக்கு நன்றி!

ஞாநி கோலம்: வீடு தேடி வரும் நல்ல விஷயம்

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Wednesday, August 26, 2009

பிழைக்க தெரிந்தவர்கள்

ஐ.டி. துறையில் மடமடவென்று மேலே செல்பவர்கள் அதிகம். அதே போல் கிழே விழுபவர்கள் அதிகம்.

திறமை இருந்தும் வேலை இல்லாதவர்கள் அதிகம். ரிசச்சென் என்ற பெயரால் அதிக சம்பள ஆட்களை நீக்கியதை என் கம்பெனியிலேயே பார்த்துள்ளேன்.

Nepotism and Cronyism is there to the core.

நானே மூன்று வருடம் எக்ச்பீரியன்சில் வாங்கும் (அதிகபட்சம்) சம்பளத்தை பத்து வருட சர்வீச்சில் வாங்கிக்கொண்டு வாழ்கிறேன். இதற்கு புரிதல் அவசியம்!

பிழைக்க தெரிந்தவர்கள் நிறைந்தது ஐ.டி. துறை. ( கவனமாக நடந்து கொண்டால் )

அப்புறம், நீங்கள் மறுத்த உதவிகள் செய்வது போல், ஐ.டி. வேலையில் தூக்கி அடிக்க பட்டவர்களுக்கு உதவலாமா?

Wednesday, August 19, 2009

டாக்டர் டாக்டர்

டாக்டர் படிப்பு மேற்படிப்பு பற்றி அட்டகாசமான ஒரு பதிவு இக்கட.

டாக்டர் ப்ருனோ அவர்களின் ப்ளாகில்!

பதிவு சிறப்பு. கமன்ட்ஸ்களும் இன்னும் சிறப்பு!

Friday, August 14, 2009

வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள்

எங்கள் ஊர் வீட்டுக்கு ஒரு முறை வந்த ஒரு சாமியார் ( குரு ) வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் தேவை என்று சொன்னார்.

* சுற்றம்
* பணம்
* ஆன்மீகம்

எதற்கு என்று கேட்டேன். வயது வரும் போது உனக்கே தெரியும் என்று சொன்னார்.

நிறைய சுவாமிகளிடம் கேட்டேன், விளக்கம் இல்லை.

இன்று அந்த சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறார் ( ஆன்மீகம்? ). நல்ல பெரிய இடது சீடர்கள் ( சுற்றம்? ) மட்டும் பணம் (?) கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எந்த தியான வகுப்புக்கும் ரூபாய் ஆயிரம், ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம், மூன்று லட்சம் என்று வாங்கி ( டாலர்களிலும் கொடுக்கிறார்கள்... ) ஆசிரம சேவைகளை அருமையாக செய்கிறார்.

போலீசாருக்கு மத்திய உணவு அளிக்கிறார். இலவச தியான வகுப்பு கொடுக்கிறார். (?) தினமும் ஒரு இருநூறு பேர் அங்கு இலவசமாக சாப்பிடுறாங்க!

இந்த பவுர்ணமி அன்று அங்கு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன், என்னை கண்டுக்கொண்டார். சிறிது நேரம் பேசினார். அப்பா மறைவு பற்றி வருத்தம் தெரிவித்தார். அப்பாவின் குரு ( விசிறி சாமியார் ) தான் அவருக்கும் குரு. ஞானம் கொடுத்தவர். எல்லாம் கஷ்டமும் வாழ்க்கைக்கு படிப்பினை என்றார்.

அப்போது ஒருவர் வந்து ஒரு கிலோ எடையில் தங்கத்தில் செய்யப்பட உருத்திராட்சம் மாலை அணிவித்தார். என்னே பக்தி. ஸ்வாமிகள் என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். ஆயிரம் அர்த்தங்கள்!

நான் என் வண்டியில் ஆசிரம உள்ளே வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விடுகிறார்கள். எல்லாம் அவரை தெரிந்ததால் தான்! மற்றவர்கள் எல்லாம், வெளியே தான் வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல வேண்டும். ( சாமியார்களிடதிலும் ஏற்ற தாழ்வு, சூது வாது உண்டா? )

எனது ஆந்திர முஸ்லீம் நண்பர் ஒருவரும் அவரிடம் தியான வகுப்பு படித்தவர். ஒரு பவுர்ணமியில் வரம் வாங்கினார், நல்ல பெண் அமைய. இன்று அவருக்கு ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தில் இருந்து சம்பந்தம் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வந்துள்ளது. ஆன்மீகத்தில் மதம் கிடையாது என்பது நிரூபணம் ஆயிற்று போல. (!)

