Thursday, September 10, 2009

அமெரிக்கா பயணம்

ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பெனி வேலை விசயமாக அடுத்த வாரம் நியூ யார்க் பயணம் செல்லுகிறேன். விசா, டிக்கட் ரெடி.

ஊரிலிருந்து அம்மா இன்றிரவு வருகிறார்கள். தம்பியும் சனிக்கிழமை காலை வருவான். என்னோடு முன் கம்பெனிகளில் வேலை செய்த நண்பர்களை அங்கிருக்கும் போது இரவு சந்திப்பேன்.

ஒரு வாரம் தான் அங்கிருப்பேன் என்றாலும், மூன்று அல்லது நான்கு நாட்களில் வேலை முடியலாம். இது முதல் கட்ட வேலை. எச்டிமேசன். அதன் பிறகு, மீண்டும் ஒரு ட்ரிப் எங்கள் கம்பெனி ஆட்கள் செல்லலாம். இதுவரை எங்கள் கம்பெனி அங்கு கிளை திறக்கவில்லை. இந்த முறை பாஸ் அவர் தம்பி கம்பெனி மூலம், முயற்சிக்கலாம். அவர் தனியாக ப்ரன்ட்லயின் என்று பாடி ஷாபிங் செய்து, பிற்பாடு விசா வாங்குவதில் ப்ளேக் லிஸ்ட் செய்யப்பட்டார் என தெரியுது. அதனால், ஒரு புதிய கிளை நிறுவனம் உருவாகலாம்.

பாஸும், நானும், வரும் சனி இரவு கிளம்புகிறோம். நியூ யார்க்கில் ஞாயிறு காலை பத்து மணியளவில் இறங்குவோம், ப்ரேன்க்பர்ட் வழியாக. லுப்தான்ஸாவில் டிக்கட் புக் செய்துள்ளார்கள். இருவருக்கும் ஒரே க்ளாஸ் தான்! ஹாம்ப்டன் இன்னில் ரூம் உண்டு. அந்த கம்பெனிக்கு நடை தூரம் தான். இந்த ஒன்பதரை மணி நேர ஜெட்லாக் என்பதை முதன்முறை அனுபவிக்கவேண்டும்.

இது வரை நான் சென்ற நாடுகளில் ஆஸ்த்ரேலியாவில் தான் ஜெட்லாக் தொந்தரவு இருந்தது. அதிகாலை சீக்கிரமாகும், தூக்கம் கண் கலங்கும், பிறகு மதியம் லேட்டாக தூக்கம் வரும். சிறிது காலம் அங்கு சென்றாலும், அதிகாலை ஏழு மணிக்கு வேலைக்கு சென்று, மதியம் நான்கு அல்லது ஐந்து மணியளவில் முதல் வாரம் வீடு திரும்பினேன்.... எவ்வளவு கஷ்டம் பாருங்கள்...

நியூ யார்க்கில் இருக்கும் எங்கள் கம்பெனி டைரக்டரும், அப்புறம் ஒரு ஜென்ட்டு உடன் வேலை சக்சஸாக முடிக்கக் வேண்டும்! ஒரு ட்ரேடிங் ப்ளேட்பாரம் ப்ராஜக்ட் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்! சிறியதாக இருந்தாலும், நல்லதாக இருக்க வேண்டும். ( மெயின்டெனன்ஸ் - இதுவும் ஒரு பெரிய நிறுவனம் செய்து முடித்து, ஒரு வருடத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது - காசு உருஞ்சிகிறார்கள் போல! )

:-)

சரி சரி நியூ யார்க்கில் என்னவெல்லாம், சுற்றி பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் லிஸ்ட் கொடுத்துள்ளார்கள். குறைந்த காலம்... அடுத்த ஞாயிறு இரவு செப்டம்பர் இருபது ஒன்பது மணிக்கு இந்தியா திரும்பி வரும் ப்ளைட். அதனால் இரண்டு நாட்கள் ( சனி, ஞாயிறு ) கொஞ்சம் சுற்றி பார்க்க கிடக்கும். என் பாஸு அவர் தம்பி வீட்டில் ( நியூ ஜெர்சி ) தினமும் சென்று விடுவார். நானும் வெள்ளி, சனி இரவு நண்பர் வீட்டில் இருப்பேன். ஞாயிறு ஐந்து மணிக்கு ஜே.எப்.கே. ஏர்போர்ட்டில் இருப்பேன்.

