Thursday, July 9, 2009

காசு பிடுங்கும் சாமியார்கள்

விஜயஷங்கர் அவர்கள் எழுதிய இந்த பதிவு படித்தேன்...

"சில நினைவுகள், மாயை"

அருமை... சிந்திக்க வைக்கும் மாயை.

இந்த காசு பிடுங்கும் சாமியார்களை நம்பாதீங்க! இந்த ஆளை எங்க அம்மாவும் ( அப்பா கூட ) வீட்டிற்கு கூட்டிட்டு வந்து தங்க உருத்திராட்சம் எல்லாம் கொடுத்திருக்காங்க.

நாமக்கல்லிலே விறகு பொறுக்கிட்டு இருந்த பையன், இப்போ ஆஹா இந்த நிலைமையில்? எல்லாம் கலி காலம் தான் பாஸ்! யாரோ ரெண்டு மூணு பேர் கூட சேர்ந்து சில ஸ்லோகங்களை படிச்சுட்டு... ரொம்ப தான் உடான்ஸ்...

அப்புறம் அந்த பிட்டி இடம், கோவில், லோகல் கிராமத்திலிருந்து அகப்படுதப்பட்டது... திருப்பி கேட்டால், கூட இருக்கும் ரவுடிகள் அடித்து துவைத்து விடுவார்கள்! பாவம். இப்போ அந்த ஊர் பெரிய மனுசர், கான்பிடண்ட் க்ரூப் என்று ரியல் எஸ்டேட் கம்பெனி வைத்திருக்கிறார்! தெலுங்கு ஆள். எங்க பாஸுக்கு சொந்தம்... ரொம்பவும் பயப்படுகிறார்! சாமியார் பாவம் வேண்டாமென்று!

இன்னும் கொஞ்சம் மோசமான விஷயம், டாய்லெட் தவிர... வெளிநாடுகளில் இருந்து வரும் பாரினர்களுக்கு கஞ்சா, மாவா போதை சப்பளை.... ஈசியாக அங்கு உள்ளே யாரும் நுழைய முடியாது! ஒரு விஷம ஏரியா... கோட்டை போல. மாட்டிகிட்ட வெளியே வர முடியாது.

ஒரு முறை நானும் நண்பரும் அங்கு சென்றோம். ஐந்தாயிரம் கொடுத்து ஈ.எஸ்.பி கோர்ஸ் எடு என்று ( கிரெடிட் கார்ட் ஒக்கே ) நிறைய வற்புறுத்தல்....

பிட்டி ஆலமரம், கோவில் நன்றாக இருக்கும்! சுயம்பு என்று சொல்லி ஒரு கல்லை காட்டியிருப்பார்களே...

2 comments: