Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, September 7, 2009

குரு சில கேள்விகள்

ஸ்வாமி ஓம்காரின் ஸ்ரீ சக்ர புரி தொடர் படித்து திருவண்ணாமலை மகிமை பற்றி தெரிந்துக்கொண்டேன்.

"ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15"

அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.

எனக்கு சில கேள்விகள் உண்டு.

* குரு என்பவர் யார்?
* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?
* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?
* குரு என்பவர் மெஸ்அய்யா தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?
* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?
* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )
* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)
* குரு என்பவர் தன குடும்பத்தை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?