Monday, September 7, 2009

குரு சில கேள்விகள்

ஸ்வாமி ஓம்காரின் ஸ்ரீ சக்ர புரி தொடர் படித்து திருவண்ணாமலை மகிமை பற்றி தெரிந்துக்கொண்டேன்.

"ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15"

அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.

எனக்கு சில கேள்விகள் உண்டு.

* குரு என்பவர் யார்?
* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?
* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?
* குரு என்பவர் மெஸ்அய்யா தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?
* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?
* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )
* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)
* குரு என்பவர் தன குடும்பத்தை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?

Friday, September 4, 2009

தமிழன் ஒரு விளக்கம்

என் ப்ளாகை படித்த ஒரு கேனையன் - தெலுங்கு மொழி பேசும் ஆள் என்றால் கேவலம் என்று நினைக்கிறார் போல. ( போலி டோண்டு கோஷ்டியாக இருக்கும்னோ? ) தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன் இல்லையா? இந்தியாவில் பிறந்தவன் இந்தியன் என்கிற மாதிரி. அப்புறம் புதுச்சேரியில் பிறந்தவனை என்னவென்று சொல்லுவது?

இதற்கு தான் என் ப்ளாகின் தலைப்பில் "தமிழனாய் ஒரு பங்களிப்பு!"

அப்போ விஜயகாந்த், நெப்போலியன் , புதுச்சேரி வைத்தியலிங்கம் ( நாயக்கர் இன மக்கள் ) எல்லாம் என்ன தமிழர் கிடையாதா! அவர்களிடம் நேரில் சென்று சொல்லிப்பாருங்கள்... என்ன நடக்கும் தெரியும்!

இசை வேளாளர் கூட தெலுகு தாய்மொழி கொண்டவர்கள் என்று என் அம்மா சொல்லுறாங்க! யாரை குறிப்பிட்டு சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.

ரொம்ப பிரிவினைவாதம் ஜாஸ்தி பார்க்கிற ஊரு, இடம் தமிழ்நாடு தான்.

ஜாதி மதம் இனம் கூட்டம் நண்பர்கள் மொழி என்று பாகுபாடுஎவ்வளவு காலம் ஆனாலும் இந்திய முன்னேற வழி வகுக்காது! மைன்ட் இட்.

இலங்கை இனப்பிரச்னை ஒன்று தான் இப்போ ஒற்றுமையை வழி வகுக்கும் போல இருந்தது. இந்த ப்ளாக் உலகில்..... அதுவும் கெடுத்து விடுவார்கள்... குட்டின பொறப்பு அலாக!

உவ்வே...

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்! இது சேதி. ஹெலிகாப்டர் மலையில் மோதி உயரிலந்தார்! அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

என்னை போல தெலுகு தாய்மொழி ஆள். என்னை போலவே கன்னடமும் பேசுவார் என தெரியுது... இங்கே படியுங்கள் தெரியும்.. அவர் படித்த குல்பர்கா MRMC காலேஜில் தான் என் அக்கா டென்டிஸ்ட் ஆக படித்தார். ( 60% மார்க்குக்கு ராமசந்த்ராவில் கிடைக்கும்? ) :-) என் பாசின் சொந்தம், அவர் பெண் எடுத்த வகையில்.

மக்களுக்கு 2004 முதல் நல்லது செய்தாராம்! இப்போது வருத்தங்கள்.

***

குடும்ப சொத்து போல அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இப்போது அறுபத்தியேழு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஆக முயற்சி எடுக்கிறார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

நிறைய எஸ்.எம்.எஸ் ஜோக்குகள் செல்கின்றன. பாவம் காங்கிரஸ் கட்சி.

ஆந்திராவில், ஹைதராபாத்தில் முற்றிலும் கடைகள் மூடப்பட்டு, அநியாய விலைக்கு எல்லாம் விற்கப்படுகின்றன என்று தெரிகிறது! மோர்னிங் என்பதை கடைஅடைப்புக்கு உபயோகிக்கும் கேனையர்கள்!

***

YSR இன்டர்நெட்டில் - மறைந்த விவரங்கள் அதிகம். கிறிஸ்டியன் என்று இப்போ தான் தெரியும். மனைவி விஜய லக்ஷ்மி ஹிந்துவாம். அதனால் திருப்பதிக்கு போவாராம்!

