Monday, January 4, 2010

சாஸ்தா சரணம்

இந்த பதிவை படித்தவுடன் ஒரு கமன்ட் போட்டேன்

[ayyappa-harivarasanam.jpg]
அருமை! ஆனால் அந்த தியான மனநிலை கொண்டு வர வைக்கும் யுக்தி... ஆர்மி ட்ரெயினிங் மாதிரி, மனகட்டுபாடு வர வைக்கும் வித்தை, பெரியார் சொன்ன மாதிரி, சவுக்கடி.... அதற்கு என்ன பொய்யும் சொல்லலாம்... ஈரோடு பெருமாள் கோவிலில் பெரியார் தர்மகர்த்தாவாக இருந்தார் தெரியுமா? ஏன்? அங்கேயாவது குளறுபடி இல்லாமல், மக்கள் நீட்டாக இருப்பார்கள்.... என்று தான் என நினைக்கிறேன். அப்புறம் பெரியார் ஜாதி தான் நான்! ( நம்பிக்கையிலும் கூட! ).

அப்புறம் இந்த பண்டிகை விஷயங்கள், நம் கலாசார விருந்து உண்ண ஒரு யுக்தி. ஏழைகளுக்கு, பிச்சைக்காரர்களுக்கும் கொடுக்கலாம்... இந்த காலத்தில் இன்டர்நெட் பிச்சைக்காரர்களும் உள்ளனர்... நல்லது தானே? நற்குடியில் பிறந்த எல்லோரும் இதை ஆதரிப்பார்கள். அவதார் படத்தில் ஒரு நம்பிக்கையில் கண்ணாடி போட்டு பார்ப்பது போன்று....

என் டாக்டர் அக்கா சொல்றாங்க.... கோவிலில் தான் நல்ல இம்முனைசெசன் நடக்குது. உன் உடல் பலமடையும். கண்ட நோய் எதிர்ப்பு கிருமிகள் அடித்து நொறுக்கும் விதிகளை இயற்கையாக உன் செல்கள் செய்யும்.

ஆமாம் எப்படிங்க இந்த செல்கள் தானா இயங்குது?

:-)

***

இறை நிலையை ( இயற்கை ) நான் உணர்ந்தது கல்யாணத்திற்கு அப்புறம் தான்! அதை பற்றி ஒரு தனி பதிவு பிறகு.

இந்த வருடத்தின் முதல் நாள் வேலைக்கு நேரமாச்சு. ரைட் ரைட்.

No comments:

Post a Comment