Friday, March 4, 2011

இன்டர்நெட்டில் துக்ளக்

நெட்டில் சுட்டது.... யாரோ பெயர் தெரியாத பெரும் மனிதர் எழுதியிருப்பார் போல! ( குரங்கு படம் போட்டிருக்கார் டிவிட்டரில் )

ஹாய் தலைவா -

லாங் டைம் ரீடர், பர்ஸ்ட் டைம் லெட்டர் ரைட்டர். உங்க எல்லா எழுத்தையும் தேடித்தேடிப்படிகிறேன். உங்க ப்ளாக்க்கும் நீங்க எழுதின சில நாவல்கள் கட்டுரைகள் தவிர எல்லாத்தையும் வாசிச்சிடுவேன். உங்க ப்ளாக் வந்து நாளுக்கு ஒரெழுத்து வாசிக்காம காலைக்கடனே கிடையாது. நீங்க அப்டேட் பண்ணாத அன்னிக்கு என் பல்ஸ் பப்பலப்பலஸ் ஆகி எகிறீடுது. ஆனா நீங்க சமிபத்தில் துக்ளக்கில் எழுதுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் ஏத்துக்கவே முடியலை! ஏன்?

- வாரணேஷ்
மடகாஸ்கர், ஆப்ரிக்கா

பதில்:

நான் தூங்கி எட்டேமுக்கால் நாள் ஆகிறது. மடகாஸ்கர் கவிஞர் யான்-யோசேப் ரப்பியர்வெலோ (இதை ஜின் ஜோசப் ராப்பியர்வேல் னு தமிழ்ல ஒருத்தர் மொழி பெயர்த்திருக்கார், அவரென்ன ராப்பிச்சையா எடுத்தார்?) எழுதிய கள்ளிச்செடின்ற கவிதைதான் ஞாபகம் வருது. Lepers in finery of flowers. பூந்தோட்டத்தின் ஊடே குஷ்டரோகிகள். ப்ரெஞ்சு காலனிய அடிமைத்தனத்தில் மாட்டியிருந்த மக்களின் நிலையை கவிதை வழியே வலியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் இலக்கிய சூழல் அப்படிதான் இருக்கிறது. குஷ்டரோகிகளுக்கு மத்தியில் ஒரு பூச்செடி. மனம்பிறழ்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பதை போல உணர்கிறேன். என்னுடைய கலகம் காதல் இசை புத்தகம் படித்திருக்கிறீர்களா? என் புத்தகங்களை நானே தெருத்தெருவாக போய் வித்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் கும்பி காட்டி விந்தே வித்துக்கொண்டிருதிருக்கலாம். போன வாரம் இப்படித்தான் ஹமீதுக்கு ஒரு கட்டுரையை மூச்சுவாங்க தட்டச்சிக்கொண்டிருந்தேன். 25 நிமிடத்தில் அடித்து ஹமீதின் இமெயிலுக்கு அனுப்பிவிடவேண்டும். இல்லையானால் இந்த பாலாய் போன தேசத்தில் மின் இணைப்பு அறுந்துவிடும். ஹமீது ஏற்கனவே 78 டெக்ஸ்ட் மெஜேஜ் அனுப்பி இருந்தார். அதை நான் எண்ணிகூட பார்க்கவில்லை. இந்த வேதனையில் ஜோரோவுக்கு முப்பது நிமிசங்கள் தாமதமாய்தான் அதற்காய் ப்ரத்யேகமாய் அமெரிக்காவில் இருந்து தருவித்த உணவளிக்க முடிந்தது. முன்பு ப்ரான்ஸிலிருந்து தருவித்த உணவுகள் ஜோரோவுக்கு ஒத்துக்கொள்வதில்லை. மூன்று நாட்கள் கடுமையான வயிற்றுப்போக்கு, வெட்ரேரியன் தாமஸ் டையக்னோஸ் செய்துவிட்டு ஆர்கானிக் உணவுகளையே ஜோரோவுக்கு வழங்க வேண்டும் என்று ப்ரிஸ்க்ரிப்ஷனும் ஆராயிரத்துக்கு பில்லும் கொடுத்துவிட்டார். என் இலக்கியத்துக்காக ஒரு வாயில்லா பிராணி முப்பது நிமிடங்கள் காலதாமதமாய் உணவருந்த வேண்டியுள்ளது. உங்களுக்கு இது புரிகிறதா? எத்தகைய சூழலில் தமிழ் எழுத்தாளன் வாழவேண்டியுள்ளது என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?

