Sunday, May 10, 2009

ஒரு பதிவும் பெண்களும்

இந்த பதிவு என்னை கோபப்பட வைத்தது... ஆண்கள் இப்படியா?

பாலபாரதி எழுதிய பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..

*******************

வலை உலகில் இருக்கும் என் தோழி ஒருவர் எழுதி இருந்த மடலின் சில பாகங்களை மட்டும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
******
”…ஆமாம்.. பாலா.. நீங்கள் கேட்டிருந்த படி கொஞ்ச நாட்களாக எழுதாதற்கு மன வருத்தம் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. depression அதிகமானதால்தான் உங்களின் இந்த மடலுக்கு கூட மிகத் தாமதமான பதிலை எழுதுகிறேன்.

குழந்தையை வேறு school-ல் சேர்க்க வேண்டும். அதற்கு அட்மிஷனுக்காக அலைந்து கொண்டும் இருக்கிறோம். வலையுலகில் எனக்கு உங்களைப் போலவே வேறு சில ஆண் நண்பர்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். அதில் எல்லோரும் உங்களைப் போல நேர்மையாக மனதில் பட்டதை சொல்லிவிடும் தைரியத்துடனும், உண்மையாகவும் இருப்பதில்லை. :(

——— பதிவரின் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டொரு முறை சந்திப்புகளில் கூட வந்திருக்கிறார் அவர். உங்களைப் போன்றே அவரும் வலை உலகின் மூலம் அறிமுகமானவர் தான். ஆனால்.. பன்மையில் ஆரம்பத்தில் அழைக்கத்தொடங்கியவர்.. பிறகு ஒருமையில் விளிக்கத்தொடங்கினார். நான் பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. அவரும் மணமானவர் என்பதால் கொஞ்சம் தைரியமாகவே அவரிடம் பேசி வந்தேன்.

அங்குதான் என் தவறு தொடங்கியது. :( உள்மனதில் மிக மோசமான வக்கிரமான எண்ணங்களோடுதான் அவர் பேசி வருகிறார் என்பதை அப்போது நான் அறியவில்லை.

forward mail-களாலும், இரட்டை அர்த்த ஜோக்குகளையும் மெயிலாக மட்டுமின்றி s.m.s-ஆகவும் அனுப்பத் தொடங்கினார். நானும் நாசூக்காக இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லிப் பார்த்தேன். பாவி விடுவதாக இல்லை. தொடர்ந்து அவனுடைய தொல்லைகள் எல்லை மீறத் தொடங்கின. ரொம்ப torture பண்ணத் தொடங்கினான். மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்கள் அவனிடமிருந்து வரத் தொடங்கியது. பல நாட்கள் தூக்கம் இல்லாமல் அழுது இருக்கிறேன். வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலைவேறு. பெண்ணாக பிறப்பதே பாவமா பாலா. அவனுக்கு நான் பதில் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது, வலையுலகில் மேலும் சில பெண்களிடமும் இது போலவே வரம்பு மீறி அவன் நடந்து கொண்டிருக்கிறான் என்பது. சென்னையில் உங்கள் நண்பர்கள் சிலர் child abuse-க்கு எதிராக மருத்துவர்களை அழைத்து கூட்டம் நடத்தப் போகிறார்கள். முதலில் எதிர்படும் எல்லாப் பெண்களிடமும் வக்கிர குணத்தோடு அலையும் அந்தப் பதிவர் மாதிரியான நபர்களுக்கு தகுந்த treatment கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். வயது வந்த பெண்களிடமும் abuse செய்யாமல் இருக்க வகுப்பெடுங்கள்.”



இப்படியாக நீளும் மடலில் இருந்து சில வரிகளை மட்டுமே எடுத்துப் போட்டிருக்கிறேன். இது போதும். இதற்கு மேல் இந்த கடிதம் சொல்ல வந்த விஷயத்தை நான் தனியாக எதுவும் விளக்கிக் கூற வேண்டாம். பாதிக்கப் பட்ட அந்தப் பெண் பதிவர் யார் என்பதோ, பாதிப்புக்குள்ளாக்கிய அந்த வக்கிர குணமுடைய ஆண் பதிவர் பற்றிய விவரங்களும் இங்கு ஆராயப் பட வேண்டியவை அல்ல. ஆனால் இக்கடிதத்தை இங்கே பகிர்வதற்குக் காரணம், மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.

