Tuesday, September 29, 2009

வரம் பற்றிய ஒரு விளக்கம்

இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு! ஒன்பது மாதங்களில்... பதிமூன்றாயிரம் வாசகர் பார்வைகள்... நன்றி நன்றி...

வரம் பற்றிய ஒரு விளக்கம் ... இதோ...

வரம் ... என் முந்தைய போஸ்டில் கூறியிருந்த செய்தியை படித்திருப்பீர்கள்!

ஸ்வாமி ஓம்காரும் அருமையான ஒரு பதிவு போட்டுள்ளார்!

நானும் வரம் தரப்போகிறேன்...!

படித்து ரசியுங்கள்!

***

நான் தினம் கேட்கும் வரம்... ( எந்த சாமியாரிடம் கேட்டாலும்... இதை தான் கேட்பேன்! )

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

அதற்கு விளக்கம்... எப்போதும் ஆரோக்கியமாக இருந்தால், நல்ல வேலை ( சொந்தமோ, அடிமை தொழிலோ செய்யலாம்! ) அப்புறம் கை / பேங்க் அக்கவுண்ட் நிறைய பணம், ஒரு மனதிற்கு பிடித்த வீடு... அப்படியே குடும்பமும் ( சொந்தம், மற்றும் வருகிறவள்.. வருகிறவன்...) நன்றாக இருக்கும்... எப்போதும் சந்தோஷம் நிலவும்!

அதிக ஆசை இல்லை! :-)

பிளாசிபோ எப்பக்ட் படியும் பார்த்தால், நம் முயற்சியே வெற்றியை அமைத்துக்கொடுக்கும்! நாம் அதை அடைவோம் என்று முன்னிறுத்திக்கொள்ள வேண்டும்!

***

சென்ற வாரம் வெள்ளி முதல் திங்கள் இரவு வரை ஊரில் கழித்தேன். மீண்டும் வியாழன் இரவு ஊருக்கு சென்று செவ்வாய் காலை திரும்ப வேண்டும். திங்களன்று சென்னை கன்சலேடில் ஒரு சிறு வேலை!

அப்போது கோவிலில் ஒரு சிறு விசேஷம்.... குடும்பம் மட்டும்! இன்னும் இருபது நாட்களில் மீண்டும் நியூ யார்க் செல்லும் வேலை இருக்கு. ஒரு வருடம் இருக்க வேண்டி வரும்.

அதனால் நிறைய எழுத முடியாது!

வரம்

ஒரு இணையத்தில் பிரபலமான எழுத்தாளர் ஒரு சாமியார் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது - ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பில் அல்லது அனுபவத்தில் வரும் என்று. கடவுள் என்பவர் ஏன் ஜிலேபி பையித்யமாக இருக்க வேண்டும்? எங்கள் வீட்டிற்கு சில சமயம் வந்த போது ( அப்பா போலீசில் இருந்தவர் ) கேட்டு சாப்பிட்ட ஒரு பலகாரம்! சுவாமியும் சமாதி நிலையும் அப்படிதானா?

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் உள்ள லிங்க் உங்களுக்கு தெரிந்திருக்கும். நல்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் அந்த ஆசிரம ஏரியாவில் நடக்கும். தங்கம் மற்றும் கணக்கில் டேக்ஸ் கட்டாமல் இருக்கும் பணம் புரளும் ( எல்லாம் பக்தர்கள் கொடுத்தது என்று - அதை மீண்டும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்கு வெள்ளையாக சென்று சேரும் ) - உதாரணம் - திருமலைகோடி தங்க கோவில்.

ஒருவர் தனக்கு தானே சிலை வடித்துக்கொண்டு, மற்றவர்களை கும்பிட வைப்பது என்ன சூத்திர தர்மம்? மாயாவதியும் அதை தானே செய்தார்? குருக்களிலெல்லாம் குரு தக்ஷிணாமூர்த்தி சொன்னது - உயிருள்ளவர்களை சிலை வடித்து கும்பிடாதே! என்னை பொறுத்தவரை அவர்கள் நார்ஷிஷிச்டிக் சைகொபாத்ஸ்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இதை சொல்லியவர், தெய்வத்திற்கு முன்னால் குரு என்பதை - சாமியார்கள் துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என தெரிந்திருக்காது!

நீங்கள் வேதாத்ரி மகரிஷி சொல்லிக்கொடுத்த குண்டலினி யோகம் பற்றி படியுங்கள், பிடடியில் நடப்பது அதன் ஒரு பாகமே! சரி சாமியாருக்கு எதற்கு பட்டு மெத்தையும், பெரிய பங்களாவும்?