***

YSR இன் மகள் ஷர்மிலா எங்க ஏரியாவில் தான் வாழ்கிறார். இது சேதி. சில முறை பூட் டேய்சில் பார்த்த ஞாபகம்!

***

கர்நாடக சுரங்க சுரண்டல்கள் கும்பல் மூன்று மினிஸ்டர் ரெட்டிகளும் YSR குடும்ப நிறுவனத்தில் பங்கு. நாற்பத்தியேழு கோடிக்கு தலை கிரீடம் செய்தார்கள் ஏழுகொண்டலவாடாவிர்க்கு!

***

நக்சல்கள் ஏரியாவில் எதற்கு ப்ளைட் செல்ல வேண்டும்? அவர்கள் ஷ்டின்கரில் அடித்திருக்கலாம் அல்லவா? அதனால் தான் ஒரு மெஸ்ஸெஜும் செல்லவில்லையா? இது வரை ஆப்கானில் ஷ்டின்கரில் அடிபட்டு இறந்தவர்கள் நாலாயிரத்திற்கு மேல். எதிரிக்கு எதிரி நண்பனாம்.

வருத்தங்கள்.

Tuesday, September 1, 2009

உன்னை போல் ஒருவன் ட்ரெயிலர்


ஹிந்தியில் வந்த A Wednesday படத்தை தழுவி, தமிழ் படுத்தி ( படாத படு பட்டு ) ஒரு வழியாக வருகிறது உன்னை போல் ஒருவன்!

கமல் மிகவும் இளமையாக ( அவர் வயதிற்கு ) தெரிகிறார். :-)

மோகன்லாலின் தமிழ் கொல்லுகிறது!

நிறைய சீன்ஸ், கொஞ்சம் காமடி என்று சேர்த்திருப்பார்கள். டையலாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது... பன்ச் டையலாக்சுக்கு குறைவிருக்காது!

விவேக் காமடி, வடிவேல் காமடி இடைசெருகல் இருக்கும்? சின்ன ஊரிலே ஓட வேண்டாமா?

அப்புறம், ஒரு குத்து பாட்டு, ரெண்டு சோக பாட்டு இருக்கும்.

அப்புறம், அந்த தீவிரவாதிகள் சாவுக்கும், கமலுக்கும் ஒரு லிங்க் வைத்திருப்பார்கள். லக்ஷ்மிக்கு ஒரு ஹோம் மினிஸ்டர் வேடம்.

Will it work? I am just a stupid common man!

Thursday, August 27, 2009

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி

இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

செந்தில்நாதன் நலம் குறித்த பதிவு

***

அவர் ஒரு விடியோ பதிவு போடுவார் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கு நலமோடு திரும்பி வர வேண்டுகிறேன்!

***

இறைவனுக்கு நன்றி!

ஞாநி கோலம்: வீடு தேடி வரும் நல்ல விஷயம்

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Wednesday, August 26, 2009

பிழைக்க தெரிந்தவர்கள்

ஐ.டி. துறையில் மடமடவென்று மேலே செல்பவர்கள் அதிகம். அதே போல் கிழே விழுபவர்கள் அதிகம்.

திறமை இருந்தும் வேலை இல்லாதவர்கள் அதிகம். ரிசச்சென் என்ற பெயரால் அதிக சம்பள ஆட்களை நீக்கியதை என் கம்பெனியிலேயே பார்த்துள்ளேன்.

Nepotism and Cronyism is there to the core.

நானே மூன்று வருடம் எக்ச்பீரியன்சில் வாங்கும் (அதிகபட்சம்) சம்பளத்தை பத்து வருட சர்வீச்சில் வாங்கிக்கொண்டு வாழ்கிறேன். இதற்கு புரிதல் அவசியம்!

பிழைக்க தெரிந்தவர்கள் நிறைந்தது ஐ.டி. துறை. ( கவனமாக நடந்து கொண்டால் )

அப்புறம், நீங்கள் மறுத்த உதவிகள் செய்வது போல், ஐ.டி. வேலையில் தூக்கி அடிக்க பட்டவர்களுக்கு உதவலாமா?