Monday, January 4, 2010

தமிழ்மணத்தின் தகராறு

அப்பப்பா... எவ்வளவு பதிவுகள்... அதனால் தானோ தமிழ்மணத்தின் தகராறு?

என்ன விஷயம் என்றால், மனதிற்கு பிடித்த பதிவு இல்லாவிட்டால் எப்படி ஒருவருக்கு வோட்டு போட முடியும்? கருமம் கருமம், எனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்!

நமக்கு பிடித்த பதிவுகள், அந்த பத்தில் இல்லை என்றால் ஜனநாயக முறைப்படி, நமக்கு பிடித்த பதிவை, அந்த கேடகரியில் நாமினேட் செய்யும் வாய்ப்பு வேண்டும்.

சரி என் பதிவுகள் பத்து கேடகரியில் இருந்தன. வோட்டு போடும் போது தான் பார்த்தேன் ஒன்றுமே இல்லை. ஐயோ ஐயூ! அப்போதே தெரிந்தது, எதோ ஒரு இருட்டிப்பு நடந்துள்ளது என்று. அதெப்படி, எனக்கு மீண்டும் ஒரு லாகின் கேட்கிறார்கள்... பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகின்றனவே? இணைக்க முடிகிறதே?

சரி சரி வெற்றி பெறுபவர்கள் என்ஜாய் பண்ணுங்க. அமெரிக்காவிற்கு ஒரு ட்ரிப் - எல்லா செலவோடும் கொடுப்பார்களாம்! ( நினைப்பு தான்! )

1 comment:

  1. பதிவர்களுக்குப் பதிக்கும் உரிமை இருக்கிறது.பதிலளிப்பதைப் போடாமல் இருக்கும் உரிமையும் இருக்கிறது.அதற்கு தமிழ்மணத்தில் ஒரு வழி செய்ய வேண்டும்.
    ஜி.யு.போப் என்ற அறிஞர் பெருமான் பற்றி இந்த உண்மை தெரிய வேண்டும்.

    ஜி.யு.போப் ப்ற்றி-
    He received the coveted Gold Medal given once in three years for meritorious
    service and to mark the Diamond Jubilee of Queen Victoria in 1906. He wrote to the editor J. M. Nalla Samy Pillai of “Siddhantha Deepika” on October 20, 1900, requesting that after his death, the inscription on his headstone should be “A Tamil Student” – and at least a portion of the cost to erect such a headstone should come with donations from wealthy and influential Tamils.”

    தனது கல்லரையில் ” தமிழ் மாணவன்” என்று எழுதச் சொன்னவர் என்பது தான் அறிஞர்கள் பயன் படுத்தும் வார்த்தைகள். இதைப் பல தமிழறிஞர்கள் பல இடங்களிலே பேசியும் ,எழுதியும் உள்ளார்கள்.அவரது கல்லறையின் செலவில் தமிழர்கள் பகிர்ந்து கொண்டது பொறிக்கப் பட்டுள்ளது.

    ReplyDelete