Monday, December 14, 2009

காஸ்பல் ஆப் ஜான்

நல்ல பதிவு. இதை படியுங்கள்...

சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3 மா. வே. சிவகுமார் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை பற்றியது.

பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.

தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது... எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது!

அட்ஜஸ்ட் செய்து அனுசரித்து போகாமல் வாழ்க்கை கிடையாது.

அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?

அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!

***

காஸ்பல் ஆப் ஜான் - நான் படித்த பள்ளியில் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது... ( ஜான் 3:36 )

ஜான் சொல்லுகிறார் - ஜீசஸ் என்ற மாமனிதரை கடவுளின் மகனாக நினைத்து அவரிடம் வரம் கேளுங்கள். அந்த நம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிபோய் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற ஆயுதம் கையில் இருப்பது புலன்படும்.

Sunday, December 13, 2009

அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி?

அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி? சில பாயிண்டுகள் இங்கே, எங்கிருந்தோ சுட்டது.

1. கோவில்களுக்கு அடிக்கடி போய் வருவதால் கிடைக்கும் புண்ணியத்தைவிட பெற்றோர்களின் அந்திம காலங்களில் அவர்களை கண்கலங்காமல் பார்த்துகொள்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

2. அப்பாவை புறக்கணித்தால் சொத்து நாசமாகும்.

3. அம்மாவை புறக்கணித்தால் தனக்கும் மனைவிக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் உடல் நலம் சீர் கெடும்.

4. எனவே அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மனம் கோணாமல் அவர்களை கவனிக்க வேண்டும். மருத்துவம் செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும்.

5. இது அனைத்து மகன்களும் தங்கள் அப்பா அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை.

6. அவர்கள் இருக்கும் போது கவனிக்காமல் விட்டு விட்டு அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு செய்யும் சடங்குகளால் எந்த நன்மையையும் இல்லை.

7. கோவில் குளம் செல்வதாலும் தான தர்மங்கள் செய்வதாலும் எந்த புண்ணியமும் இல்லை.

***

கடைசி காலத்தில் அப்பா ( உயிரோடு இருந்தால் ) அம்மா ( உயிரோடு இருந்தால் ) கவனிப்பதில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. சந்தோஷம் தான்...

சரி சரி இந்த கமன்டும் படியுங்கள்...

நீங்கள் கூறுவது அப்பா அம்மா எப்படி குழந்தைகளை நடத்துகிறார்கள் என்பதை பொருத்து. எனக்கு தெரிந்து, பல கோடி சொத்து உள்ள பெற்றோர், ரிடயார்ட் காலத்தை டிரைவர் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இரண்டு மகள்களுக்கு வெறும் இருபத்தைந்து பவுன் நகை போட்டு ( ஸ்டேடஸ் அளவு ) சாதாரண ஏழை கூலி தொழிலாளியின் மகன்களுக்கு கட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரும், கொல்லி போடத்தான் வருவேன் என்று சொல்லி சொந்த உழைப்பில் நன்றாக தான் இருக்கிறார்கள். இதற்கும் அவர்கள் இருவருக்கும் அண்ணன் தம்பி இல்லை.

இந்தியர்கள் வெளிநாட்டவரும்

இந்த பதிவை படித்துக்கொண்டு இருந்தேன் "ஜப்பான் அனுபவங்கள்"
பிறகு ஒரு கமன்ட் போட்டேன்.

***

இந்தியர்கள் என்றால் அவர்கள் மட்டமாக தான் நினைக்க தோன்றுதா? இந்திய டாக்சி டிரைவரையும் நன்றாக மதிப்பு வைத்து சொல்லுங்கள்.

நியூ யார்க்கில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரவு எட்டு மணிக்கு லாண்டரோமாட்டில் சென்று துணி துவைத்து காய வைத்தேன். துணி டிரையரில் இருக்கும் நேரம் வெளியே சென்று அருகில் டின்னர் சாப்பிட்டு வர நேரமாகிவிட்டது. அதற்குள் யாரோ ஒரு பெண், ஏன் துணி அனைத்தையும் ஒரு கூடையில் மடித்து வைத்திருந்தார் ( உள்ளாடைகள் உட்பட ). நான் திரும்பி தேடுகையில் ஒரு கறுப்பின பெண் வந்து "எல்லாம் சரியாக இருக்கா" என்று கேட்டுவிட்டு. "சரி எனக்கு லேட் ஆகிவிட்டது அதனால் தான் உங்கள் துணியை வெளியில் எடுத்தேன்" என்றார். இந்தியாவில் நடக்குமா?