வரும் ஞாயிறு கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்கொள்வது பற்றிய பயிற்சி முகாமுக்கு அவசியம் எல்லோரும் வாங்க. விபரத்திற்கு தோழன் நர்சிம் பதிவை பாருங்கள்..

http://www.narsim.in/2009/05/10.html

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Filed under : அனுபவம், சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-))
28 Responses to “பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..”

1.
புருனோ May 8th, 2009 at 8:37 pm

//சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.//

ஆனாலும் இது நக்கல்.
2.
சென்ஷி May 8th, 2009 at 8:42 pm

:-(((

என்னத்த சொல்ல… இவனுங்கள பீயில மிதிச்ச செருப்பெடுத்து அடிச்சாத்தான் புத்தி வரும்ன்னு தோணுது…
3.
yaathirigan May 8th, 2009 at 8:42 pm

Just now was speaking with a friend about Women’s need to maintain annonimity in Web .. be it blogger/orkut/twitter…etc..
4.
சென்ஷி May 8th, 2009 at 8:45 pm

//சென்னையில் உங்கள் நண்பர்கள் சிலர் child abuse-க்கு எதிராக மருத்துவர்களை அழைத்து கூட்டம் நடத்தப் போகிறார்கள். முதலில் எதிர்படும் எல்லாப் பெண்களிடமும் வக்கிர குணத்தோடு அலையும் அந்தப் பதிவர் மாதிரியான நபர்களுக்கு தகுந்த treatment கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். //

ரிப்பீட்டே…

தல இவனுங்களுக்கு சும்மா ஆபரேசன் ஷகிலா படம் காட்டுறதெல்லாம் சரிப்பட்டு வராது. பேசாம மைனர் குஞ்சு ட்ரீட்மென்ட் கொடுக்கறதுக்கு ஏற்பாடு செய்ங்க..

…..த்தா கெட்ட வார்த்தை இங்க அடிக்கக்கூடாதேன்னு பார்க்குறேன் :-((
5.
வால்பையன் May 8th, 2009 at 8:50 pm

இரக்கம் காட்டாமல் தூக்கி உள்ளே போடுங்க!

அப்படியே விட்டா எல்லோரிடமும் தொடருவான்!
6.
DrDeva May 8th, 2009 at 8:52 pm

உங்களுக்கு பின்னூட்டம் போட பயோடேட்டாவே கேக்குதே!!
7.
DrDeva May 8th, 2009 at 8:56 pm

சரிதான்!!
பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.///

யாரிடமும் அநாவசிய பெச்சு வேண்டாமே!1
8.
கானா பிரபா May 8th, 2009 at 9:03 pm

:( வலையுலகமே எல்லோருடனும் கண்ணியமாக நட்புடன் பழகக்கூடிய இடமா இருந்தது, இங்கேயும் விஷமா :(
9.
முத்துலெட்சுமி May 8th, 2009 at 9:13 pm

மிக வருத்தமான விசயம்.. பெண்கள் எங்கேயும்
கவனமாக இருக்கவேண்டிய கட்டாயத்தை இங்கேயும் மறந்துவிடவேண்டாம் என்பதற்கு இக்கடிதம் உதாரணம்..
பல பெண்கள் எழுதுவதை குறைத்தது இப்போது மிகவும் உறுத்துகிறது.பெயரை மறைத்து பெண் என்பதையே மறைத்து எழுத வர வேண்டிய கட்டாயம் நிச்சயம் கேவலமான ஒன்று ..
10.
TheKa May 8th, 2009 at 9:16 pm

Guys, just use your instinct before you interact to make friendship with… experience is all what we do need.

Sad though!
11.
ஆயில்யன் May 8th, 2009 at 9:16 pm

நட்பும் பகிரும் இடமாக பதிவுலகம் நீடித்திருக்க இது போன்ற நபர்களின் செயல்களை தடுத்து நிறுத்திடுதல் மிக அவசியம்!

ஈனப்பிறவிகளை எளிதில் அடையாளம் கண்டு மற்ற பதிவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தகவல்களை பகிர்ந்துக்கொள்வதன் மூலமும் இது போன்ற ஈனச்செய்ல புரிவோரை அகற்றிவிடமுடியும்!
12.
dharumi2 May 8th, 2009 at 9:23 pm

என்ன சொல்றதுன்னு தெரியலை, பாலா.

சிலரால் எத்தனை பேருக்கு கெட்ட பெயர். //வலையுலகமே எல்லோருடனும் கண்ணியமாக நட்புடன் பழகக்கூடிய இடமா இருந்தது,// இதை முழு மனதாக நினைத்தது உண்டு. இங்குமா இப்படி?
13.
மங்கை May 8th, 2009 at 9:27 pm

ம்ம்ம்…

// மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் //

அதான்…இதுவே தீர்வு… அப்படி பட்டவர்களை சொல்லி ஒன்னும் ஆகப்போவதில்லை..

