Friday, May 29, 2009

வணக்கம்

ஜஸ்ட் அ டெஸ்ட்!

Thursday, May 28, 2009

தமிழன்னை கோவில்

எங்கள் ஊருக்கு அருகில் எங்கள் ஜாதிக்காரர் தமிழன்னை கோவில் ஒன்று கட்டுகிறார் என கேள்விப்பட்டேன்.

நாங்கள் தெலுங்கு பேசும் ஆட்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறந்ததால், நாங்களும் தமிழர் தான்! தெலுங்கு எழுத வராது!

அவனவன் ஊரு விட்டு ஊரு போய், பஞ்சம் பொழைக்க போன இடத்தில் எல்லாம், தனி நாடு கேட்டுக்கொண்டு இருக்க ( இரண்டு லட்சம் பேர் சாகவும் காரணமாயிருந்து ) இது நல்ல விஷயம் என்று மனதில் படுது...

வாழ்த்துக்கள் நாயக்கர்வாள்!

*******
தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனை என்ற வரி என்னை யோசிக்க வைத்தது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ, ஔ, ஃ என்ற எழுத்துக்களை ராகமாக பாட போகிறார்களாம். அருமை!

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய்
தே ஞானம் பெற்று வாழ்வோம் தேவி!
( நாமளும் தமிழருன்னு காட்டிட்டோமில்லே, ஆங்... )

கடைசி லையின் நம்மளுது...

இன்னொரு கவிதை

"படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4"



இங்கே என் கவிதை

எனக்கென்று நீ பிறந்தாய்
அலைகடலென ஆர்பரித்தாய்
கண்ணே குதுகளித்தாய்
என் வாழ்வில் வசந்தம் மலரச்செய்தாய்


(எழுதியவர், கல்யாணம் ஆகாத பேச்சிலர் ராஜு )

Wednesday, May 27, 2009

உன்னை கொல்ல வேண்டும்

எனக்கு நேற்று இரவு முதல் உன்னை கொல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது!

எதற்கு தான் என்னை காதலித்தாய்? இப்போது கைவிட்டு இருக்கிறாய், இன்னொருவனை கைபிடிக்க?

சிம்ரன் என் காதலி. நான் டெல்லியில் வேலை பார்த்த பொது, கூட வேலை செய்தவள். பஞ்சாபி. அருமையான அழகு. நான் தான் முதல் காதலன். தொட்டும் தொடாமல் பழகும் விதம்.

டில்லியில், வேண்டுமென்றால் எல்லாம் செய்யும் காதலர்கள் நடுவில், கல்யாணத்திற்கு அப்புறம் தான் எல்லாம் என்று சொன்ன உன் உள்ளம் எனக்கு பிடித்தது.

நான் சாதாரண ஆள், அப்பா போலிஸாக நாணயமாக இருந்து சம்பாரித்து படிக்க வைத்தார். எப்படியோ கஷ்டப்பட்டு பொறியாளர் ஆக்கினார். கல்லூரியிலேயே கையில் வேலை... டில்லி பயணம். வேறு ஒரு வாழ்க்கை வாழ பழக்கம் ஆனது!

மாதமானால், சம்பளத்தில் ஒரு பகுதி மறக்காமல் அம்மாவிற்கு ட்ரான்ஸ்பர் செய்துவிடுவேன். அப்பா சொத்து ஒன்றும் சேர்த்து வைக்காமல் அகாலமாக இறந்தார். நல்ல பழக்க வழக்கங்களே என் சொத்து. அதை நீ மற்ற போகிறாயா? அதுவும் கொலை செய்ய தூண்டும் அளவிற்கு?

உணவே என் கெட்டபழக்கம். பண்ணீர் என் வயிற்றிற்கு ஒத்துக்கொள்ளாவிட்டாலும், நீ சாப்பிடுகிறாய் என்பதற்காக விடாமல் சாப்பிட்டேன். ஒரு வழியாக என் வயிறும் சரிபட்டது. ஓயாமல் பஞ்சாபி கலந்து ஹிந்தி உன்னிடம் கற்றேன். விடாமல் உன்னை காதல் செய்தேன். நாம் பார்க்காதே இடம் ஒன்று உள்ளதா?

