Thursday, May 14, 2009

வோட்டு போட்டாச்சு

எங்க ஊருக்கு போய் நான் வோட்டு போட்டாச்சு. நல்ல வேலை வோட்டர் லிஸ்டில் பேரு இருந்துச்சு.....

என்ன நேற்று இரவு லேண்ட்மார்க்கில் ஜெப்ரி ஆர்ச்சர் கூட்டம் போக முடியலே.

கடைசி வரை போவோமா என்று தெரியவில்லை. லீவு எடுப்பது பிரச்சனையை இல்லே. புது ப்ரோஜக்ட் ஒன்னு என்னோடு முயற்சியிலே வந்துச்சு. அதனாலே பாஸ் என் மீது அன்பை பொழிகிறார்.

செவ்வாய் இரவு, பத்து மணிக்கு நண்பன் ஒருவரோடு, அவர் காரில் சேலம் வரை பயணம். அவர் மனைவி மற்றும் குழந்தை பின் சீட்டில் தூங்கிவிட்டனர்.

அவரும் வோட்டு போட தான் சென்றார். இரண்டு மணிக்கு பை பாஸ் ரோட்டில் இறக்கி விட்டார். எனக்கு உடனே ஊருக்கு பஸ் கிடைத்தது, ஆறு மணிக்கெல்லாம் வீட்டில்.

அம்மாவுக்கு ஒரே ஆச்சிரியம். "போன் கூட பண்ணலே" என்றார். இருந்தாலும் ஒரு சந்தோசம். எங்கள் சொந்தக்காரர் தே.மு.தி.க கட்சி சார்பில் போட்டியிடுகிறார். சனிக்கிழமை ரிசல்ட் தெரியும். வெள்ளி இரவு டிக்கட் புக் செய்தாகிட்டது. தமிழ்நாட்டு மக்கள், புதிய மாற்றம் வேண்டும் என்பார்களா?

அப்புறம் எழு மணிக்கெல்லாம், கியுவில் நின்று வோட்டு போட்டேன். அப்புறம் தான் டிப்பன்....எங்கள் ஏரியாவில் ஒரு எழுபது பர்சன்ட் வோட்டு விழுந்திருக்கும். சுற்றி தேர்தல் நிலவரம் பார்த்தேன். லோகல் காங்கிரஸ் ஆள், இரண்டு மூன்று டாக்சி அனுப்பி, பிரியாணி சப்பளை செய்தார்... ( அவீங்க ஆட்களுக்கு )

ஜெயலலிதா கட்சி மீது எல்லோருக்கும் கோபம். தலைமை பொறுப்பில் இருப்பவர், நன்றாக இருந்தால் தானே நாடு உருப்படும்? கொள்ளை அடிப்பதில் தான் எல்லோருக்கும் விருப்பன். கமலஹாசன் சொல்கிறார், பால்டிக் ஒரு லிப் சர்வீஸ். கரக்ட் தான்.

வீட்டில் தம்பி கம்ப்யுட்டரில் சில ட்விட்டர் மெச்செஜ் போட்டேன். ஆபிஸ் கூப்பிட்டு என் டீம் வேலை பற்றி விசாரித்துவிட்டு, ரெஸ்ட் தான். அலைச்சல்...

மதியம் அருமையான சாப்பாடு. பிறகு தூக்கம் என போயிற்று... சாயந்திரம் எழுந்து நண்பர்களை பார்த்துவிட்டு, சிலர் வேலை இல்லாமல் பெங்களூரில் வீட்டை காலி செய்து விட்டு, இங்கு அப்பா அம்மாவோடு இருக்க வந்துவிட்டனர். லோகல் கோர்ஸ் ஏதோ செய்கிறார்கள். எம்.பி.ஏ படிக்கிறார்கள். கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

நானும் எஸ்.ஏ.பி கோர்ஸில் இது வரை ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்துவிட்டேன். எப்படியாவது, நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்கும் என நம்புகிறேன். கையில் ஒரு பைசா சேமிப்பு இல்லை.

அடுத்த மாதம் சிங்கபூர் வேலை விசயமாக செல்ல வேண்டும். அப்போது, அங்கு ஜாப் முயற்சி செய்ய வேண்டும்.

எட்டு மணிக்கு கோழி குழம்புடன் தோசை. பத்து மணி பஸ்ஸில் டிக்கட் கிடைத்தது. மடிவாலாவில் காலை ஆறு மணிக்கு இறங்கினேன். ( சரியான நேரம் ) ... ரூமிற்கு சென்று (நண்பனை டிஸ்டர்ப் செய்து! ) படுத்து விட்டேன்.ஒன்பது மணி ஆயிற்று எழ, அவசரமாக குளித்து, அப்படியே சிவ சாகரில் இரண்டு இட்லி ஒரு வடை ஒரு காபி என டிப்பன் முடித்து, ஆபீஸில் வந்து உட்காரும் போது மணி பத்து. ஆபிஸ் ரூமிலிருந்து நடை தூரம் தான்..


*****************

சரி இன்று காலை எக்சிட் போல் ரிசல்ட் எல்லாம் பார்த்தேன். தி.மு.காவிற்கு கொஞ்சம் குடைச்சல் போல.

காங்கிரஸ் மட்டும் மத்தியில் ஆட்சியில் வரவில்லை என்றால், மீண்டும் தமிழகத்தில் தேர்தல். என்.டி.ஏ வின் கையில் இரட்டை இலை! அது தான்!

***************

இங்கே வேலை நிதானமாக போகிறது.

ஐந்து நிமிடம் முன் தான் பாஸொடு ஒரு சிறு மீட்டிங்.

பாஸும், ஸ்டாக் ஆப்சன் மற்றும், ஒரு வருடம் அப்புறம் ரிடன்சன் போனஸ் குடுக்கிறேன் என்று லெட்டர் கொடுத்தார். நன்றி! நன்றி!

No comments:

Post a Comment