Friday, July 17, 2009

சபிக்கப்பட்ட பன்றிகள்

நல்ல பதிவு.  வடகரைவேலன் எழுதிய சபிக்கப்பட்ட பன்றிகள்

க்ரூபிசம் மற்றும் கேங் மெண்டாலிடி தான் இதற்க்கு காரணம் என்று தோன்றுது. நண்பர்கள் குழுமம் தப்பில்லை.

எதற்கு பதிவுலகில் இப்படி ஆகிறது?
ஒருவர் இன்னொருவரை தூக்கி விட்டுக்கொண்டு இருக்கும் கிருபை மற்றவர்கள் விரும்பவில்லை போலும். நானும் தமிழ்மணம் மூலம் சில நண்பர்கள் பெற்றுள்ளேன், எனக்கு கமன்ட் போடுவது முக்கால்வாசி அவர்களே!

ஒருவன் மேலே சென்றால் நான்கு பேர் கிழே இறக்கி விடுவது தான் சமுதாயத்தின் கேடு! :-(

ஒருவன் கெட்டுவிட்டால் தான் மற்றவர்களுக்கு அவல் பெற்ற வாய்... மென்று தின்ன!

சரியான சவுக்கடி.

--
Raju Sundaram

Tuesday, July 14, 2009

தேக்கம்

உலகம் முழுவதும்
கம்ப்யுட்டர் தொழில் தேக்கம்
என்ன செய்வது இந்த கவலையில்?

சோறுண்டு வீடுண்டு
ஆனால் நிம்மதியில்லை
எண்ணங்களில் தேக்கம்

காதலினால் நிம்மதி வருமா?
சொல்லடி என் பெண்ணே?
ஏன் ஆசையை தேக்கி வைக்கிறாய்?