+++++++++++++

சரி நான் கண்டுகொண்டது என்ன?

ஆன்மீகம் - வாழ்க்கையை சந்தோசமாக அணுக, நல்ல சுற்றமும், பணமும் இருந்தால்

சுற்றம் = உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - காசு இருந்தால் தான் எல்லாம்.

பணம் = சுற்றம் மற்றும் ஆன்மீகத்திற்கு இது மிகவும் அவசியம்.

எல்லாமே ஒரு லூப் தான்.

தன் கையே தனக்குதவி.

Wednesday, August 12, 2009

அழகர் மலை பாடல்

இளையராஜாவின் மூசிக்கில் அழகர் மலை பாடல்


திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அறிகிறேன்!

திருவண்ணாமலையில் நடந்தவை, மகத்துவம்!

முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.

முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.

முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...

ஆமாம், ஏன் லிங்கத்தைஆண் குறியில் நினைத்து ஒட்டவைத்து பார்க்கிறார்கள்...

கதை இப்படி போகிறதாம்... நண்பர் கூறினார்...

சிவபுராணம், பார்வதியின் காமம், ராட்சசவதம், ராமேஸ்வரம், ஆண் குறி விழுந்த பகுதி, பிறகு பார்வதி செய்த பூஜை, கிடைக்கிறது சிவ பலம!

Monday, August 10, 2009

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை

இந்த பதிவை படியுங்கள்.

உரையாடல் போட்டியும் என் கதையும்

அப்புறம் அங்கு குறிப்பிட்ட முடிவுகள் ப்ளாகில் நடந்த பின்னூட்ட சம்பாசனை பாருங்கள். கேவலம். மனிதன் ஓபனாக ஒன்றும் பேசக்கூடாதா? இப்போ தெரியுது ஜெயமோகன், மம்மி ரிடர்ன்ஸ் எல்லாம் வருதுன்னு...

அப்புறம் சில பதிவுகளில், உண்மையான விமர்சனம் ( அவர்கள் வேண்டுமென்று கேட்டுள்ளார்கள் ) செய்தால் கூட சிலருக்கு எங்கோ சொரிகிறது!

If you do not know to categorize, and explain the castigation's, then why the f*** run a contest?

நாங்கெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன்க. எதோ போலச்சிகிட்டு இருக்கோம். இப்போ இலக்கியம் வேறு சதுவுறோம்...

எங்கப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம் ... "குட்டிது பொறப்பு அலாக!".

நான் சொல்ல விரும்பவில்லை!

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை. குடி ஒன்றும் முழுகி விடாது!

Saturday, August 8, 2009

உரையாடல் போட்டியும் என் கதையும்

என்னுடைய உன்னை கொல்ல வேண்டும் கதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பினேன்.

படித்தார்களா என்று தெரியலே?

நிச்சயம் படிச்சிருக்கமாட்டாங்க?

ஏன்னா , இங்கே படியுங்க... ( சே... என்னை செலக்ட் பண்ணலே )

"சிறுகதைப் போட்டி முடிவுகள்"

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

பரிசு ஏன், எப்படி, எதுக்குன்னு ஒரு விவரம் இல்லே?

எனக்கு பரிசு இல்லே? நிஜமாவே அழுகை வருது! முதல் முறை கதை எழுதினேன். அந்த முப்பத்தி ஏழில் இருக்கா?

( ஒரு கிண்டல் - என்ன வெற்றி பெற்ற பாதி பேர், நடுவர்களின் நண்பர்களா? சில பேர் ஏற்கனவே பதிவுலகில் பிரபலம் வேறே... என் கதையை பப்ளிஷ் பண்ணுங்க ப்ளீஸ்! )

Thursday, August 6, 2009

ஒரு நண்பரின் பதிலுரை

நான் இப்படி எழுதியதற்கு.... நண்பர் சொல்லுகிறார்

//அமெரிக்காவில் டெஸ்டிங்க் வேலை வாங்குவதும் எளிதல்ல// :-)

அப்படிதான் ஏற்கனவே அங்கு இருக்கும் நம் நண்பர்கள் சொல்லுவார்கள். அவர்கள் மனைவிமார்களை அங்கு வேலை செய்ய வைக்க இது எளிய வழி!