பகிர்விற்கு நன்றி
14.
சந்தோஷ் May 8th, 2009 at 9:31 pm

பாலா,
இது ரொம்ப நாளா நடந்துகிட்டு வருகின்ற ஒரு மேட்டர், நானும் ரொண்டு ஒரு பதிவர்களிடம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. அவங்களுக்கு தனியாக நான் சொன்னதும் இது தான் தேவையில்லாத விஷயங்களை தேவையில்லாதவர்களிடம் பேசாதிங்க முக்கியமா குடும்ப விஷயங்களை.. அதே தான் எல்லாருக்கும்..

சும்மா இதை இப்படியே விடாமல் அந்த மாதிரியான நல்லவங்களை புகைப்படத்துடன் பதிவுகளில் போட்டால் தான் அடங்குவானுங்க..
15.
ச.முத்துவேல் May 8th, 2009 at 9:34 pm

கொஞ்சம் பாலியல் எழுத்தாக இருக்கும் ஒரு கவிதையை எழுதிவிட்டு(ஆனால், நல்ல கவிதை) என் வலைப்பூவில் இடுவதற்கே தயங்கி நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறேன். காரணம், பெண் பதிவர்களை சங்கடப்படுத்துமோ என்பதுதான். வலையுலகம் படித்தவர்கள் , சிந்தனையாளர்கள் புழங்கும் இடம். இங்குமா கயவாளித்தனம் ? Nonsense.
16.
அறிவே தெய்வம் May 8th, 2009 at 9:35 pm

நட்பு என்ற வார்த்தையை களங்கப்படுத்துவோரை
அடையாளம் காட்டுங்கள். எல்லோரும் இணைந்து ஒதுக்கித்தள்ளி விடலாம்
17.
ஜ்யோவ்ராம் சுந்தர் May 8th, 2009 at 9:37 pm

உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம் அந்த ஆண் பதிவர் உங்களுக்குத் தெரிந்தவராகத்தான் இருப்பார், அவரிடம் நேரிடையாகப் பேசுவதை விட்டுவிட்டு, இப்படி எழுதுவது பெண் பதிவர்களை காப்ரா படுத்துவதைப் போல் உள்ளது :(

இல்லையென்றால், இதைத் தவிர வேறு என்ன நடந்து விட முடியுமென்று நினைக்கிறீர்கள்?
18.
Kaattaaru May 8th, 2009 at 9:46 pm

அட என்னங்க இது! தைரியமா இருக்க வேண்டாமா? அப்படி ஒரு ஆள் உங்க கிட்ட தவறா பேசினா… வெளி உலகுக்கு கொண்டு வாங்க. உங்க கிட்ட ப்ரூஃப் இருக்கா இல்லையான்னு யாரும் கேட்க போறதில்ல. ஆனா ஏன் கோழைத்தனமின்னு எனக்கு புரியல. எது உங்களை வெளி வர விடாது தடுக்குது? இன்னொரு நண்பரிடம் இப்படி போய் சொல்லுவதற்கு தைரியம் இருக்குதுல்ல. அதுவே நீங்க வெளிப்படையா தோலுரித்தால்… அடுத்த ஆளுக்கு தைரியம் வருமா இது போல் நடக்க? முதல்ல நீங்க முக்காடை விலக்குங்க. எல்லாம் சரியா நடக்கும்.
19.
kuppan_yahoo May 8th, 2009 at 9:47 pm

நீங்கள் எழுதி உள்ளவை போன்றுதான் பெரும்பாலும் நடக்கின்றன.

பெரும்பான்மையான பதிவர்கள், சாட்டர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் மூலமாக இந்த பெண்களின் புகைப்படம், தொலைபேசி எந்கல் தவறானவர்களிடம் சென்று விடுகிறது.

