Friday, August 14, 2009

வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள்

எங்கள் ஊர் வீட்டுக்கு ஒரு முறை வந்த ஒரு சாமியார் ( குரு ) வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் தேவை என்று சொன்னார்.

* சுற்றம்
* பணம்
* ஆன்மீகம்

எதற்கு என்று கேட்டேன். வயது வரும் போது உனக்கே தெரியும் என்று சொன்னார்.

நிறைய சுவாமிகளிடம் கேட்டேன், விளக்கம் இல்லை.

இன்று அந்த சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறார் ( ஆன்மீகம்? ). நல்ல பெரிய இடது சீடர்கள் ( சுற்றம்? ) மட்டும் பணம் (?) கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எந்த தியான வகுப்புக்கும் ரூபாய் ஆயிரம், ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம், மூன்று லட்சம் என்று வாங்கி ( டாலர்களிலும் கொடுக்கிறார்கள்... ) ஆசிரம சேவைகளை அருமையாக செய்கிறார்.

போலீசாருக்கு மத்திய உணவு அளிக்கிறார். இலவச தியான வகுப்பு கொடுக்கிறார். (?) தினமும் ஒரு இருநூறு பேர் அங்கு இலவசமாக சாப்பிடுறாங்க!

இந்த பவுர்ணமி அன்று அங்கு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன், என்னை கண்டுக்கொண்டார். சிறிது நேரம் பேசினார். அப்பா மறைவு பற்றி வருத்தம் தெரிவித்தார். அப்பாவின் குரு ( விசிறி சாமியார் ) தான் அவருக்கும் குரு. ஞானம் கொடுத்தவர். எல்லாம் கஷ்டமும் வாழ்க்கைக்கு படிப்பினை என்றார்.

அப்போது ஒருவர் வந்து ஒரு கிலோ எடையில் தங்கத்தில் செய்யப்பட உருத்திராட்சம் மாலை அணிவித்தார். என்னே பக்தி. ஸ்வாமிகள் என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். ஆயிரம் அர்த்தங்கள்!

நான் என் வண்டியில் ஆசிரம உள்ளே வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விடுகிறார்கள். எல்லாம் அவரை தெரிந்ததால் தான்! மற்றவர்கள் எல்லாம், வெளியே தான் வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல வேண்டும். ( சாமியார்களிடதிலும் ஏற்ற தாழ்வு, சூது வாது உண்டா? )

எனது ஆந்திர முஸ்லீம் நண்பர் ஒருவரும் அவரிடம் தியான வகுப்பு படித்தவர். ஒரு பவுர்ணமியில் வரம் வாங்கினார், நல்ல பெண் அமைய. இன்று அவருக்கு ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தில் இருந்து சம்பந்தம் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வந்துள்ளது. ஆன்மீகத்தில் மதம் கிடையாது என்பது நிரூபணம் ஆயிற்று போல. (!)

+++++++++++++

சரி நான் கண்டுகொண்டது என்ன?

ஆன்மீகம் - வாழ்க்கையை சந்தோசமாக அணுக, நல்ல சுற்றமும், பணமும் இருந்தால்

சுற்றம் = உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - காசு இருந்தால் தான் எல்லாம்.

பணம் = சுற்றம் மற்றும் ஆன்மீகத்திற்கு இது மிகவும் அவசியம்.

எல்லாமே ஒரு லூப் தான்.

தன் கையே தனக்குதவி.

Wednesday, August 12, 2009

அழகர் மலை பாடல்

இளையராஜாவின் மூசிக்கில் அழகர் மலை பாடல்


திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அறிகிறேன்!

திருவண்ணாமலையில் நடந்தவை, மகத்துவம்!

முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.

முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.

முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...

ஆமாம், ஏன் லிங்கத்தைஆண் குறியில் நினைத்து ஒட்டவைத்து பார்க்கிறார்கள்...

கதை இப்படி போகிறதாம்... நண்பர் கூறினார்...

சிவபுராணம், பார்வதியின் காமம், ராட்சசவதம், ராமேஸ்வரம், ஆண் குறி விழுந்த பகுதி, பிறகு பார்வதி செய்த பூஜை, கிடைக்கிறது சிவ பலம!

Monday, August 10, 2009

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை

இந்த பதிவை படியுங்கள்.

உரையாடல் போட்டியும் என் கதையும்

அப்புறம் அங்கு குறிப்பிட்ட முடிவுகள் ப்ளாகில் நடந்த பின்னூட்ட சம்பாசனை பாருங்கள். கேவலம். மனிதன் ஓபனாக ஒன்றும் பேசக்கூடாதா? இப்போ தெரியுது ஜெயமோகன், மம்மி ரிடர்ன்ஸ் எல்லாம் வருதுன்னு...

அப்புறம் சில பதிவுகளில், உண்மையான விமர்சனம் ( அவர்கள் வேண்டுமென்று கேட்டுள்ளார்கள் ) செய்தால் கூட சிலருக்கு எங்கோ சொரிகிறது!

If you do not know to categorize, and explain the castigation's, then why the f*** run a contest?

நாங்கெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன்க. எதோ போலச்சிகிட்டு இருக்கோம். இப்போ இலக்கியம் வேறு சதுவுறோம்...

எங்கப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம் ... "குட்டிது பொறப்பு அலாக!".

நான் சொல்ல விரும்பவில்லை!

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை. குடி ஒன்றும் முழுகி விடாது!