மற்றவர்கள் அங்கு வந்துவிட்டால் ப்ராப்ளெம். எங்களுக்கே இப்போ ரிசசென். எதுக்கு நீங்க வரீங்க?

என் ஆண் நண்பர்கள் அங்கு கல்யாணம் செய்து சென்றவுடன் மனைவிகளுக்கு ( திறமை இருந்தால் தான்.. டிகிரீ..) உடனே வேலை வாங்கி கொடுக்கிறார்கள், குறைந்த பட்சம் அறுபதாயிரம் டாலர்கள் சம்பளம்.

அப்புறம் இன்னும் ஒன்று, பே ஏரியாவில் வயர்லேச்ஸ் நெட்வர்க் ஆட்கள் தேவை என்று எவ்வளவு விளம்பரங்கள் மான்ச்டரில் இருக்கு தெரியுமா? நான் வேறு எஸ்.ஏ.பி. படித்துவிட்டேன், பெருஞ்செலவுடன். அதனால், அந்த வழியில் போகவேண்டும்.

நானும் கம்ப்யுட்டர் சாப்ட்வேர் துறையில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன். அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என் சொந்த கருத்து தான்...திணிக்கவில்லை.. )

http://www.linkedin.com/in/rajusundaram

Link with me...

பெங்களூரும் திருவள்ளுவரும்

நான் தமிழ்நாட்டுக்காரன்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைப்பது குறித்து மகிழ்ச்சி.

சென்னையில் சர்வஞனா சிலையும் வருகிறது.

இரு மாநில முதல்வர்களும் திறக்கிறார்கள்.

சரி பெங்களூரில், ஏதாவது மொழி பிரச்சனை வேண்டும் என்று திரிந்துக்கொண்டு இருக்கும் வட்டாள் கூட்டம் நினைத்தால் பயம் தான்.

ஊர்வலத்திற்கு தடை போட்டுளார்கள். இருந்தாலும் கலவரம் வரும் அபாயம் இருக்கு.

***

அம்மாவை அழைத்து வந்த தம்பி ஞாயிறு இரவு கிளம்பிவிட்டான். அவனுக்கும் சேட்டிங் செய்த ஒரு பணக்காரி கல்யாணம் செய்துக்கொள்வது பற்றி வருத்தம். இருந்தாலும், டெக்சாசில் இருக்கும் ஒரு பெண்ணோடு, நல்ல பழக்கம் என்கிறான். ஆந்திர பெண்ணாம். ரெகார்ட் செய்த வீடியோ கூட காட்டினான். ஊர் பேர் விலாசம், பொன் நம்பர் எல்லாம் வேறு கொடுத்துள்ளாள். டிடெக்டிவ் ஆள் வைத்து விசாரிக்கலாம்! அவளும் செய்திருப்பாள். எனக்கும் இரண்டு மூன்று முறை, சில பேங்க் கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று கேட்டு, மொபயிலில் போன் வந்தது. குடும்ப விபரம் எல்லாம் கேட்டார்கள். ஒழுங்காக பதில் சொன்னேன். என் கம்பெனி அட்மின் அக்கவுண்ட் பாஸ்வோர்டு தவிர மற்ற எல்லா விபரம், என் கம்பெனியில் ஷேர் விபரம் உட்பட கூறினேன்! :-) பார்ப்போம்.

***

நண்பர் சரவணோடு நேற்றும் ஒரு பெண், தான் தான் இன்போசிஸ் மூர்த்தியின் மகள் அக்ஷதா என்று சேட்டிங் செய்கிறாளாம்! அவளுக்கு தெரியாது, நிஜ பெண்ணின் கல்யாண நியூஸ். அவளை மடக்க "ஒரு ப்ராப்ளம், சில லட்சங்கள் வேண்டும் என்று கேள்", என்றேன். கேட்டுள்ளான்... அதன் பிறகு சேட்டில் ஆள் காணோமாம்! எஸ்கேப்பு!