சரி உணவு வைத்துவிட்டு வந்து பார்த்தால் மேசையில் காகிதங்கள் தீர்ந்துவிட்டது. ஒரு குயர் காகிதம் என்ன விலை என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? பல பத்திரிக்கைகளுக்கு எக்ஸிக்யூட்டிவ் கோல்ட் பாண்ட் ஏ4 காகிதத்தில்தான் எழுதி அனுப்பவேண்டியுள்ளது. கையிலோ பணமில்லை. என்ன செய்தேன் தெரியுமா? பழைய வாரப்பத்திரிக்கை, நாளிதழ்களின் ஓரத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதினேன். இந்த கடிதத்தைக்கூட அப்படித்தான் எழுதினேன். இப்படியே 9 நாட்கள் காகிதம் வாங்கக்கூட காசில்லாமல் வீட்டில் இருந்த நாளிதழ்களில் எல்லாம் நுணுக்கி நுணுக்கி எட்டேமுக்கால் நாட்களாய் எழுதி கொண்டிருக்கிறேன். என் கை விரல்கள் கிரணிப்பபழம் போல வீக்கம் கண்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள் நான் ஏன் துக்ளக்கிற்கு எழுதக்கூடாது என்று?

3.4.11

3:39 a.m.

Wednesday, February 16, 2011

பச்சை தீவு

கச்சத்தீவைக் கை கழுவியதால்...?

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் "டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், "விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்'' என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை... இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்'' எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: ""இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.''

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான "டின்பிகா' எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. "டின்பிகா' ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான "உமிரி' போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு - குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், "ராடார்' போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள "பால்மஸ் மியான்ஜஸ்' எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20070510104425&Title=Editorial+Page&lTitle=ர

தினமணிக்கு நன்றி.

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்...

ட்விட்டர் தான் இப்போ எல்லாம்... ப்ளாக் எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது.

Wednesday, September 29, 2010

நெட்டில் சுட்டது

நெட்டில் சுட்டது. இருந்தாலும் விசயங்க ஆங்கிலத்தில் இருந்தாலும், தகவல் அருமை.

1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"

2
Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"

3
Einstein said..
"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.

4
Abraham Lincoln said..
"If friendship is your weakest point then you are the strongest person in the
world."

5
Shakespeare said..
"Laughing Faces Do Not Mean That There Is Absence Of Sorrow!
But It Means That They Have The Ability To Deal With It"

6
Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
But By The Silence Of My Friends".

7
Shakespeare said..
"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"

8
Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"

9
William Arthur said..
"Opportunities Are Like Sunrises, If You Wait Too Long You Can Miss Them"

10
Hitler said..
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"

11
Shiv Khera..
"If We Are Not Part Of The Solutions, We Are The Big Problems"
"Winners Never Do The Different Things, They Do The Things Differently".

12
John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"
+++++++++++++++++++++++++++++++++

Thursday, July 22, 2010

சில ட்விட்டர் கதைகள்

வெள்ளி காலை டொரோண்டோ சென்று வருகிறோம் நானும், தம்பி குடும்பத்தினரும். அம்மாவும் அத்தையும் கூட வருகிறார்கள். வெள்ளி லோகல் சுற்று. மூன்று நாட்கள் ட்ரிப் மட்டும். சனி காலை நயாகரா பால்ஸ் சென்று வருவோம். ஞாயிறு காலை ஒரு சிறு விசேஷம் ... என் மனைவி கசினின் வளைகாப்பு... அத்தை அங்கேயே ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இருப்பார்கள், கசினின் அமமா ( என் அத்தையின் தங்கை ) வந்து செட்டில் ஆகும் வரை. குழந்தைப்பேறு விஷயம் பெரிய கஷ்டம் இங்கு.

அம்மாவிற்கு மீண்டும் ஆறு மாதங்கள் என்ட்ரி ஸ்டாம்ப் கிடைக்கும். வரும் கிறிஸ்தமஸ் அலல்து அடுத்த பொங்கல் சமயம் தான் இண்டியா சென்று வர எண்ணம். இரண்டு வாரம் ட்ரிப்.

தம்பி ஹூஸ்டன் ஏரியாவில் வீடு பார்க்கிறான். ஆயிரத்து ஐநூறு சதுர அடி அபார்ட்மெண்ட் - ரொம்ப ஸேப் , அல்லது இரண்டாயிரம் சதுர அடியில் சிறு வீடு - நல்ல ஏரியாவில் பார்க்க வேண்டும்... வாடகை மாதிரி மாத தவணை கட்டினால் போதும்.

நம்ம இங்கே வீடு வாங்கலைங்க. பெங்களூரில் இருப்பது போதும். ஜனவரியில் கைக்கு வரும். கிருஹபரேவேசம் செய்தவுடன் ஒரு வாரம் இருந்துவிட்டு மீண்டும் திரும்பனும். நண்பர்கள் கூட்டம் ( ரங்கன், சரவணன் ) அங்கு மூவ் செய்வார்கள். :-) ( ஒக்கேவாடா கழுதைகளா.. சொல்லிட்டேன் ) இன்னும் ஓரிரு வருடங்கள் இங்கு வாழ்க்கை. ஒரு அமவுண்ட் மிச்சம் வேறு பண்ணனும். வாழ்க்கைங்க. இப்போ தான் கஷ்ட நஷ்டம் தெரியுது.

