Saturday, September 26, 2009

உன்னை போல் ஒருவன் பற்றி

எப்படியோ இன்று மதியம் உன்னை போல் ஒருவன் ( ரிமேக் ) பார்த்தாகிவிட்டது! ஹிந்திக்கு கொடுத்த முக்கியத்துவம், தமிழில் இல்லை. ஒரு லையின் கதை, ஒரு நாளில் நடப்பது, ஆங்கில படம் மாதிரி சொதப்பி...

தாராளமாய் ஒரு தடவை பார்க்கலாம். மோகன்லால் தான் கதையின் நாயகன். அருமையான நடிப்பு. கமல் சைடு ஆக்டர் போல வந்து போகிறார். ஒரு லெட் டவுன். இந்த காரக்டரை பிரகாஷ் ராஜ் அருமையாக செய்திருப்பார்!

இரா. முருகன் வசனம். எத்தனை ஆங்கிலம் கலக்க முடியுமோ ( இதில் கமல் பேசும் அமெரிக்கன் அக்சென்ட் கொடுமை - உபயம் நியூ யார்க் ) ... ஹிந்தி மூலத்தின் வசனங்கள் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என நினைக்கிறேன்!

மூசிக் - சுருதி ஹாசன். சீனுக்கு தேவைக்கேற்ப - செல் போன் - கிர் கிர் உட்பட... முதல் படமா?

லக் தான் முதல் படம் - நடிக்க. :-)

கீழ்நிலை வர்க்கம் ( அதாவது பி அண்ட் சி சென்டர் ) பார்க்க முடியாத படம். புரியாதுங்க!

என்னோடு வந்த நண்பர்களுக்கு படம் முடிந்த ( இன்டர்வெல்லோடு இரண்டு மணி நேரம் ) பிறகு கதை வேறு சொல்ல வேண்டி இருந்தது. :-)

தேவை ஒரு குத்து பாட்டு. அந்த கைதிகளோடு ஒரு நடனம்?

சண்டை காட்சிகள் - ஹிந்தி மூலம் போல இருந்தது. கமழும் ஒரு ப்லேஷ்பேக்கில் தாடி இல்லாமல் ஒரு சண்டை போட்டிருக்கலாம்!

கமல் ( பெயரில்லா ) கேரக்டர்.... கதையில் தீவிரவாதிகள் கொல்வதை, வேறு ஒன்றோடு ஒரு லிங்க் போட்டிருக்கலாம்...

ஆமாம் இதை போலவே ஒரே நாளில் நடக்கும் குடும்ப கதை - சுஹாசினி நடிக்க வந்தது அல்லவா?

எப்படியோ, கமலுக்கு வசூல் மலை. ( அவீங்க தயாரிப்பு )

தெலுங்கு - வெங்கடேஷ் காம்பினேசன் பார்க்கணும். பெங்களூரில் ஓடுது! அதுவும் இப்படியாக இருக்குமா?

Wednesday, September 23, 2009

உன்னை போல் ஒருவன்

பொறுத்திருந்து பாருங்கள்! உன்னை போல் ஒருவன்! I am just a Common Man!

Tuesday, September 22, 2009

பெங்களூரு என் பெங்களூரு

என்ன இருந்தாலும் வாழும் ஊருக்கு திரும்பி வந்தால் ஒரு தனி திருப்தி தான். நாம் படுக்கும் படுக்கை, ஒரே இடத்தில் வைக்கும் வைக்கும் சாமான்கள், சாப்பிடும் விதம், ஹோட்டல் என...

ரம்ஜான் அன்று இந்திய திரும்பியுள்ளேன்... பிரியாணி சாப்பிடும் பாக்கியம், ப்ளைட்டில் தான்!

லுப்தான்ஸாவில் ( சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ) ப்ரேன்க்பர்ட் வரை... பிறகு அங்கிருந்து பிசினஸ் க்ளாசில் பெங்களூரு. அருமை. அப்க்ரேட்.

சாகலேட்ஸ் தவிர வேறு ஒன்றும் வாங்கவில்லை. ஒரே ஒரு டிஜிடல் காமிரா தம்பிக்கு! வெள்ளி இரவு கிளம்பி சனிக்கிழமை தான் ஊரில். அடுத்த திங்கள் ஊரில், மதுரைக்கும் செல்ல வேண்டும். விஜயதசமி. அக்கா மகள் ஸ்கூலுக்கு சேர்கிறார்கள்!

என்ன நடு இரவில் இறங்கினால்... கஷ்டம் தான். பாஸும் நானும் ஒரே டேக்ஸியில் வீடு வரை பயணம். ரூம் மேட சரவணன், நான் கதவை தட்டியதும், அரை தூக்கத்தில் அதிகாலை இரண்டு மணிக்கு கதவை திறந்தான்...

***

படுத்து தூங்கி பத்து மணிக்கு எழுந்து குளித்து ரெடியாகி, உடுப்பி கார்டனில் டிப்பன் சாப்பிட்டு, ஊருக்கு சில போன் கால் முடித்துவிட்டு...

ஆபிஸ் போய், ப்ராஜக்ட் விசயம் எல்லாம் பார்த்துவிட்டு...

இப்போ லன்ச் டைம் ஆக போகுது! அரை தூக்கம் கண்ணை கலக்குது.... மதியம், சாப்பிட்டு தூங்கிவிட்டு சாயந்திரம் ஐந்து மணிக்கு வர வேண்டும். நியூ யார்க் கால் உண்டு! ( மாயா )

***

நிறைய நியூ யார்க் விஷயம் எழுத வேண்டும். பிறகு!