Showing posts with label வடகரைவேலன். Show all posts
Showing posts with label வடகரைவேலன். Show all posts

Thursday, July 30, 2009

சின்ன புன்முறுவல்

வடகரைவேலன் எழுதுன பதிவு ஒன்னு படிச்சேன். மனசுலே கப்புனு ஒட்டிகிச்சு. ஒரு கமன்ட் போட்டேன்.

"மக்கட் பதர்"

தீரா மாதவராஜ் மாதிரியே எழுதறீங்க. சவுத் சைடு... நல்ல தமிழ். இப்போ தான் அவர் ப்ளாகையும் படிச்சேன்.

கூரியர் ஆட்கள் பத்தி ஒன்னு சொல்லியே ஆகணும். என்னோட எம்.பி.ஏ ப்ராஜக்ட் சென்னையிலிருந்து வந்தது. (எப்படியோ ஐ.ஐ.எம். கனவு கரசிலே முடிந்தது ) எங்க கம்பனியிலே முழு பேர் இருந்தா தான் வாங்குவாங்க. ஷார்ட் பேருலே ( எப்பவும் போல ) கொடுத்திட்டேன். திருப்பி அனுப்பிட்டாங்க. நல்ல வேலை மொபையில் நம்பர் இருந்தாலே, அந்த கூரியர் ஆள் கூப்பிட்டான். நான் வெளியே போய் வாங்கினேன். தேங்க்ச்னு ஒரு இருபது ரூபா கொடுத்தேன். அவன் கண்களில் சந்தோசம். சில சமயம் படிச்ச ஆட்களை விட ( எங்க ரிசப்சனிஸ்டு எப்பவும் யார் கூடையே கடல போட்டுட்டு இருப்பா ) அவீங்க பெட்டர் அண்ணாச்சி. நிலைச்சு நிப்பாங்க ஒரு இடத்திலே.

இன்னொரு விஷயம்... ஆறு மாசம் ஒருக்கா ரெகுலரா ஒரு டென்டிஸ்ட் கிட்டே போவேன். அங்கே வேலை பாக்குறே அக்காவை பார்த்து சிரிப்பேன். தமிழ் தான். நல்ல இருக்கீங்களானு கேப்பேன். ஒரு நாள், சரியான பல் வலி. கருப்பட்டி மிட்டாய் ஊரிலேசாப்டது , கடலை உள்ளே சிக்கிடுச்சு போல. பெங்களூர் வந்து டென்டிஸ்ட் கிட்டே போனா, அவீங்க இல்லே. அந்த அக்கா தான் க்ளீன் பண்ணி வுட்டாங்க. சரி ஆகிடுச்சு. பழக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, க்ளீன் பண்ணாமே பல்லே போயிருக்கும். டாக்டரும் கரக்டா பண்ணுனே சொன்னாங்க.

ஒரு சைகாலஜி புத்தகத்தில் படிச்சேன், யாருக்கு நாங்க சிம்பத்தி கொடுக்கிறோமோ, அவீங்க இன்னும் நல்ல பேர் வாங்கனும்னு நினைப்பாங்களாம் . நீங்க சொன்ன வரிகள், சின்ன புன்முறுவல், நிச்சயம் தேவைங்க!