சிம்ரன், நீ டிவி பாட்டு போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற பொது, இரவு பகல் பார்க்காமல் உன்னோடு துணையிருந்து, பல வித பாடல்களை அழகாக மெருகூட்டி பாட வைக்க துணை புரிந்தேன். அதற்கு பலன் தான இன்னொருவனுடன் ஓடிப்போவதா? நிச்சயம், உன்னை கொல்ல வேண்டும் !

போட்டியின் பொது நீ பலருடன் பழகினாய், சரியான பாசை புரியாததால் நான் சிரித்துக்கொண்டு விட்டுவிட்டேன். என்ன பேசினாய் என்று தெரியவில்லை. ஆனால் அந்த மல்வீந்தருடன் பழக ஆரம்பித்து, பைக்கில் செல்லும் போதெல்லாம் நான் கண்டுக்கொள்ளவில்லை. ஒரே பாசை பேசுகிறாய் என்று கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டேன்.

அந்த பழக்கம் அவனோடு நெருங்கி பழகும் விதமாகி, நீ உன்னையே கொடுக்கும் நிலை வந்த பொது, நான் அரண்டு விட்டேன். "இப்போது என்ன?" என்று கேட்டு விட்டு, என்னை விட்டு போனாய். காதலை மறந்தாய்! சே!

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன், என் அம்மா நார்த் இந்திய டூர் வந்த பொது, எவ்வளவு அன்பாக நடந்துக்கொண்டாய்... நான் உன்னை கட்டிக்கபோகிறவள் என்று வேறு அறிமுகம் செய்துவிட்டேனே? ஒரே மகன் பாசம் தான் பெரிது என்று எனக்கு ஒப்புதல் கொடுத்தார். இங்கு இருக்கும் பழக்கங்கள் படிக்காமல் மீண்டும் ஊருக்கே சென்று விட்டார். இருந்தாலும், உன்னை பற்றி விடாமல் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். இப்படி செய்துவிட்டாயே?

என் கனவுகள் எல்லாம் கலைத்து விட்டாயே? நான் ஒன்றும் கோழை இல்லை தற்கொலை செய்துக்கொள்ள! உன்னை கொல்லாமல் விடமாட்டேன். இதோ வருகிறேன்... எங்கே அந்த கத்தி?

"ஹா..... யார்ரா அந்த கல்லை வாசலில் போட்டு வைத்தது?"

*******

"ஸாப் ஸாப் உட்டோ சாப்" அந்த காவலாளி அவனை எழுப்பிக்கொண்டு இருந்தான். அவன் எழவில்லை. படிகளின் அருகில் ரத்தம் உறைந்து விழுந்து இருந்தான். இறந்துவிட்டான் போல! அவன் நெஞ்சில் கத்தி ஒன்று ஆழமாக பாய்ந்திருந்தது. அவனே குத்திக்கொண்டான் போல....

போலீஸ வேன் வந்தது. விசாரணை, போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு, அவனுக்கு தெரிந்த நபர்களை, அவன் ஐ.டி. டாகுமன்ட்ஸ்... வைத்து போலீஸ சிம்ரன் குடும்பத்தை கண்டுபிடித்து, அவன் அம்மாவை அழைத்து வந்து..... அடக்கம் செய்தார்கள்.

சிம்ரன் சோகமாக இருந்தாள்... முகமெல்லாம், அவளுக்கு வேர்த்திருந்தது. சிம்ரன் காதில் அவன் சொல்வது கேட்டது, "உன்னை கொல்ல வேண்டும்!"

