Friday, March 5, 2010

கடவுளும் வரமும்

என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத நீ
என்ன கடவுள்?

ஓர் பி. ஏ வச்சுக்க...
ஆமா...
இல்லே...
நித்தியானந்தர் கிட்டே கேளு
அதான்யா ராஜசேகரன்
புட்டு புட்டு வைப்பான்
கேட்காமல்
வரமும் கொடுக்கலாம்....

பத்திரம்..
அப்புறம் ரம்பா மேனகா ஊர்வசி
எல்லோரும் அவன் பின்னால்
ஓடிப்போயிடுவாங்க...
தமிழ்நாட்டிலே இருந்தில்லே
இந்திரலோகத்திலே இருந்து!

மற்றொன்று...
காசிலைன்னு கவலை வேண்டாம்
சுருட்டற வழி தெரியும்
சொல்லிக்கொடுப்பான்
வேறு கிரகத்திற்கு கொடுக்கலாம்!

சில சமயம் நம் மக்கள் இருக்கும்
வெளிநாட்டு போருக்கு கூட
காசு கொடுக்கலாம் என்பான்
ஹவாலா ரூட்டு
வேண்டாம் கடவுளே
நம் நாட்டை மட்டும் பார்!

கடவுளே
கடவுள்
திருந்த
வரம் கொடு!

No comments:

Post a Comment