தாய் நாடு போல வருமா..... ராமராஜன் பாட்டு ஞாபகம் வருது.

தம்பி வெங்கி பற்றி சில குறிப்புகள் டிவிட்டரில் எழுதினேன். விரிவாக எழுதமுடியலே. அதனாலே ட்விட்டர் வழி தனி வழி.

* Best wishes to Venki & Shanthini wud be getting their new house soon itseems. All the best. They were taking care of Mom for last 3+ months. 34 minutes ago

* People said, online dating fails. My bro Venki made it work. His wife, a BS graduate, doing a part time MBA while working in MIS dept. Love! 36 minutes ago

* Venki, my bro is so thorough in computer biz & systems, certified MCSE etc he was able to land in a Sys Admin job in few wks after landing. 38 minutes ago

* My bro Venki Diploma, plus part time BE guy, Dindigul computer center owner married Shanthini whom he dated online. Wrote n blog. God Bless! 40 minutes ago

* My bro Venki married Shanthini who was born in Houston, to Tambram parents from Andhra, living in Atlanta. Happy National integration here 42 minutes ago

Saturday, July 10, 2010

டிவிட்டரில் என் வாழ்க்கை

டிவிட்டரில் என் வாழ்க்கை சில மெச்செஜ்களில்

ரொம்ப நாளா ஒண்ணுமே எழுதலை. அதனாலே டிவிட்டரில் எழுதினேன்.

தமிழ் சங்க விழாவிற்கு போகலே. கூட்டம் குறைவுன்னு கேள்வி.

மூன்று மாதங்கள் சென் பிரான்சிஸ்கோ ப்ரோஜக்ட் கஷ்டப்படுத்தும். வால் ஸ்ட்ரீட் ப்ரோஜக்ட் மீதும் ஆரம்பிக்கிறது, இன்னுமிரண்டு மாதங்களில்.

ஸ்டான்போர்ட் உனிவர்சிடியில் ஒரு சம்மர் கோர்ஸ், மார்கெடிங் லீடர்ஷிப், நான்கு வாரங்கள் ஆகஸ்ட் மாதம் முழுதும் எடுக்கிறேன்.




  1. I have to take MIL & FIL around 3 evenings in SFO area. Friday morning I would take them to Napa Valley area before taking PM flight. Hope!
  2. Got a furnishd 1 BR apt. in SFO close to work for $819 nothing extra. good deal. found on rent.com also rentng car in SFO airport @ 25% off
  3. hopefully mom shud get a fresh 6 months stay at border. she will fly back to Houston when MIL returns. hopefully weathers comes out OK there
  4. brother has got his driving license. happy guy with a job in Houston. doing sys admin work under another Desi. helpful. getting good timeoff
  5. Trvl pln. NJ to Toronto - Fri early AM - st. Via Niagara Falls (2 hrs) 9 hrs drv. Start bk Monday and rching night. Shud be OK with 2.5 days
  6. since coming to US in Oct, wife has taken 3 days leave only. Allowed 10. So if they permit 3 days off, might stay in Canada for 1 more day.
  7. My bro, his wife along with Mom, me, my wife and MIL are driving to Toronto in 2 wks. Visa proc taken care. Tkng 2 days off. work on road :)
  8. FIL expected to come again in 3 months and stay till Christmas. All for good things happening. Wife got a new project till nxt May. Nd leave
  9. MIL will get 6 more months stay here, fro Aug. 1 yr without going to India. reasonable. helps us.. extnd the medical ins. Poor FIL trvls bk
  10. FIL leaves for India Sat evening via Mumbai to Madurai. rchs Mon afternoon. MIL extnding stay.. goes to her nieces place in Toronto for 1 mn
  11. wife has to call her friend to come 2 stay with her Mon night to Thurs. Tough life. Though neighbor is Tamil, need extra protection. Plans..
  12. Hectic travel sched. nxt wk FIL goes back. came twice to NJ already. Taking for tour 2 SFO w MIL. wife stays alone - rch bk Fri night only
  13. was browsing some blogs. this Jeyamohan meet thing was written very poorly by this chap. http://manisscribblings.blogspot.com/2010/06/1.html
  14. hm.. @sureshgounder forcing me to tweet. I am in internal USA timelag, reaching home at 7.30 AM EST, taking the redeye. Woke up now.

Wednesday, June 23, 2010

அனாலாக் கம்ப்யுடர் ஆபிஸ்

இதை பாருங்கள். நன்றாக சிந்தியுங்கள். ரசியுங்கள்.

அனாலாக் கம்ப்யுட்டர் ஆபிஸ் - எப்படி கம்ப்யுட்டர் நடந்துகொள்கிறது என்று...