-----------------------------------

இந்த சிறுகதை, என் சொந்த கற்பனையில் உருவானது! உரையாடல் சிறுகதை போட்டிக்கு அனுப்புகிறேன்! கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Tuesday, May 26, 2009

தம்பியின் டைரி

என் தம்பி வெங்கி பற்றி அடிக்கடி எழுதறேன். நான் இப்போ கல்யாணம் செய்து லையின் க்ளியர் செய்தால் தான் அவனுக்கு ஏற்பாடு ஆகும்...

பத்தாவது முடித்தவுடன், டிப்ளோமா படித்து விட்டு, எங்கள் ஊரிலேயே சென்ற வருடம் பி.ஈ. முடித்தான். என்னை விட இரண்டு வயது இளையவன்.

அவன் டிப்ளோமா ஜாயின் பண்ணின போது வயது 15, அப்போது தான் நாங்கள் கம்ப்யுட்டர் சென்டர் ஆரம்பித்தோம். வருடம் 1994. இரண்டு கம்ப்யுட்டர் லோனில் வாங்கினோம், ஒரு லட்சம் ஆனது. டிப்ளோமா முடித்தவுடன், சில வருடங்கள் சென்டரில் தான் இருந்தான். இப்போ பிசினஸ் நல்லா தான் போகிறது. மேலும் ஜெராக்சும் ஒரு பிசினஸ் தான்.

மூன்று வருடம் காலேஜ் அட்டன்ட் பண்ணி விட்டு, சாயந்திரம் சென்டர் பார்த்துக்கொள்வான். கில்லாடி. ;-)

அவன் வேறு ஒரு அமெரிக்க தமிழ் பெண்ணை ஆன்லைனில் சைட் அடிக்கிறான், மிசிகன் உனிவர்சிடியில் படிக்கிறாளாம். தம்பி பரதநாட்டியம் டான்ஸ் ஆடி பழகியதில், அவளுக்கு ஒரு ஈர்ப்பு....

இந்தியாவில் பிறந்து அமேரிக்காவில் செட்டில் ஆன குடும்பம். கண்ணாடி எல்லாம் போட்டிருக்கிறாள்.... அவள் சென்னை வந்த சமயம், தம்பி போய் பார்த்துள்ளான்.

என் கல்யாணம் முடிந்தவுடன், அவர்கள் கல்யாணம் தான். தம்பிக்கு விசா ப்ராப்ளம் இல்லாமல் இருந்தால் சரி.

அவனுக்கு ஒரு எச். 1 விசா பண்ணிவிட்டால், அங்கே போய் இருப்பான். யாராவது கொஞ்சம் உதவி புரியுங்கள். காண்டேக்ட் இமெயில் குடுங்கள். சிறு கம்பெனி ஆக இருந்தாலும் தரமான கம்பெனி வேண்டும்.

********

என் ரூம் மேட சரவணனும், ஆண்லயினில் ஒரு பெண்ணை பிடித்து வைத்துள்ளான். அவளை கட்டிக்கொள்ள விருப்பமாம். வெள்ளைக்காரி! எப்படி எப்படி நடக்கும்?

இந்த காலத்தில் ஒண்ணுமே நம்ப முடியாது!

மீண்டும் சுமனா

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரியவில்லை. ஒரு பிசிக்கல் உறவை எதிர்பார்த்து இருந்தால், மோனிகாவையே கட்டியிருக்கலாம். அவளுக்கு இன்னும் தெரியாது...

மீண்டும் மீண்டும் சுமனாவின் கால்கள் வருது. அம்மாவும் கேட்கிறார்கள் அந்த பெண்ணுக்கு என்ன குறைச்சல். இன்று தான் கவனித்தேன், சுமனாவின் போட்டோ (இமெயிலில் வந்தது) என்னோடு வைத்தால்... அக்கா மாதிரி தெரிகிறார். ஒரு முதிர்ச்சி. அட் லீஸ்ட் மனப்பொருத்தம்? என்ன பேசி புரிந்துக்கொள்வது? யாரிடம் போய் சொல்வது? இந்த ப்ளாக் மூலம் என் தம்பிக்கு தெரியும்.