செவ்வாய் அதிகாலை பெங்களூரு வந்தடைவோம்.

திரும்பி வரும் போது, ஒன்றும் கொண்டு வர இயலாது. எப்பவும் போல சாகலேட்ஸ் தான். லேப்டாப் ஒன்று வாங்கி வர / கொண்டு வர நண்பர் ஒருவர் சொன்னார், முடியாது. ஒன்று தான் அலவ்டு.

***

தம்பியின் பியான்செவை சந்திக்கும் சான்ஸ் கிடைக்கலாம்! ஏற்கனவே எழுதியுள்ளேன்.

***

யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஒரு லிங்க் கொடுத்தார். அதில் சில தமிழ் டாகுமன்ட்ஸ் ( கதைகள், கட்டுரைகள்) உள்ளன.

Tuesday, September 8, 2009

பத்தாயிரம் வாசகர் பார்வைகள்

பத்தாயிரம் வாசகர் பார்வைகள் வரப்போகுது! நண்பர் விஜயஷங்கர் சொல்லி விளையாட்டாக இந்த வலைப்பூ ஆரம்பித்தேன். இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள். எழுதுவதற்கு ( என் தாய்மொழி இல்லாவிட்டாலும் ) நிறைய விசயம் உண்டு இங்கு. இன்னொரு நண்பர் சுந்தரவடிவேலுவும் அவர் ஊக்கம் கொடுத்து எழுத வைக்கிறார்!

ஒரு புதுவை பதிவர், என் மனதை புண் படுத்தியமாதிரிஇருந்தது. அவரும் மன்னிப்பு மெயில் போட்டுள்ளார். தேங்க்ஸ். மறப்போம் மன்னிப்போம்.

***

நூற்றி முப்பது பதிவுகளில், ஒரே ஒரு கதை, அதுவும் சொதப்பல். அதோடு நின்றது கதை எழுத்துப்பயணம். ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினேன். பரிதாபம்!

கவிதை இன்னொன்று இங்கே...

பத்தாயிரம் பார்வைகள் வந்தன
பரவசம் அடைந்தேன்
நிலாச்சோறு கிடைக்குமா என்றிருந்தேன்
பவுர்ணமி வந்தது
அம்மா இல்லாத ஏக்கம்
பாசம் கிடைக்காது துக்கம்
வருகிறாள் புது மனைவி!

அப்புறம் இந்த மாதிரி ( அதிஷாவின் கவிதை ) எனக்கு வராது!

நீல நிற இரவுகளில்!

***

நான் படித்த கோவை கல்லூரி நண்பர்கள் ( முற்றிலும் சீனியர்கள் ) ட்விட்டரில் இருக்கிறார்கள்... வெண்பா, அது இது என்று தூள் கிளப்புறாங்கையா! நானும் தான் ட்விட்டர் பண்ணுறேன்.

***

வேலை விசயமாக இந்த வார கடைசியில் நியூ யார்க் பயணம் - ஒரு வாரம் - ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பனிக்கு சாப்ட்வேர் வேலை இருக்கு. நாளை அமெரிக்கன் விசா வாங்க சென்னை செல்கிறேன். பயம் தகிடதோம் போடுது. சுவையின் ப்ளு வேறே ஆட்டம் காட்டுது!

அப்துல்லா அண்ணன் பதிவில் பார்த்த விஷயம் மனதில் கொண்டு மேலும் வினிதாவின் பதிவில் கண்ட விஷயங்கள் மனதில் கொண்டு, தயார் செய்து வேண்டுகிறேன்.

காசே தான் கடவுளடா

All about USA visa

கடைசியில் எங்கள் கம்பெனிக்கு நல்லது நடந்தால் சரி.

எனக்கும் தான்! :-)

Monday, September 7, 2009

குரு சில கேள்விகள்

ஸ்வாமி ஓம்காரின் ஸ்ரீ சக்ர புரி தொடர் படித்து திருவண்ணாமலை மகிமை பற்றி தெரிந்துக்கொண்டேன்.

"ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15"

அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.

எனக்கு சில கேள்விகள் உண்டு.

* குரு என்பவர் யார்?
* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?
* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?
* குரு என்பவர் மெஸ்அய்யா தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?
* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?
* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )
* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)
* குரு என்பவர் தன குடும்பத்தை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?