Showing posts with label ஐம்பதாவது பதிவு. Show all posts
Showing posts with label ஐம்பதாவது பதிவு. Show all posts

Wednesday, April 29, 2009

ஐம்பதாவது பதிவு

பதிவுகள் பக்கம் வந்து நான்கு மாதங்கள்... இண்டரெஸ்டிங்.

இது எனது... ஐம்பதாவது பதிவு!

நான் கண்ட பல பதிவர்களின் எழுத்தார்வம், என்னை எழுத தூண்டியது.

நான் விரும்பி ரசித்து படிக்கும் தமிழ் பதிவர், அதிஷா...

லேட்டஸ்டாக எழுதியுள்ள விஷயம்...

பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?

எனக்கு தெரிந்த் வரை, பெங்களூரில் இது இல்லை. ஹைதராபாத்தில் உண்டு.

அப்புறம் மாற்று எழுத்துக்கு...

***********

சில சமயம் ரொம்பவும் போரடிக்கும் பொது, பதிவுகளே என்னை மூடுக்கு வர வைக்கின்றன.

மேனேஜர் ஆகிவிட்டதால், லேப்டாப் கையில்... அதனால் இப்போது வீட்டிலும் ப்லோக் பக்கம் போக முடியுது. (அப்புறம் கல்யாணம் வேறு செய்துக்கொண்டால், ஒன்றும் நடக்காது)

ஆனால் வீட்டில் இருக்கும் போது வேலை கொடுக்கிறார்கள் (தலை எழுத்து ), அதை வேண்டாம் என்பதா, இல்லை ரிலாக்ஸ் ஆக இருப்பதா என்று தெரியவில்லை.

எஸ்.ஏ.பி கற்று வருகிறேன். ஐந்தரை லட்சம் செலவுஆகிறது, சீமன்சில். சர்டிபிகேட் வேறு கிடைக்கும்.... பார்ப்போம், அது உதவுதா என்று.

என் ஆசை எல்லாம், மாதம் செலவிற்கு பணம் வரும் அளவு ஒரு நிரந்தர வருமானம், ஒரு வீடு, கார்... போதும். வாழ்க்கை ஓடிவிடும்.