திருமண நியூஸ் பேப்பர் லின்க்ஸ் அனுப்ப சொன்னேன். இன்று தெரியும் குட்டு. :-)

***

இன்று காலை எங்கள் கம்பெனியில் இலவசமாக ட்ரெயினி எடுக்கிறோம் என்று சொன்னதற்கு, இரண்டு மூன்று வருட எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் எல்லாம் ( சாப்ட்வேர் தான்! ) வந்திருந்தார்கள் .... என்னை பொருத்த வரை ஒன்றும் தேறவில்லை. இவன் சொந்தம், அவன் சொந்தம், பாஸுக்கு சொந்தம் என ஐந்து ஆட்கள் எடுத்தோம்! இப்படிதாங்க சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் நடக்குது. :-) அப்புறம் சரியான ட்ரெயினிங் பூட்காம்ப் நடத்தினால் நன்று!

***

நாற்பது லட்சம் அளவில் ஒரு இரண்டு பெட்ரூம் ப்ளேட் வாங்கும் எண்ணம் வந்துள்ளது. அம்மாவிற்கும் அந்த வீடு பிடித்தது, கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. இன்னும் சில லட்சங்கள் தேவை, அட்வான்ஸ் கொடுக்க. என்ன செய்வது தெரியவில்லை.

***

வெள்ளி மதியம் சேலம் வழியாக ஊருக்கு கிளம்புகிறேன், அம்மாவோடு... இனி அடுத்த செவ்வாய் காலை தான் திரும்புகிறேன். கல்யாணம் நிச்சயம் என்று போகிறது வாழ்க்கை. இன்று வரை நான் ஒரு முடிவும் எடுக்கவில்லை! :-)

Tuesday, August 4, 2009

பதிவுலக போதையும் மன வாழ்க்கையும்

இந்த பதிவை முதலில் படியுங்க. நிஜமா நீங்க படிக்க வேண்டிய பதிவுங்க.

பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை

அப்புறம் நான் போட்ட கமன்ட்.

:-)

என்ன சொல்றதுன்னு தெரியலே!

கொஞ்சம் ஓவரா எழுதிட்டீங்க போல?

நீங்க சொல்றத பார்த்தால், கல்யாணத்துக்கு அப்புறம் எழுதிறதெல்லாம் மூட்டை கட்டி வைக்கணுமா?

அப்போ எழுத்தாளர்கள் எல்லாம், வீட்டிலே பர்மிசன் வாங்கிட்டு தான் எழுதனுமா?

அது தான் விடிய விடிய எழுதறாங்களா? அரசாங்க உத்தியோகத்தில் போய் உட்கார்ந்துக்கிட்டு, மத்தியானம் நல்லா தூங்கலாம்!

சரி ஒரு க்வேச்டியன், அந்த தங்கச்சியும் ஒரு ப்ளாக் எழுதலாம், தன் நிலைமை பற்றி. அப்பவாவது புருஷன் தெரிஞ்சிகிட்டும். அப்புறம் கம்ப்யுட்டர் கத்துகிட்டால், வேலைக்கு போகலாம் ( அமேரிக்காவில், டெஸ்டிங் தொழில் ஈசி )... பணம் வந்தவுடன் ஜாலியா சுத்தலாம். பல நாடுகள் பார்க்கலாம்....

இண்போசிஸ் நாராயண மூர்த்தி மகளுக்கு கல்யாணம்

இண்போசிஸ் நாராயண மூர்த்தி மகள் அக்ஷதா மூர்த்திக்கு ( என்னை விட மூன்று வயது சிறியவர் ) தன் கூட படித்த ஸ்டேன்போர்ட் க்ளாஸ்மேட் ரிஷி சுனக்கோடு கல்யாணம்!

ஆகஸ்ட் 30 பெங்களூரில். பெரிய அளவில் நடக்கும் என்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை.



ரிஷி சுனக் பிரிட்டிஷ் சிட்டிசன் (படத்தில் இடது கோடி, அக்ஷதா வலது கோடி - பார்க்க அவர் அம்மா மாதிரி இருக்கிறார்). குழந்தைகள் நல காப்பு சேரிட்டி பண்ணுகிறாராம். மச்சக்காரர்!