மேலும் வரம் நிகழ்ந்தது என்பது - அற்புதங்களை பரப்பும் ஒரு மாய கட்டுவித்தையே. ஒரு டேடாபேஸ் வைத்து, கேட்ட வரம், நடந்தது என்ன எனபதை விலா வாரியாக யாரும் சொல்ல இயலாது! பைசா இல்லாமல் இந்த உலகில் ஒரு சுண்டைக்காயும் இல்லை, புண்ணாக்கும் இல்லை!

இதையும் படியுங்கள் நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

என் தம்பியும் மூன்று வருடங்களாக அந்த சாமியாரிடம் சென்று வரம் கேட்கிறான். திருவண்ணாமலை அல்லது பெங்களூரு - பிடடி வந்து செல்ல காசு தான் செலவு. அவர் இஷ்டப்பட்ட மாதிரி வெளி நாட்டு வேலை வரவில்லை... இன்னும் பிற!

ஒன்று தெரியுமா தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்பவனே தெய்வம்! ஏன்? எந்த மனித பிறவியும் தன தவறை, ஒப்புக்கொண்டதில்லை. ரீசன் இருக்கும்!

சரி வரம் கேட்கும் சூட்சமம் ஒன்று சொல்லட்டுமா?

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

Sunday, September 27, 2009

நானொருவன்

குருக்களே கோவிலில் கசமுசா
இது செய்தி
தெய்வம் நின்று கொல்லும்
இது பழமொழி

நானொருவன் என்று எனக்கு
தெரிந்த போது வயதென்ன?
இன்று நானே எனக்கு சொல்ல
ஆசைப்படுவது என்ன?

நாளை வரும் என்று மகிழ்வோடு
நான் காத்திருக்கிறேன்
என் வாழ்வில் வரும் புதிய ஒளி
எண்ணங்களில் பெண்மணி

வாழ்கையில் ஒவ்வொரு எண்ணம்
மகிழ்ந்திட வந்திடும்
காத்திருப்புக்கள் எல்லாம் இன்பமயம்
கனா காணும் காலங்கள்

வட்டார வழக்கு

புத்தகங்களைப் படிப்பதும் நண்பர்களிடம் பேசுவதும் மட்டும் உண்மையான தகவலைத்தராது (உண்மை என்பது என்ன என்பதும் பிரச்சனைக்குரியது)

தமிழகத்தில் இலக்கியவியாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் அல்லது பின்நவீனத்துவம் என்று பேசுகிறவர்கள் முதலில் தமிழகம் முழுக்க, குறைந்த பட்சம் மாவட்ட தலை நகரம் + ஒரு கிராமம் என்று தான் வாழும் பிரதேசத்தின் இயல்பை அறிய நேரம் செலவிட வேண்டும். அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தத்துவங்களை பேசித் திரிவதில் என்ன பயன்?


தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இருக்கிறீர்கள்? ஒரு மாவட்டத்தின் தலை நகரில் குறைந்தது ஒரு நாள் தங்கி இருக்கீறீர்களா?
அல்லது எத்தனை கிராமங்களுக்கு விஜயம் செய்து இருக்கீங்க?

என்று அவரவர் கேட்டுக்கொள்ளவேண்டிய விசயம்.


**

வட்டார வழக்கு என்பது அந்த வட்டாரத்திற்கு பொதுவான ஒன்று.
பார்பனர்கள்தான் எங்கு இருந்தாலும் அந்த வட்டாரத்துடன் ஒட்டாமல் தனி மொழி அடையாளம் காப்பார்கள்.

ஒரே வட்டாரத்தில் இருந்தாலும் பல சாதிப்பிரிவுகளுக்குள் சில தனிப்பட்ட பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கவழக்கங்களின் தாக்கம் சொற்களில் இருக்கும். இருந்தாலும் , சாதிக் கென்று தனியான வட்டார வழக்கு நானறிந்த அளவில் இல்லை.

***

கொங்கு வட்டாரத்தில் "ஏனுங்க அம்மணி" என்று ஒரு தலித் விவசாயக்கூலி சொல்வதற்கும் , "என்ன அம்மணி" என்று மிட்டாமிராசு சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கும். அது அதிகாரத் தோரணையும் , சாதியப் பெருமையும் கலந்துவரும் ஒன்று.

**

பார்ப்பண மற்றும் நரிக்குறவர்கள் தவிர்த்து சாதி சார்ந்த மொழி வட்டார வழக்கு இருப்பதாக நான் அறியவில்லை. இது அலசப்படவேண்டிய ஒன்று.