தம்பி லையின் கிளேயர் செய்ய நான் முதலில் செட்டில் ஆக வேண்டும்.

சுமனா, நான் என்ன செய்வது?

நேற்று சுமனாவின் தோழி ஒருவர் கால் செய்தார். சுமனா பற்றி நல்ல விதம் பேசினார். கால் செய்திருக்க வேண்டியதில்லை... ஆனாலும் மார்கெடிங் போல?

மாமா இன்று இரவு பேசுவார். என்ன சொல்வது தெரியவில்லை!

Monday, May 25, 2009

IPL fiasco, a fixed final

I watched the tamed IPL fiasco, a fixed final, as I expected and sort of outlined by the Fake IPL blogger (KKR). I am not that one. I know it is a combined effort of Akash Chopra and Ajit Agarkar.

Last years 7th and 8th position holders were sure to play this years finals, as predicted in the last years final day by Lalit Modi, the master of all fixers, if he would accept that with his stake invisibly in KKR and Rajasthan Royals (Note - he was the cricket boss at Jaipur).

So next year, with the same 8 teams playing ( with a one off November USA bonanza of short IPL @ New York and Los Angeles ), the last 2 being Mumbai Indians and KKR would be features and KKR would win. Already with Bollywood involved, there is enough marketing going on to make it a big brand. So speaks the Gold in their pajama's/jersies.

So they are talking about 2 more teams, for 2011 edition, when most of the cricketers, now retired and old enough to be grandpa's would be still playing. I hope they get a version of Senior Cricketers IPL...

Coming back to the Bangalore teams fiasco, I feel Vijay Mallya paid his way to the finals this year, bringing in big names and a good coach, and left it to the team to win from there on. Nice approach. Now wonders bookies gave big odds, Rs 2.12 for Re 1 and most of the betters, lost heavily...

Even the new President of South Africa Mr Zuma, has told that IPL has revived the economy with few hundred million dollars. Read here on The Hindu... Note that the entire payments and collections are taxed at current rates in South Africa. No concessions!

Man, I hate Cricket.

படிக்க சுவாரசியம் - End of an era, Brand Name

Sorry to say this, but anyone involved with Eelam knows that there is a "brand name" to capitalize on!

The concerned spokespersons announcement is not accepted. People are getting angry calling him traitor!

No wonder Tamilnadu Politicians are not accepting the "end". Now what else will they base their politics on? I would urge them to concentrate on the plight of Tamils in the mainland (India). Make sure, everyone gets a roof over their head, proper food and sanitation, medical facilities, proper job trainings and opportunities through an education and employment board and necessary funds for all infrastructure, ensuring there is enough money spent...

They are bothering about their kin to accept plum, money making ministerial posts!

We should also not forget Veerappan episode and Nedumaran's involvement to secure release of Rajkumar (money involved?) and Nakheeran Gopal's fierce writings... He might be talking some truth!

What I have heard is, there is forcible donation collection abroad, apart from double taxes at Srilanka, drug trafficking visa Thailand & Burma to European nations, human trafficking to help seek asylum in a good sympathetic "foreign" country, etc...

Would all the relocated Tamils, return back to Srilanka if given autonomy? Will they give up their kushy well settled life abroad? Now I feel that they will say that "a separate Tamil state" is the final acceptable solution.

What do you say on the above few points?

Kolkata Knight Riders and Shah Rukh Khan

Do you know Kolkata Knight Riders (IPL) is making profit? Last year, they made $ 5 million or so... thanks to Shah Rukh Khan, Juhi Chawla and sundry investors.

As per the latest news, from Economic Times, read a few minutes ago...

They are going to take the initial investment of $15 million out, selling a 20% stake.

A British sports investor is buying the stake.

Win or lose, it makes biz sense!

They won only 3 matches, with one being washed out! ;-)