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

***
எனக்கு நாராயண மூர்த்தி குடும்பம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இன்று காலை என் ரூம் மேட சரவணன், நான் சேட்டிங் செய்துக்கொண்டிருந்த பணக்காரி கல்யாணம் செய்கிறாள் என்று சொன்னதில் இருந்து விவரம் தேடுதல் ஆரம்பம்... ( சரியான உடான்ஸ் பார்டி போல! )

Monday, August 3, 2009

புத்தம் புது காலை

புத்தம் புது காலை இன்று ஏழு வாரங்கள் கடந்த பிறகு, நான் என் அலுவலகத்தில்! :-) எல்லோருக்கும் வாங்கி வந்த சாக்லேட்ஸ். என் பாசுக்கு ஒரு சிறு கிப்ட். ( ஐஸ் ஐஸ் பேபி ).

என் மேஜையை (கேபின் - கதவு வைத்தது) கான்பரன்ஸ் ஆக உபயோகித்துள்ளனர்.

நல்ல வேலை, என் லெட்டர்ஸ் அனைத்தும் நண்பர் ஒருவர், எடுத்து வைத்திருந்தார். சில பல ஸ்பேம்.

ஆண்லயினில் கிரெடிட் கார்ட் பில் கட்டிவிட்டேன். அதனால் விட்டது தொல்லை. கொஞ்சம் கூட கார்டல் எக்ச்பென்ஸ் செய்யலே!

பாஸிடம் நல்ல பேர். அங்கு ஆகும் செலவுகள், வரும் வருமானம் பார்த்து, இன்னும் ஐந்து யுரோ ஜாஸ்தி கொடுத்தார் ஒரு நாளுக்கு. பரவாயில்லை.

இன்னும் ஆறு வாரத்தில் இரு நண்பர்களும் ஆம்ச்டேர்டேமில் இருந்து திரும்புவார்கள். அதற்குள் எல்லா வேலையும் முடிந்திருக்கும்.

அடுத்த ப்ராஜக்ட் தேட வேண்டியது தான்.

அமெரிக்காவில் இருந்து ஒரு ஈ.ஏ.ஐ. ப்ராஜக்ட் வருதாம். பாசும் நியூ யார்க்கில் அல்லது வாஷிங்கடனில் ஆபிஸ் திறக்க ஆயுதம் செய்கிறார். பார்ப்போம். இன்னும் பத்து புது முகங்கள் ஆபீஸில் வரும்.

Sunday, August 2, 2009

வரும் மழையில்

பன்றி காய்ச்சல் என்பதை யாரும் டெஸ்ட் பண்ணுவதில்லை பெங்களூரு ஏர்போர்ட்டில் . கொடுமை. நாற்பத்தைந்து நாட்கள் கடந்தும், ஒன்றும் கண்டுக்கொள்வதில்லை? ஒரு பாரம் மட்டும் பில் செய்கிறார்கள். யாரவது, சளி, காய்ச்சல் இருந்தால், செக் செய்ய ஒரு ஒரு டாக்டர் இருக்கிறார்.

நேற்று அதிகாலை தான் ஏன் கம்பெனி நண்பர் ரவியோடு வேலை செய்ய இன்னொருவர் வந்தார். அவருக்கு எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். உடனே நான் புறப்பட்டேன்.

இன்று காலை தான் வந்து இறங்கினேன். மும்பையில் சில மணி நேரம். மலை தூவானம்! கச்டம்சில் அள்ளுகிறார்கள். லஞ்சமாய் கொட்டுது. சாப்ட்வேர் ஆள் என்று எழுதி ஒட்டியிருக்கும் போல, கேவலமாக பார்கிறார்கள்!

தம்பியும் அம்மாவும் ரூமில் வந்து இருந்தார்கள். பத்து மணிக்கு வீட்டில் அம்மா கையால் உப்புமா. அமிர்தம்! :-)

சரவணனுக்கு வாயெல்லாம் பல். சில பல சீக்ரட் கிப்ட் அவனுக்கு. ( ரூம் மேட் ). டிஜிடல் கேமரா கொஞ்சம் கம்மி விலையில் ( 80 யுரோ ) கிடைத்தது. 10 எம்.பி. 4 GB ஸ்கேன் டிஸ்க் உட்பட. நல்ல விலை தான்! ( இங்கே எழாயிரம்! )

ஆம்ஸ்தெர்டெம்ல் நல்ல பல சாக்லேட்ஸ் கிடைத்தது. நாளை அலுவலகத்தில் அனைவர் வாயிலும் பாலாக (!) இருக்கும்.