அதுவும் திருமணம் ஆகாத மிகவும் இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.,

குப்பன்_யாஹூ
20.
மங்கை May 8th, 2009 at 9:48 pm

இன்னொன்று பெண்கள் பயந்தால் வேலைக்கு ஆவாது… முகமூடிய கிழிக்கனும்…
21.
நா ஜெயசங்கர் May 8th, 2009 at 10:00 pm

//புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.//

ஆமாம் சொல்லிட்டாரு எங்க தலயே! இதையும் மீறி எங்க தலகிட்ட தொலைபேசி எண்ணை கொடுத்திட்டு! தல அப்பிடி பேசினாரு! இப்படி பேசினாருன்னு ரவுசு பண்ணா எங்க சங்கத்து ஆளுங்க சொம்மா விடமாட்டோம்ன்னு சொல்லிக்கிறேன்…

நா ஜெயசங்கர்
பா.க.ச
22.
viji May 8th, 2009 at 10:10 pm

oosi idam kudukama nool nulaiyathu.

tannudaiya nilalaga iruntaalum, mutalil nambida koodathu. aalam ariyamal kaalai vitatthu avarin kutram. intha vishyathil antha aanai mathum kurai kooriyathu tavaru.

more over, when she felt he is wrong. she can ignore him. she no need to reply his sms or emails at first. definately he will continue send few times. after awhile he will start feel tired and stop the hell.

Thank you
23.
Raja May 8th, 2009 at 10:12 pm

சைக்கோவா இருப்பான் போலிருக்கு.

பெண்பதிவர்கள் என்றில்லை ஆண் பதிவர்களாகவே இருந்தாலும் தேவையற்ற தனிப்பட்ட தகவல்கள் எதையும் இணையம் மூலம் அறிமுகமானவர்களுக்கு அளிப்பதற்கு முன் நிறைய யோசிக்கத் தான் வேண்டும். பெண்கள் இன்னும் கூட அதிகமாய் யோசிக்க வேண்டும்.. லூசுப்பயலுக அதிகமா நடமாடற இடமாப் போச்சு :-(
24.
Raja May 8th, 2009 at 10:15 pm

I know the name of the person you’re talking about. He is always like that only. We need to inform his wife
25.
யட்சன் May 8th, 2009 at 10:16 pm

பாதிக்கப்பட்டவர், பாதித்தவர்….விஷயத்தத கிசு கிசு பாணியில் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.

இப்ப சென்னையில் இருக்கிற அத்தனை பெண்பதிவர்கள் மற்றும் மணமான ஆண்பதிவர்கள்….எல்லோர் பெயரும் அலசப்படும்.

இதுக்கு பேசாம அந்த வக்கிர பதிவரின் பெயரை போட்ருக்கலாம். அவர் அனுப்பின எல்லாத்துக்கும் ப்ரூஃப் இருக்கும் போது எது உங்களை தடுக்குது…

என்னவோ போங்க…நான் கூட சென்னையில இருக்கற மணமான ஆண் பதிவர்தான்…
26.
அதிஷா May 8th, 2009 at 10:56 pm

பெண்பதிவர்களுக்கான எச்சரிக்கைக்கும் . மே 10க்கான அழைப்புக்கும் என்ன சம்பந்தம்.

தனித்தனியா போட்ருக்கலாம்லண்ணா!
27.
நான் ஆதவன் May 8th, 2009 at 11:02 pm

அந்த புறம்போக்குக்கு நேரடியாக சாட்டையடி வார்த்தைகளை கொடுத்திருக்கலாம்…

இந்த பதிவு பெண் பதிவர்களுக்கு எச்சரிக்கை உணர்வுகளை தூண்டினாலும் புதிதாக எழுத வரும் பெண் பதிவர்களுக்கு பயத்தையும் தரும்
28.
அக்னிபார்வை May 8th, 2009 at 11:07 pm

///ஜ்யோவ்ராம் சுந்தர் May 8th, 2009 at 9:37 pm
உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம் அந்த ஆண் பதிவர் உங்களுக்குத் தெரிந்தவராகத்தான் இருப்பார், அவரிடம் நேரிடையாகப் பேசுவதை விட்டுவிட்டு, இப்படி எழுதுவது பெண் பதிவர்களை காப்ரா படுத்துவதைப் போல் உள்ளது

இல்லையென்றால், இதைத் தவிர வேறு என்ன நடந்து விட முடியுமென்று நினைக்கிறீர்கள்?

/////

பாலா அண்ணன் அந்த பதிவருக்கு பாடம் புகட்டியிருப்பார் என் நம்புகிறேன்… இல்லையென்றால் புகட்ட வேண்டும் என வேண்டுகிறேன்.. .. இல்லையெண்ரால் அந்த பெண் பதிவர் பட்ட துன்பங்களை இத்த்னை நாளுக்குள் எத்த்னை மற்ற பதிவர்கள் துன்பபட்டிருக்கிறார்களோ? இனி எத்தனை பேர் துன்பபடபோகிறார்களோ.

No comments:

Post a Comment