களைப்பில் பேசிக்கொண்டே தூங்கிவிட்டேன், இப்போ தான் எழுப்பினார்கள். சிக்கன் குழம்பு கம கமக்குது!

ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் கிடைக்கபெற்றேன். இப்போது தூங்கி எழுந்தவுடன் படிக்கிறேன்.

"கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”"

புத்தகம் கிடைக்கும் இடம்: (Rs 70/- MO)

vamsi books
19, T.M.saroan
Thiruvannamalai

***

கல்யாணம் ஏகதேசம் முடிவு செய்த மாதிரி தான். பிறகு எழுதுகிறேன். இந்த ஜோதிடம் அல்பாயுசு செவ்வாய் போன்ற விசயங்களை ஆழ்ந்து பார்க்க வேண்டும். அம்மா நம்புகிறார்கள்!

மன ஒற்றுமை தான் முதலில் வேண்டும். இப்போ பார்த்து வைத்திருக்கும் பெண்ணும் என்னை மாதிரி ஹிந்தி தெரியாதவள். ப்றேஞ்சாவது தெரிந்திருக்கவேண்டும். கீழை நாட்டு பின் நவீனத்துவங்கள் படிக்க வசதி.

நன்றி!

Thursday, July 30, 2009

சின்ன புன்முறுவல்

வடகரைவேலன் எழுதுன பதிவு ஒன்னு படிச்சேன். மனசுலே கப்புனு ஒட்டிகிச்சு. ஒரு கமன்ட் போட்டேன்.

"மக்கட் பதர்"

தீரா மாதவராஜ் மாதிரியே எழுதறீங்க. சவுத் சைடு... நல்ல தமிழ். இப்போ தான் அவர் ப்ளாகையும் படிச்சேன்.

கூரியர் ஆட்கள் பத்தி ஒன்னு சொல்லியே ஆகணும். என்னோட எம்.பி.ஏ ப்ராஜக்ட் சென்னையிலிருந்து வந்தது. (எப்படியோ ஐ.ஐ.எம். கனவு கரசிலே முடிந்தது ) எங்க கம்பனியிலே முழு பேர் இருந்தா தான் வாங்குவாங்க. ஷார்ட் பேருலே ( எப்பவும் போல ) கொடுத்திட்டேன். திருப்பி அனுப்பிட்டாங்க. நல்ல வேலை மொபையில் நம்பர் இருந்தாலே, அந்த கூரியர் ஆள் கூப்பிட்டான். நான் வெளியே போய் வாங்கினேன். தேங்க்ச்னு ஒரு இருபது ரூபா கொடுத்தேன். அவன் கண்களில் சந்தோசம். சில சமயம் படிச்ச ஆட்களை விட ( எங்க ரிசப்சனிஸ்டு எப்பவும் யார் கூடையே கடல போட்டுட்டு இருப்பா ) அவீங்க பெட்டர் அண்ணாச்சி. நிலைச்சு நிப்பாங்க ஒரு இடத்திலே.

இன்னொரு விஷயம்... ஆறு மாசம் ஒருக்கா ரெகுலரா ஒரு டென்டிஸ்ட் கிட்டே போவேன். அங்கே வேலை பாக்குறே அக்காவை பார்த்து சிரிப்பேன். தமிழ் தான். நல்ல இருக்கீங்களானு கேப்பேன். ஒரு நாள், சரியான பல் வலி. கருப்பட்டி மிட்டாய் ஊரிலேசாப்டது , கடலை உள்ளே சிக்கிடுச்சு போல. பெங்களூர் வந்து டென்டிஸ்ட் கிட்டே போனா, அவீங்க இல்லே. அந்த அக்கா தான் க்ளீன் பண்ணி வுட்டாங்க. சரி ஆகிடுச்சு. பழக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, க்ளீன் பண்ணாமே பல்லே போயிருக்கும். டாக்டரும் கரக்டா பண்ணுனே சொன்னாங்க.

ஒரு சைகாலஜி புத்தகத்தில் படிச்சேன், யாருக்கு நாங்க சிம்பத்தி கொடுக்கிறோமோ, அவீங்க இன்னும் நல்ல பேர் வாங்கனும்னு நினைப்பாங்களாம் . நீங்க சொன்ன வரிகள், சின்ன புன்முறுவல், நிச்சயம் தேவைங்க!

Wednesday, July 29, 2009

வில்லத்தனம்

இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களின் வில்லத்தனம் இன்று தான் தெரியுது.

ஆபாசம், கேனத்தனம் என்று என்னெனவோ வார்த்தைகளில் சங்கமிக்கலாம், இந்த விவாதத்தை. பரமஹம்ஸரெ நேரில் வந்தாலும் எவர்க்கும் புரியாதது.

ஒருவர் மற்றவரை அடித்துக்கொல்வாராம் விவாதத்தில், புராண தண்டனை தருவாராம். நல்ல நிலையில் இருந்துக்கொண்டு உதவி பெற்று தான் வாழ்கிறேன் என்பாராம். இன்னொருவர் அமெரிக்கா சென்றால், வேண்டாம் கசக்கும் என்கிறார். இருந்தாலும் பரவாயில்லை, கீழை நாடுகளில் இருப்போர் ஏரியாவில் தங்கிக்கொள்வேன் என்கிறார். ஆங்கிலத்தில் பிளந்து கட்டும் ஒருவர், தலை சுற்றுகிறது கண்ணையா... ஏன்ட்டி இலாகா ராசியேவு? குறிப்பிட்ட மாதிரி, ஆங்கிலம் படிக்க புரிந்துகொள்ள ஒரு தன்மை வேண்டியதில்லை. எவன் வேண்டுமானாலும், எவன் எழுத்தை படிக்கலாம். காசிருந்தால் புத்தகம் ( புதியதோ, பழசோ ) இல்லாவிட்டால், இணையத்தில் இருக்கவே இருக்கு.

சினிமா ரசிகர்கள் அஜித் 'தல' வெர்சஸ் விஜய் என்பது போல இருக்கு. ஆனாலும் ஆளாளுக்கு போட்டி போட்டு உதவிக்கொள்வார்கள். இங்கேயும் அது தான் நடக்கு. நடக்கட்டும்...

அப்பாடா சாமி, நிறைய டைம் இருக்கு. அம்மா பொழப்ப பார்க்கணும்!

Thursday, July 23, 2009

தாய்மை

லதானந்த் அவர்கள் எழுதிய தாய்மை பதிவு படித்தேன்....

நாங்கள் சிறு வயதில் நாய் வளர்த்தது ஞாபகம் வந்தது.

அந்த பதிவில் நான் இட்ட கமென்ட்....

//உண்ணொரு ஆண் குட்டி பேர் வெக்கிரதுக்கு முந்தியே செத்துப்போச்சு! காரணம் நெம்ப வேதனையானது.//

?? என்ன ஆச்சு?

இப்போவெல்லாம் வெடினரரி டாக்டர் தான் பிரசவம் பாக்குறாங்களா?

எங்க ஊரிலே, குட்டி போட்டப்புறம் தான் வெடினரரி டாக்டர் கிட்டே கொண்டுப்போனோம்!

ரெண்டு நாள் பசும்பால் தான் குட்டிக சாபிட்டுச்சு. அம்மா பால் அப்புறம் தான்.

அப்பா போலீசிலே இருந்ததாலே... ஒரு குட்டி தவிர மத்த மூணு ப்ரெண்ட்ஸ் எடுத்துகிட்டாங்க.

***

ராஜபாளையம் நாய்கள் குட்டி போடுவது குறைவு. அதுவும் நன்கு வளர்ந்த போட்டிகள் சில சமயம் நான்காவது இடும்.

பெங்களூரில் கோரமங்களா ஏரியாவில் சாயந்திரம் சில வாகிங் செல்லும்....

என் காதலி லதா

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள். அதில் பிடித்தது... காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...

படித்தால்... பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

முகம் வாடியிருந்தது... முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாப்பிள்ளைபிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2 டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாபிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா..."

விசும்பல்..

"அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவேள். ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் ... ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!